Wednesday, March 30, 2011

kavalan movie stills



















விஜய், விக்ரம், விஷாலை இணைக்கும் மணிரத்னத்தின் புதிய படம்!

விஜய், விக்ரம், விஷாலை இணைக்கும் மணிரத்னத்தின் புதிய படம்!

தொடர் தோல்விகளால் துவண்டிருந்த விஜய் காவலனின் வரவேற்பால் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கிறார். காவலன் வெற்றியுடன், ஷங்கர் 3 இடியட்ஸில் அவருக்கான சீட்டை கன்பார்ம் செய்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்திருக்கிறார். எது எப்படியோ அவரது ரசிகர்களின் பிபியை மேலும் ஏற்றப்போகும் செய்தி இது. ஆம்..
எல்லா மொழிகளிலும் பல ஹீரோக்கள் சேர்ந்து நடிப்பது நடந்து வருகிறது ஆனால் தமிழில் மட்டுமே அது கை கூடாத நிலை. ஒவ்வொருவருக்கும் தனித்தனி ரசிகர் கூட்டம் என்பதால் இவர்கள் சேர்ந்து நடிப்பதே இல்லை.
ஒரு காலத்தில் அஜித்தும் விஜய்யும் சேர்ந்து நடித்தார்கள், ஆனால் இன்று அது சாத்தியமே இல்லை என்பதே நிதர்சனம். இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு நல்ல துவக்கத்தைத் தந்தவர் அஜித். மங்காத்தா மூலம் மல்ட்டி ஸ்டார் படம் என்ற பேருடனேயே ஆரம்பிக்கப்பட்ட படம். அதில் நடிகர்கள் இன்று வரை சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் இன்னும் ஒரு மல்ட்டி ஸ்டார் படம் வரப்போகிறது. இதற்காக தீவிரமாக திரைக்கதை உருவாக்கத்தில் இருக்கிறார் மணிரத்னம். இந்தப்படத்தில், விஜய், விக்ரம், மற்றும் விஷால் நடிக்க இருப்பதாக செய்திகள் வட்டாரம் சொல்கிறது. மற்ற அனைத்து டெக்னிக்கல், நடிகர்களுக்கான தேர்வும் நடந்து வருவதாக சொல்கிறார்கள். விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வரும்.

kavalan super HIT comedys


Tuesday, March 29, 2011

போராட்டத்தில் குதிக்கும் விஜய் :அரசியல் அதிரடி.


இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக "காவலன்" படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் விஜய். அடுத்தபடியாக "வேலாயுதம்", "நண்பன்" படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.

சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.

அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

விஜய்யின் அரசியல் விவகாரம் : சத்யராஜுக்கு கண்டனம்

விஜய்யின் அரசியல் விவகாரம் :  சத்யராஜுக்கு கண்டனம்


சிவாஜி சமூக நலப் பேரவை தலைவர் கே.சந்திரசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’நேற்று முன்தினம் 14-ந்தேதி நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேசிய நடிகர் சத்யராஜும். கமலா தியேட்டர் அதிபர் வி.என். சிதம்பரமும், நடிகர் திலகம் சிவாஜி கணேசனைப் பற்றி தவறான தகவலைக் கூறியுள்ளனர்.

நடிகர் விஜய் அரசியலுக்கு வரும் விஷயம் குறித்து கருத்துத் தெரிவித்த போது அரசியலில் சிவாஜி தோற்றவர், எனவே அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வரக் கூடாது என்று நடிகர் திலகம் சிவாஜி பற்றி அவதூறாகப் பேசியுள்ளனர். 
இது மிகவும் கண்டிக்கத் தக்கதாகும். மேடையில் உள்ளவர்களைப் புகழ வேண்டும் என்று நினைத்தால் எது வேண்டுமானாலும் புகழ்ந்து கொள்ளட்டும். ஆனால், மறைந்த நடிகர் திலகம் போன்றோரை வீணாக வம்புக்கு இழுத்தால் லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்கள் கொதித்தெழுவார்கள்.

பெரியார், அண்ணா, காமராஜர் காலத்திலிருந்து அரசியலில் ஈடுபட்டு பலரை ஆளாக்கியவர், உருவாக்கியவர் சிவாஜி. அவர் ஒரு தேர்தலில் தான் தோல்வியடைந்தாரே தவிர அரசியலில் தோற்கவில்லை. 

அப்படி அவர் அரசியல் தோற்றவராக இருந்தால், தேர்தல் தோல்விக்குப் பிறகு, இந்தியாவை ஆண்டு கொண்டிருந்த ஒரு கட்சியின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார்.

திரையுலகிலும் சரி, அரசியல் உலகிலும் சரி, இவரால் பயனடைந்தவர்கள் பலர். யாரையும் அழிப்பது, கவிழ்ப்பது போன்ற சூது வாது தெரியாதவர் சிவாஜி. திரையில் நடிகர் திலகமாக ஜொலித்த சிவாஜிக்கு அரசியல் மேடையில் நடிக்கத் தெரியாது. தான் சம்பாதித்த பணத்தில் கட்சி நடத்தியவர்.

அவரை முன்னுதாரணமாகக் கொண்டு அரசியலுக்கு வந்தாலே அரசியல் ஒரு சாக்கடை என்ற அவப் பெயர் நீங்கும். ஆனால், வெற்று விளம்பரங்களையும், வாய்ச் சவடால் பேச்சுக்களையும் நம்பும் சத்யராஜ், போன்றவர்களுக்கு வேண்டுமானால் இது தவறாகத் தோன்றலாம்.

ஆனால், எங்களைப் போன்ற லட்சோபலட்சம் சிவாஜி ரசிகர்களுக்கும், அரசியலைக் கூர்ந்து நோக்கும் நடுநிலையாளர்களுக்கும் இந்த உண்மை தெள்ளத் தெளிவாகத் தெரியும்.

மேடையில் வீராவேசமாகப் பேசிவிட்டு, வீட்டுக்குள் பதுங்கிக் கொள்ளும் நடிகர் சத்யராஜ் போன்றோருக்கு, உள்ளதைச் சொல்வேன், சொன்னதைச் செய்வேன், வேறொன்றும் தெரியாது என்று திரையில் மட்டுமல்ல, சொந்த வாழ்க்கையிலும் வாழ்ந்து காட்டி மறைந்த எங்கள் நடிகர் திலகம் பற்றி குறை கூறுவதற்கு எந்த அருகதையும் கிடையாது.

இனியும் அவ்வாறு தெரியாமல் அவதூறாகப் பேசினால், நடிகர் திலகம் சிவாஜி சமூக நலப் பேரவை அவர்களக்கு எதிராக போராட்டம் நடத்தும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்

விஜய்க்கு அரசியல் வேணாம்! எஸ்.ஏ.சி.க்கு ஒரு அட்வைஸ்!!

Sattapadi Kutram movie audio launch news
நடிகர் விஜய் நடிகராகவே இருக்கட்டும்; அவருக்கு அரசியல் எல்லாம் வேண்டாம் என்று விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரனிடம், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியார் கேட்டுக் கொண்டார். ஆளும்கட்சியின் அக்கிரமங்களை சொல்லியிருக்கிறேன் என்ற பப்ளிசிட்டியுடன் உருவாகியிருக்கும் சட்டப்படி குற்றம் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. ஜெயலலிதா வருகிறார்... விஜயகாந்த் பேசுகிறார்... விஜய் பெறுகிறார்... என்றெல்லாம் வெளியான ஓவர் பில்ட்அப்-ஐ புஸ்ஸ்ஸ் ஆக்கிவிட்டு விழா நடந்தாலும் காரசாரமான பேச்சுக்கு பஞ்சமில்லாமல் இருந்தது.
மேடையேறிய பலரும் விஜய் கண்டிப்பாக அரசியலுக்கு வர வேண்டும் என்று பேசினார்கள். குறிப்பாக டைரக்டர் சீமான் பேசும்போது, விஜய் மாதிரி நல்லவங்களை ஏன் அரசியலுக்கு வரக் கூடாதுன்னு தடுக்கிறீங்க? அவர் வரலைன்னா மொள்ள மாரிகளும், முடிச்சவிக்களும்தான் அரசியலுக்கு வருவாங்க. நல்லவங்க ஒதுங்கி போறதுதான் கெட்டவங்களுக்கு வசதியா போவுது, என்று ஆவேசம் பொங்க குறிப்பிட்டார். கே.டி.குஞ்சுமோன், செல்வமணி உள்ளிட்டோரும் தன் பங்குக்கு விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி.யை உசுப்பி விட்டார்.
ஆளாளுக்கு விஜய் அரசியலுக்கு வரணும் என்று பேசிக் கொண்டிருக்கும்போதே வித்தியாசமான ஒரு குரல் ஒலித்தது. விஜய்யின் அரசியல் பிரவேச திட்டத்திற்கு எதிராக ஒலித்த அந்த குரல், கமலா தியேட்டர் அதிபர் சிதம்பரம் செட்டியாருடையது. தனது 18 ஆண்டுகால நண்பர் எஸ்.ஏ.சி.,க்கு அ‌ட்வைஸ் செய்யும் வகையில் அவர் பேசினார். ஒரு விஷயத்தை சொன்னா சார் கோவிச்சுக்கக் கூடாது. நீங்க கட்சி ஆரம்பிங்க. எலக்ஷன்ல நில்லுங்க. அது உங்க விருப்பம். ஆனால் விஜய்க்கு இதெல்லாம் வேணாம். ஏன்னா, இப்படிதான் சிவாஜி சார் கட்சி ஆரம்பிக்கணும்னு சொன்னப்போ நான் வேணாம்னு தடுத்தேன். அவரு கேட்கல. கடைசி காலத்துல எங்க வீட்டுக்கு எந்த அரசியல்வாதியும் வரக் கூடாதுங்கற அளவுக்கு வெறுத்து போயிருந்தார். அதனால்தான் சொல்றேன். விஜய் நல்ல நடிகர். ஹாலிவுட்ல நடிக்கிற அளவுக்கு அவர் வளரணும், என்று எதிர்ப்பை பதிவு செய்தார் சிதம்பரம். அவரது இந்த பேச்சு மேடையில் இருந்த சிலரையும், எதிரே இருந்த பலரையும் யோசிக்க வைத்தது என்னவோ உண்மைதான். ஆனால் மகனை அரசியல் களமிறக்கி ஆதாயம் தேட நினைக்கும் எஸ்.ஏ.சி. முகத்தில் ஈயாடவில்லை.
நிகழ்ச்சியில் எஸ்.ஏ.சி. பேசுகையில், சட்டப்படி எதெல்லாம் குற்றம் என்று பிரித்து மேய்ந்தார். ஐம்பது லட்ச ரூபாய் செலவு செய்து தேர்தலில் ஜெயித்துவிட்டு ஐநூறு கோடி ரூபாய் கொள்ளை அடிப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? ஊரில் உள்ள காதலர்களையெல்லாம் போலீஸ் ஸ்டேஷனில் சேர்த்து வைக்கிற போலீஸ் அதிகாரி தன் மகள் லவ் பண்ணினால் அவர்களை பிரிக்க நினைப்பது சட்டப்படி குற்றமா, இல்லையா? என்று அடுக்கடுக்காக கேட்டவர், இந்த படத்தை பார்க்காமல் இருந்தால்தான் சட்டப்படி குற்றம் என்று முடித்தார்.

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்  
இன்று விஜய்யின் முதல் அரசியல் பொதுக் கூட்டம் அரங்கேறுகிறது. மீனவர்கள் பெயரால் நடத்தப்படும் இந்தக் கூட்டத்துக்கு விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை கொலை செய்வதும், தாக்குவதும், உபகரணங்களை களவாடிச் செல்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. புறநானூற்றுப் படையே புறப்பட்டு வா என சினிமாவில் வீர வசனம் எழுதும் தலைவர்கள் டெல்லிக்கு தந்தி அனுப்புவதோடு தங்களுடைய புறநானூற்று வீரத்தை பெட்டிக்குள் பூட்டிவிட்டார்கள். மீதமிருக்கும் உதி‌ரிகள் அவ்வப்போது சவுண்ட் விடுவதோடு ச‌ரி. விஜய் போன்ற ஆளும் கட்சியால் கட்டம் கட்டப்பட்டவர்களுக்கும் மீனவன்தான் பாதுகாப்பு கேடயம்.

இன்று விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் விடிபி கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடக்கிறது. மீனவன் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம். விஜய்யும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் அரசியல் கட்சிகளும் இந்த பொதுக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

விஜய் அரசியல் அதிரடி.

போராட்டத்தில் குதிக்கும் விஜய் :அரசியல் அதிரடி.


;
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது மற்றும் கொல்லப்படுவதை கண்டித்து, இம்மாதம் 22ம் தேதி நாகையில் விஜய் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
பல்வேறு பிரச்சனைகளை கடந்து ஒருவழியாக “காவலன்” படத்தை ரிலீஸ் செய்து, அதில் வெற்றியும் பெற்றுவிட்டார் விஜய். அடுத்தபடியாக “வேலாயுதம்”, “நண்பன்” படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அதேசமயம் தமது அரசியல் ரீதியான பணிகளிலும் அவ்வப்போது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் கூட காவலன் பட டிரைலர் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு 50கிலோ இலவச அரிசி மூட்டைகளை வழங்கினார் விஜய். இந்நிலையில் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போகிறார் விஜய்.
சமீபத்தில் நாகை மீனவர் ஜெயக்குமார், இலங்கை கடற்படையினரால் கொல்லப்பட்டார். இதற்கு நாடுமுழுவதும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து பல்வேறு கட்சிகள் இறந்த மீனவர் குடும்பத்தினருக்கு நிதியுதவிகள் செய்து வருகின்றனர். தமிழக அரசு சார்பில் மீனவர் ஜெயக்குமாரின் மனைவிக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பா.ஜா. மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ், மீனவர் ஜெயக்குமாரின் குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதல் கூறி ரூ2.லட்சத்திற்கான காசோலையும் வழங்கினார்.
அரசியல் தலைவர்களை தொடர்ந்து விஜய்யும், வருகிற பிப்ரவரி 22ம்‌ தேதி மீனவர் ஜெயக்குமார் குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறார். அத்துடன் இலங்கை கடற்படையை கண்டித்து ஆர்ப்பாட்டமும் செய்யவுள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்தில் விஜய், அவரது அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட ஏராளமானபேர் கலந்து கொள்கின்றனர். இதனை திருச்சி, நாகை மாவட்ட விஜய் ரசிகர் தெரிவித்துள்ளனர். விஜய்யின் வருகையை முன்னிட்டு அவரது ரசிகர்கள் தடபுடலான ஏற்பாடுகளை செய்து வருகின்றன

Dhanush-in Mappillai

Dhanush-in Mappillai - Mani Sharma

Dhanush-in Mappillai - Mani Sharma

Dhanush-in Mappillai Tamil Movie, Dhanush-in Mappillai Songs Free Download Music By Mani Sharma - Dhanush-in Mappillai

Featuring : Dhanush, Hansika Motwani, Manisha Koirala, Vivek

Production : Sun Pictures
Starring : Dhanush, Hansika Motwani, Manisha Koirala, Vivek
Director : Suraj
Lyrics : Pa. Vijay, Viveka & Snehan

Aaru Padai - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Vijay Yesudas & Mukesh

Love Love - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Rahul & Rita

Onnu Rendu - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Mukesh & Saindhavi

Ready Readya - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Saindhavi

Ennoda Rasi - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith, & Chorus

Ready Readya Re-mix - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Chorus

Mappillai Theme - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Ranjith & Chorus




Dhanush-in Mappillai (2011)

Dhanush-in Mappillai (2011)

Friday, March 25, 2011

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam - Yuvan Shankar Raja

Vaanam Tamil Movie, Vaanam Songs Free Download Music By Yuvan Shankar Raja - Vaanam

Featuring : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Saranya

Production : VTV Productions
Starring : Silambarasan, Bharath, Anushka Shetty, Prakash Raj, Saranya
Director : Krish
Lyrics : Na. Muthukumar, Silambarasan & Yuvanshankar Raja

Evandi Unnae Paethan

Download Add to Playlist
Singer(s) : Simbu Silambarasan, Yuvan Shankar Raja

Cable Raja - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Abhishek & Lawrence

Who I Am Who I Am- VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Benny Dayal

No Money No Honey - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : STR, Andrea & Srikanth Deva

Vaanam - VmusiQ.Com

Download Add to Playlist
Singer(s) : Yuvan Shankar Raja


விஜய்யின் காவலன் சாதனை-ரெட்ஜெயன்ட் மூவிஸ் வெளியீடு!

இளைய தளபதி விஜய், அசின், வடிவேலு, ராஜ்கிரண், ரோஜா ஆகியோர் நடித்துவரும் படம் காவலன். இது சித்திக் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 2-வது படம். அசின் நடித்துள்ளதால் விஜய் படத்தைப் புறக்கணிப்போம் என்று தமிழ் உணர்வாளர்கள் ஒரு பக்கமும், சுறா நஷ்டத்தை ஈடு செய்யாத விஜய்க்கு காவலன் படத்தில் ஒத்துழைப்பு தரமாட்டோம் என திரையரங்க உரிமையாளர்களும் கொடிபிடித்தது அனைவரும் அறிந்ததே.
காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை மிக அதிக விலைக்கு விற்கப்பட்டுள்ளது. தந்த்ரா பிக்சர்ஸ் இந்தப் படத்தை ரூ.6 கோடிக்கு வாங்கியுள்ளது. விஜய் படங்களிலேயே அதிக விலைக்கு ஓவர்ஸீஸ் ரைட்ஸ் விற்கப்பட்டிருப்பது காவலனுக்குத்தான் என்கிறார்கள்.
மலையாளப் படமான பாடிகார்டின் ரீமேக்தான் இந்த காவலன். இந்தப்படத்தின் கேரள உரிமை ரூ 1.25 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. தமீன்ஸ் பிலிம்ஸ் வாங்கியுள்ளது.
தமிழகத்தில் “காவலன்” படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடும் என்று கூறப்பட்டுவந்த நிலையில், தற்போது ரெட்ஜெயன்ட் மூவிஸ் மிகப்பெரிய தொகைக்கு காவலனை வாங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம்

காவலன் - விஜய் -ன் புதிய பரிமாணம் - சினிமா விமர்சனம்

http://www.songs4u.net/wp-content/uploads/2011/01/Kavalan-2010.jpg
காலமெல்லாம் காதல் வாழ்க படத்தின் ஒன்லைன் தான் காவலன் கதையும்,
ஆனால் வித்தியாசமாக திரைக்கதை அமைத்து காமெடியை காதல் உணர்வில்
கலக்கி சித்திக் மீண்டும் வெற்றி பெற்று இருக்கிறார்.

ஒரு ஆக்‌ஷன் ஹீரோவாக பரிமளித்த பின்னும், மாஸ் ஓப்பன் உள்ள ஒரு ஹீரோ இந்த மாதிரி காமெடி கம் காதல் கதையில் நடிக்க ஒத்துக்கொண்டதும்,தனது புதுமையான நடிப்பினை வெளிப்படுத்தி மனம் கவர்ந்ததும் விஜயை பாராட்ட வைக்கிறது.

தொடர்ந்து 6 தோல்விப்படங்கள் கொடுத்த அயர்ச்சி, அரசியல் கட்சி
ஆரம்பிக்கலாமா? வேண்டாமா? என்ற குழப்பம், இந்த சாஃப்ட் சப்ஜெக்ட்டை
ரசிகர்களும் ,மக்களும் ஏற்றுக்கொள்வார்களா என்ற தயக்கம் இதெல்லாமே
விஜய் -ன் முகத்தில் ஏற்றுக்கொண்ட கேரக்டரின் தன்மையை மீறி
தெரிவதும், அவரது முகத்தில் ஒரு டல்னெஸ் தெரிவதும் வருத்தம் தரக்கூடிய
மாற்றம்.

ஆனால் இதெல்லாம் படத்தின் இடைவேளை வரைதான்.
கதையின் ஜீவனாக விளங்கும் படத்தின் பின் பாதியில் விஜய் -ன்
கலக்கலான நடிப்பு பார்ப்பவர்களை வியக்க வைக்கிறது.அது வரை
வடிவேலுவும், இயக்குநரும் படத்தை தாங்கி நிற்பதும், அதற்குப்பிறகு
விஜய் தூண் மாதிரி நின்று படத்தை காப்பாற்றுவதும் ரசிக்க வைக்கும்
ஆரோக்கியமான போட்டி.
http://pirapalam.net/wp-content/uploads/2010/08/Kaavalkaran-On-Location-4.jpg
வடிவேலு வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட கேரக்டர்தான் என்று தெரியாத
வண்ணம் அவருக்கு புத்திசாலித்தனமாக காட்சிகளை ஒதுக்கி இருக்கிற
விதம் அழகு.பஸ் கூட்டத்தில் முன் பின் தெரியாத பெண்ணின் மடியில்
அமர்வது..காந்த டிரஸ் போட்டு இரும்புக்குண்டினால்  முக்கிய இடத்தில்
அடி வாங்குவது.,என வடிவேல் கேப் கிடைக்கிற இடத்தில் எல்லாம்
பொங்கல் வைக்கிறார்.

அசினின் அப்பாவாக வரும் ராஜ்கிரண் கண்ணியமான ,கச்சிதமான நடிப்பு.
அசினுக்கு அம்மாவாக ரோஜா வருவது காலத்தின் கட்டாயம்.ஆரம்பக்காட்சிகளில் ரோஜா விஜய்யை தேவை இல்லாமல் கண்டிப்பது.. டீஸ்  செய்வது தேவை அற்ற தெனாவெட்டு..( விஜய் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்ப்பைப்பெறும் அளவு அவருக்கு ஓவர் இடம் கொடுத்தது இயக்குநரின் தவறு)

அசினின் தோழியாக வருபவர் நல்ல ஃபிகர்தான். அவர் வரும் காட்சிகளில்
துப்பட்டாவை போனால் போவுது போட்டுக்கலாம் என்பது போல்
அலட்சியமாக உடுத்தி இருப்பதை வன்மையாக பாராட்டுகிறேன்.. ( ஹி ஹி )
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjNAfhzVws5eeSuDlPwmK5sJQssOKnfqr6HBtkQjYtUNqE8L4N5qYdQvLNIQAx37UagowMWJ1UsbxYyhH0CqdfA8n-jiAcoFT7OhKBygmt3bAOSM7A2hRMOAIlWty6k7p-roOVr5qKvL4w/s1600/vi-18-09-2010-350.jpg a
படத்தின் ஓப்பனிங்க் பாட்டான விண்ணைக்காப்பான் ஒருவன்,,பாட்டில் விஜய் -ன் டான்ஸ் வழக்கம் போல் கலக்கல்.அதேபோல் ஓப்பனிங்க் பாக்சிங்க் ஃபைட்டில் அவரது ஆக்ரோஷம் அப்ளாஸ் அள்ள வைக்கும் நடிப்பு.

டான்ஸ் மாஸ்டரை காலேஜை விட்டு துரத்தி விட்டு விஜய் டான்ஸ்
பிராக்டீஸ் தருவது செமயான சீன் தான். ஆனால் அந்தக்காட்சியில் விஜய்
இன்னும் நல்லா பண்ணி இருந்திருக்கலாம்.( வாடி வாடி கை படாத சி டி பாட்டு
 டான்ஸ் மாதிரி அந்தப்பாட்டை கலக்கல் ஹிட் ஆக்கி இருக்க வேண்டியதை
ஹேர் இழையில் தவற விட்டு விட்டார்கள்.)

அசினின் நடிப்பில் பழைய நளினம் மிஸ்ஸிங்க்.கஜினி ஹிந்தி படத்துக்குப்பிறகு  அவரிடம் பழைய துள்ளலை பார்க்க முடிய வில்லை.இருந்தாலும் கதையின்  தன்மையும், கேரக்டரின் போக்கும் அந்தக்குறை பெரிய அளவில் தெரியாமல்  மறைத்து விடுகிறது.
http://www.4tamilmedia.com/ww5/images/stories/cinema/kavalan.jpg
காமெடியில், செண்ட்டிமெண்ட்டில் வசனகர்த்தா கலக்கிய இடங்கள்

1. ராஜ் கிரண் - நம்பிக்கைக்கு உரியவன் எதிரியா இருந்தாலும் மன்னிப்பேன்.
ஆனா நம்பிக்கை துரோகி நண்பனா இருந்தாலும் மன்னிக்க மாட்டேன்.

2. பேர் வைக்கிறவன் குணம் தான் குழந்தைக்கு வரும்..

3. பலம் பலவீனத்தை அடக்கி ஆள்றது நாட்டுக்கு ஒத்து வராது,காட்டுக்குத்தான் அது சரி .அன்பாலதான் எதிரியை ஜெயிக்கனும்.

4. இனிமே டியூட்டிங்கற போர்வைல லேடீஸ் டாய்லெட் இருக்கற பக்கம் போவியா?

உங்க அனுமதி இல்லாம போகமாட்டேங்க எங்கேயும்.
.
சரி சரி போ..

எங்கே ?லேடீஸ் டாய்லெட்டுக்கா?

5. காலேஜ் புரொஃபசர் லிவிங்க்ஸ்டன் - எப்போ பாரு இவன் லேடீஸ் டாய்லெட் பக்கமே போறானே.. அப்படி அங்கே எனதான் இருக்கும்?நாமும் போய் பார்ப்போம்..

6. வடிவேல் - பார்வதி நம்பியார்னு சொல்றியே.. அது யாரு?

ஹய்யோ.. அது பார்வதி நம்பியார் இல்லை.. பிரைவேட் நெம்பர்.

7. விஜய் - நான்சென்ஸ்.. ஸ்டுப்பிட்

வடிவேல் - கூப்பிட்டீங்களா? பாஸ்?

விஜய் - இல்லை.. உன்னை திட்டுனேன்..

8. வடிவேலுவின் ஃபிகர் - பாடிகார்டு இப்போ யூனிஃபார்ம் போடல..


வடிவேல் - உனக்கு எப்படி தெரியும்?


ரூம்ல எட்டிப்பார்த்தேன்.

பாத்துட்டியா?எவ்வளவு தைரியம் இருந்தா அதை என் கிட்டேயே வந்து சொல்வே?


9. நல்லா வேலை செய்யறதால ஓனர் அவளை எப்பவும் பிரக்னெண்ட்டா வெச்சிருக்காரு..


என்னது?இங்கிலீஷ் தெரியலைன்னா பரவால்ல ,அதை கொலை பண்ணாதே.. பர்மணண்ட்டா வெச்சிருக்காரு.

10. எதுக்குடா அடி வாங்குனே?

நான் என்ன அமவுண்ட் குடுத்தா வாங்குனேன்?

சரி எத்தனை பேர் அடிச்சாங்க?

 கவுண்ட் பண்ண எல்லாம் டைம் இல்ல.

11. டாக்டரை பார்க்கப்போறேன்.

அவர் பேர் என்ன?

அது  அது.. வந்து பேர் தெரியாது.. ஆனா அவரை நான் டாக்டர் டாக்டர்னுதான் கூப்பிடுவேன்.

12. இப்போதான் முத தடவையா என் காதலியை பார்க்கப்போறேன்.

அவ அழகா இல்லைன்னா?

அழகுங்கறது கண்ணுக்குத்தானே.. மனசுக்கு இல்லையே?
http://reviews.in.88db.com/images/kaavalkaaran/kavalan-Latest-Movie-Stills-4.jpg
13. நீதான் அவ கூட சண்டை போட்டுக்கிட்டியே.. மறுபடி அவ கூப்பிடுவான்னு எப்படி நம்பறே..?

உண்மையான காதல் இருந்தா கண்டிப்பா கூப்பிடுவா..

14. ஆசைப்பட்டு அடையறதுக்கு இது பணம் இல்ல. குணம்.பிறப்புலயே வர்றது.

15. அசின் -டெயிலி யூனிஃபார்ம் போட்டுட்டு வர்றியே ,நீ என்ன எல் கே ஜி யா?

விஜய் - ஹி ஹி


வடிவேல் - அப்போ நீ எல் கே ஜி மாதிரி பெரிய பெரிய் படிப்பெல்லாம் படிச்சிருக்கிறியா? சொல்லவே இல்ல..

16. விஜய் -அயன்பாக்ஸ்ல சூடு பட்டதுல என் பேண்ட்ல ஓட்டை விழுந்திடுச்சு,

வடிவேல் -எனக்கு ஒரு டவுட், அயன்பாக்ஸ் ஒண்ணுதான் இருக்கு, ஆனா ஓட்டை 2 இருக்கே.. எப்படி?

17. ஃபோன் அவருது.. டோன் என்னுது..

என் லவ்வர் உனக்கு எதுக்கு ஃபோன் தரனும்?

18. ஆசைப்பட்டு ஆட்டையைப்போட்டிருந்தாலும் பரவால்லை,ஓட்டையை போட்டுட்டியே பேண்ட்ல..

19. தேவை இல்லாம தேரை இழுத்து தெருவுல விட்டது நீதானா..?

20. குள்ள அமிதாப் - என் உயரத்துக்கு இந்த மலர் மாலை ஆர்ச் மாதிரி இருக்கு..பூச்செண்டு இவ்வளவு பெருசு எதுக்கு?என் சைஸுக்கு ரோசாப்பூவே அதிகம்.

21. அவன் யாரு?     பாடிகாட்.


நீ யாரு?                       அவனுக்கு ஜோடிகாட்

22. நம்பறவங்களை அவன் சந்தேகப்பட மாட்டான்,ஏமாத்தவும் மாட்டான்.

23. வடிவேலுவின் ஆள் - நாங்க யாரும் பாடிகாட்டை முழுசா பார்த்ததில்லை.

வடிவேல் - நீ எதுக்கோசரம் அவனை அந்த கோலத்துல பாக்கனும்?

ஹய்யோ அவன் முகத்தை சொன்னேங்க..
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEis3ZxRvHY7fT4UA3y8RIlju5v7_w4jijWjf_5Z2u49UqCiJvEK1_k0UroOb0UjURXnuwR77ScwXNvtXSGAJyuODighfhEqWlNLT5F87zjaNap4t7MdAtbodQRcVZ1TylJe2H67daA42H0/s1600/kavalan16.jpg
யாரது? யாரது? பாட்டு நல்ல மெலோடி.பட்டாம்பூச்சி பாட்டில் விஜய் ஏன் எண்ணெய் வழிந்த முகத்தோடு வர்றார்னு தெரியல.

கண்ணுக்குள் நிலவு படத்துக்குப்பிறகு விஜய் இந்தப்படத்தில் இதுவரை காட்டாத பல ஃபேஸ் எக்ஸ்பிரஸ்ஸன்சை காட்டி கலக்கி விட்டார்.இந்தப்படத்தின் வெற்றி அவருக்கு புதிய தெம்பைத்தந்து தொடர்ந்து வித்தியாசமான கேரக்டர்கள் செலக்ட் பண்ண அடிகோலும் என எதிர்பார்க்கலாம்.

இந்தக்கதையில் ஆக்‌ஷன்,காமெடி இல்லாமல் முழு நீள காதல் படமாகவும் எடுத்திருக்கலாம்.. ஆனால் செக்யூரிட்டிக்காகவும்,கமர்ஷியல் காம்ப்ரமைஸூக்காகவும் அதை எல்லாம் மிக்ஸ் பண்ணி இருக்கிறார்கள். 

இந்தப்படத்தில் விஜய்க்குப்பஞ்ச் டயலாக்ஸே இல்லை.குடும்பத்துடன் காண வேண்டிய காதல் கம் காமெடி ஃபிலிம்.

ஏ செண்ட்டர்களில் 75 நாட்கள், பி செண்ட்டர்களில் 50 நாட்கள், சி செண்ட்டர்களில் 25 நாட்கள் ஓடலாம்.

எதிர்பார்க்கப்படும் ஆனந்த விகடன் மார்க் - 45

எதிர்பார்க்கப்படும் குமுதம் ரேங்க் - நன்று.

டிஸ்கி - இது ஒரு மீள் பதிவு..காரணம் திடீர்னு இந்த போஸ்ட்டையே காணோம்.என் பிளாக் பாஸ்வோர்டு எனக்குக்கூட அப்பப்ப மறந்துடுது.. சிலர் எப்படியோ கண்டு பிடிச்சு உள்ளே வந்து என்னென்னவோ பண்ணிடறாங்க..ம் ம்.

நான் யார் வழிலயும் குறுக்கிடறதில்லை.. மீறி என் வழில யாராவது குறுக்கிட்டா....ஹி ஹி ஒதுங்கி போயிடுவேன்.. அல்லது  ரிட்டர்ன் பேக் தான்..ஹா ஹா ( நம்மாலயே முடியல.. எதுக்கு பஞ்ச் டயலாக்?)

விஜய்க்கு காவலன் திட்டமிட்ட வெற்றி தருமா…?

விஜய்க்கு காவலன் திட்டமிட்ட வெற்றி தருமா…?

சில, பல தோல்விகளுக்கு பின் விஜய் திட்டமிட்டு தந்திருக்கும் வெற்றி படம்தான் "காவலன்"!
அந்த ஏரியாவிலேயே ‌பெரிய மனிதர் ராஜ்கிரண். ஒருகாலத்தில் அடிதடி வம்பு, வழக்குஎன தாதாவாக வாழ்ந்த அவர்,  ஒரு நம்பி‌க்கை துரோகியை தீர்த்து கட்ட பக்கத்து ஊருக்குவரும் பொழுது பிரசவலியால் துடிக்கும் ஒரு தாயையும், சேயையும் காப்ற்ற செய்கிறார்.அவராலேயே பெயர் சூட்டப்படும் அந்த சேய், வளர்ந்து பெரியவன் ஆனதும் ராஜ்கிரணுக்‌கேகாவலுக்கு போகிறான். ராஜ்கிரணோ அவரது மகள் அசினுக்கு அந்த வாலிபனை காவலாக்குகிறார்.அந்த காவலனே அசினின் காதலன் ஆவதும், அந்த காவல், காதலால் எழும் விளைவுகளும் தான் "காவலன்" படத்தில் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லப்பட்டிருக்கும்மீதிக்கதை!
நம்பமுடியாத கதை என்றாலும் அதை நம்பும் படியாக செய்து அசினின் காவலனாக, காதலனாககல்லூரி தோழனாக விஜய் வடிவேலு அண்ட் கோவினருடன் பண்ணும் காமெடி கலாட்டக்கள் விஜய்யும், இயக்குநர் சித்திக்கும் ஏற்கனவே இணைந்த "ப்ரண்ட்ஸ்" படத்தைஞாபகபடுத்தும் அளவிற்கு கலகலப்பை ஏற்படுத்துவது காவலன் படத்தின் ப்ளஸ்பாயிண்ட்.கண்ணதாசனா, காளிதாசனா? பாரதியாரா, பாரதிராஜாவா…? என அடிக்கடி வடிவேலு தானும்குழம்பி, விஜய்யையும் குழப்பும் காட்சிகளில் தியேட்டரே சிரிப்பில் அதிர்கிறது.
விஜய் பக்கம் பக்கமாக பன்ச் டயலாக் பேசி ஹீரோயிசம் காட்டாமல் நடித்திருப்பதுதான்காவலன் படத்தின் பெரியபலம்! அதிலும் தன் காதலி யார்? என்பதை தெரியாமல் நீங்கதான்என் காதலி என்று வைத்துக் கொள்ளுங்களேன் நான் அவகிட்டே எப்படி பேசுவேன்னு.. இப்போபேசி காட்டுகிறேன்… என்று காதலியை சந்திக்க வந்த இடத்தில் உடன் வரும் அசினின்தோள்பட்டையை பிடித்துக்கொண்டு விஜய் பேசும் காதல் மொழியை விஜய் ஒருவரால் மட்டுமேசெய்து காட்ட முடியும். 38வயதில் ஏதோ 25வயது வாலிபர் மாதிரி உடலாலும் மனதாலும்காதலிக்கும் விஜய்க்கு ஒரு ஹேட்ஸ் ஆஃப் சொல்லியே தரவேண்டும்! காதல் காட்சிகளில்மட்டுமல்ல ஆக்ஷன் காட்சிகளிலும் புதிய பரிமாணம் காட்டி இருக்கும் விஜய்யை இடையில்ஏற்பட்ட தோல்வி(படங்)கள் ரொம்பவே பண்படுத்தி இருக்கின்றன என்றே சொல்ல வேண்டும்!வாவ் என்ன ஒரு ரொமான்ஸ் என்ன ஒரு ஆக்ஷன், என்ன ஒரு காமெடி சென்ஸ்! கீப் இட் அப்விஜய்!
அசின், ராஜ்கிரணின் மகளாக விஜய்யின் காதலியாக வாழ்ந்திருக்கிறார் அம்மணி.அசினைக்காட்டிலும் அவர் உடன் வரும் மித்ராகுரியன் இரண்டாம் நாயகி என்பதை காட்டிலும்இன்னும் பிரமாதமாக நடித்து அசினையே சில இடங்களில் ஓவர் டேக் செய்துவிடுகிறார்.
ராஜ்கிரண் அப்பா கேரக்டரா? அப்பப்பா கேரக்டரா? என கேட்குமளவிற்கு மிரட்டலானநடிப்பில் மிரளவைக்கிறார். ராஜ்கிரணின் ஜோடி ரோஜாவும் தன் பங்கிற்கு மிரட்டுகிறார்.தூங்கி வழியும் எம்.எஸ்.பாஸ்கர், விஜய்யின் அப்பா நிழல்கள் ரவி, அம்மா யுவஸ்ரீ எனஎல்லோரும் பாத்திரத்திற்கேற்ற பளிச் தேர்வு! அம்மாவாசை வடிவேலுவும், அவரது ஜோடிபூங்கொடி நீபாவும் செம காம்பினேஷன்! எல்லாம் சரி விஜய், அசினுடன் கல்லூரியில்படிக்கும் குள்ளநடிகருக்கு "அஞ்சாநெஞ்சன்" என பெயர் வைத்து வம்பை விலைக்குவாங்கியது யார் விஜய்யா? சித்திக்கா?
வித்யாசாகரின் இசையும் என்.கே.ஏகாம்பரத்தின் ஒளிப்பதிவும் சித்திக்கின் கதை, திரைக்கதை, இயக்கத்திற்கு பக்கபலமாக இருந்து காவலனை விஜய்யின் காதலுக்கு மரியாதைஅளவு உயர்த்தி பிடித்திருக்கின்றன!
மொத்தத்தில் "காவலன்" விஜய் ரசிகர்களுக்கு "காதலன்".

Wednesday, March 23, 2011

விஜயின் பதிலடி அதி வேகம்

விஜயின் பதிலடி அதி வேகம்

சாரு அடித்த அதே பல்டிதான். இது வேலை வெட்டியற்ற ஒரு விஜய் ரசிகன், விஜயைப் பற்றி எழுதிய பதிவு. விஜயைப் பற்றி பெருமையாகத்தான் எழுதி இருப்பான். எனவே இந்த 5 நிமிடத்தை வீணாக்கிவிட்டேன் என்று பின்னூட்டம் இடும் கனவான்கள் உடனே மாற்று பெட்ரோல் கண்டுபிடிக்கும் பணிக்கே திரும்பிவிடுங்கள். கிம் கி டுக்கின் ரசனை வாரிசுகள், டொரண்ட் டவுன்லோடி பிட்டு பிட்டாக உலகப்படத்தை ரசிக்கும் அறிவு ஜீவிக்கள், அறிவு மணிரத்னங்கள் எல்லோருக்கும் நான் சொல்ல ஏதுமில்லை. வழக்கம் போல சத்தம் போடாமல் படித்துவிட்டு நாமதான் உலகிலே பெஸ்ட் என்ற நினைப்போடு எஸ் ஆகிவிடுங்கள். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அமைதியாக படிக்க முடியும் என்றால் தொடருங்கள். எதுக்குடா இந்த வேலை என்று பலமுறை நண்பர்கள் சொல்வதுண்டு. நினைத்ததை எழுத முடியாத பிளாக் என்ன வெங்காயத்துக்கு? சரி.பதிவுக்கு போலாம் வாங்க..
இந்தப் பதிவு எழுத காரணமாகிய செய்தியை முதலில் சொல்லி விடுகிறேன். விஜயின் கடைசி 6 படங்கள் மாபெரும் தோல்வியாம். படமெடுத்தவர்கள், திரையிட்டவர்கள் என அனைவரும் நூடுல்ஸ் ஆகிவிட்டார்களாம். இனி விளம்பரப்படங்களில் நடித்துதான் அவர் காலத்தை ஓட்ட வேண்டுமாம்.நேரிடையாகவும், மறைமுகமாகவும் என்னிடம் இதையெல்லாம் கேட்டவர்கள், சொன்னவர்கள் ஏராளம். அவர்களுக்கு இதோ என் பதில்
1) பாடிகார்ட் என்ற மலையாளப் படத்தின் ரீமேக்கான காவலன், கேரளாவில் வழக்கமான விஜய் பட விலைக்கே விற்றிருக்கிறதாம்.
2) காவலன் படத்தின் வெளிநாட்டு உரிமை இதுவரை விற்ற விஜய் பட விலையை விட அதிக விலைக்கு பெறப்பட்டிருக்கிறதாம்.
3) தமிழக வெளியீட்டு உரிமை சுறா பட விலைக்கே விற்கப்பட்டிருக்கிறது.
வெற்றிப் படங்கள் தரும் வரைதான் விஜய்க்கு மவுசு என்றவர்களுக்கு இன்னொரு செய்தி காத்திருக்கிறது. கடந்த இரண்டு வருடங்களில் தமிழக வாரப்பத்திரிக்கைகளின் அட்டையை அதிக முறை அலங்கரித்த நடிகர் யார் எனத் தெரியுமா? விஜய்.
என்ன கொடுமை சார் இது? வெற்றி பெற்றவர்களுக்கு கிடைக்க வேண்டியது எல்லாம் விஜய்க்கா? பூமி தாங்குமா? அதற்கு ஏதாவது ஆகி விடும் முன்பு இன்னொரு செய்தியையும் சொல்லி விடுகிறேன். பொதுவாக யார் ஜெயித்துக் கொண்டே இருக்கிறார்களோ அவர்களைத்தான் விளம்பரம் செய்ய அணுகுவார்கள். சச்சினை விட தோனி அதிகம் சம்பாதிக்க இதுவே காரணம் என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் தொடர்ந்து 6 படங்கள் மகா ஃப்ளாப். குறுஞ்செய்திகளில் தமிழக சர்தார்ஜி அளவுக்கு நக்கல். இவ்வளவு பிரச்சினையில் இருக்கும் ஒரு மொக்கை நடிகரை தங்கள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசடராக ஆக்க யாராவது நினைப்பார்களா? முன் வந்தது ஜோஸ் ஆலுக்காஸ். அதற்காக விஜய்க்கு தரப்பட்ட தொகை எவ்வளவு தெரியுமா? காதை மூடிக் கொள்ளுங்கள். ** கோடி. விஜய் பிராண்ட் அம்பாசடர் அல்ல. கிராண்ட் அம்பாசிடர் என்பது இப்போது புரிந்திருக்கும் என நம்புகிறேன்.
என்ன சொல்லி என்னப்பா பிரயோஜனம்? படமெல்லாம் மொக்கையாத்தானே இருக்கு என்று சொல்கிறீர்களா? விஜயின் பயணத்தை சற்றே திரும்பி பாருங்கள். 1999ஆண்டில் துள்ளாத மனமும் துள்ளும் என்ற மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து என்றென்றும் காதல், நெஞ்சினிலே, மின்சார கண்ணா, கண்ணுக்குள் நிலவு என தொடர் தோல்விகள். அவ்வளவுதான் விஜய். என்றார்கள். அப்போதுதான் அலைபாயுதே, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் என்ற இசை+ இயக்குனர் வேல்யூ மிக்க படங்களோடு வந்தது குஷி. அதன் பின் என்ன நடந்தது என சொல்லவும் வேண்டுமா?
.அதே போல் 2003ல் பகவதி, வசீகரா, புதிய கீதை என ஹாட்ரிக் தோல்விகள். விஜய்க்கு 5வது ரேங்காவது கொடுங்கப்பா என்று வள்ளல்கள் வியாக்கியானம் பேசின நேரம். ஒரு பக்கம் சூர்யா+விக்ரம்+பாலா என பெரும்படை. இன்னொரு பக்கம் வில்லன் என்ற ஹிட்டோடு தல கெத்தா நிற்கிறார். புத்தியே இல்லாமல் புதுமுக இயக்குனரை நம்பி திருமலை என்று வந்தார் விஜய். மொட்டை கன்ஃபார்ம்டு என்று ஆரூடம் சொன்னார்கள். அதில் புகழ் பெற்ற ஒரு வசனம்
“இதுவரைக்கும் ஜெயிச்சது முக்கியம் இல்ல மச்சி. இந்த ஆட்டமே வேற”
விஜயின் அப்போதைய சினிமா பயணத்திற்கு ஏற்றது போல் அமைந்தன ஒவ்வொரு வசனமும்.
“பொதுவா யார் பிரச்சினைக்கு போக மாட்டேன். ஆனா ஆட்டம் போட்டி பந்தயம்னு வந்துட்டா சொல்லி அடிப்பேன் சும்மா கில்லி மாதிரி. ஒன்ஸ் பிக்கப் ஆனா ஆனதுதான். போய்க்கிட்டே இருப்பேன்”
சொன்னதை செய்தார் விஜய். திருமலை வெற்றியை தொடர்ந்து கில்லி என்ற பிளாக்பஸ்டர். இன்றுவரை கமர்ஷியல் படங்களுக்கு இலக்கணமாக திகழும் படம்.
இப்போது விஜய்க்கு அப்படியொரு இக்கட்டான நிலை. சொல்லப்போனால் இன்னும் மோசம். காவலன் என்று சொன்னதும் விஜய் திருந்தி விட்டார் என்றார்கள். அதே சூட்டில் வேலாயுதம் பூஜைப் போடப்படுகிறது. ”வேலா வேலா வேலா வேலாயுதம்.. நீ ஒத்த வார்த்தை சொன்னா போதும் நூறாயுதம்” என்று அறிமுகப்பாடல் எழுதுகிறார்கள். என்ன செய்யப்போகிறார் விஜய்? ஷங்கரோடு 3 இடியட்ஸ் என்கிறார்கள். இல்லை இல்லை. ஷங்கர் விஜய்க்காகவே புதுசா கதை எழுதுகிறார் என்றும் சொல்கிறார்கள். களவாணி இயக்குனர், விக்ரம்.கே.குமார் எல்லாம் ஸ்க்ரிப்ட்டோடு காத்திருக்கிறார்கள் என்ற செய்திகளும் வருகிறது. சீமான் வெளியே வந்ததும் பகலவன் என்கிறார்கள். பிடிக்கிறதோ இல்லையோ, பெரும்பான்மையான சினிமா ரசிகர்கள் பேசும் விஷயம் இன்று இதுதான். எல்லாமே செய்திகள்தானே? எதுதான் உண்மை?
இந்த வாரம் விகடனில் அமீரின் பேட்டி. பருத்தி வீரன் தந்த படைப்பாளி சொல்கிறார் “விஜய்க்குள்ளே அவார்டுகளை அள்ளிக் குவிக்கும் கலைஞனும் இருக்கிறார். அதற்கான உழைப்பும் இருக்கிறது. இனி எங்கேயோ போய்விடுவார் விஜய். கண்ணபிரான் ஒன்றாக செய்யப் போகிறோம்”. ஷங்கரின் படமும் உறுதியாகிவிட்டது. ஒவ்வொரு முறை தோற்கும் போதெல்லாம் இன்னும் வேகமாக வெற்றிகளை குவிப்பது விஜயின் ஸ்டைல். இந்த முறை அடி அதிகம். வெறியும் அதிகமாகத்தானே இருக்கும்? இனிமேல் தான் இருக்கு ஆட்டம்.. இன்னுமா விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று வாய்பிளக்கும் கணக்கு புலிகள் உங்கள் வீட்டிலோ, அருகிலோ இருக்கும் குழந்தையை போய் கேளுங்கள். ஜோஸ் ஆலுக்காஸை போய் கேளுங்கள். இல்லை காவலன் வரும் வரை காத்திருந்து முதல் நாள் தியேட்டர் பக்கம் போய் பாருங்கள்.
2004களில் கில்லி என்று பைக்குகளின் பின்னாலும், ஆட்டோக்களின் பின்னாலும் எழுதிக் கொண்டு திரிந்தார்களே! அதை விட அதிகமானோர் விரைவில் கெத்தா சொல்வார்கள்

விஜய்க்கு மகுடம்

விஜய்க்கு மகுடம் சூட்டும் கண்ணபிரான்-அமீர் பளிச்


தலையைகூட மாற்றி சீவ மாட்டாரா? ரசிகர்களிடமிருந்து இப்படி ஒரு விமர்சனத்தையும் ஆதங்கத்தையும் நீண்ட நாட்களாகவே சந்தித்துவருகிறார் விஜய். பூனைக்கு யார் மணி கட்டுவது என்ற தயக்கத்தில் விஜய்யை இயக்கும் பல இயக்குனர்கள் அவருக்கு வேறொரு பரிமாணம் கொடுக்காமல் தள்ளியே நிற்கிறார்கள்.
ஆனால் இளையதளபதிக்குள் இருக்கும் இன்னொரு திறமைசாலியை அடையாளம் காட்ட ரெடியாகிவிட்டார் அமீர். பருத்திவீரன் படத்திற்கு முன்பிலிருந்தே தனது “கண்ணபிரான்” கதை பற்றி பெருமையாக சொல்லிவருகிறார் அமீர். இந்த கதையை விஜய்க்கு சொல்லி ஓ.கேவும் வாங்கிவிட்டாராம். சமீபத்தில் முழு ஸ்கிரிப்டையும் கேட்ட விஜய், “அண்ணா…. நீங்க என்ன சொல்றீங்களோ அத செய்யுறேன். இந்த படத்திற்காக உங்ககிட்ட என்னை ஒப்படைத்து விடுகிறேன்” என சம்மதத்துடன் சத்தியத்தையும் கலந்து கொடுத்துள்ளாராம் விஜய்.
பருத்திவீரனில் ருசித்த மெகா வெற்றி, யோகியில் சந்தித்த படுதோல்வி என இரண்டு அனுபவங்களையும் பார்த்துவிட்ட அமீர், ஜெயம்ரவியை வைத்து ஆதிபகவானை பக்கா கமர்ஷியலாக இயக்கிவருகிறார். இந்த படம் முடிந்ததும் கண்ணபிரானுக்காக விஜய்யை களமிறக்க காத்திருக்கிறாராம்.
இது பற்றி அமீர் கூறியதாவது :
“விஜய்யை எல்லோரும் கமர்ஷியல் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். அவார்டுகளை அள்ளி குவிக்கிற அளவிற்கு அழுத்தமான உழைப்பாளியும் அவருக்குள்ள இருக்கான். அந்த உழைப்பாளியின் படமா ‘கண்ணபிரான்’ அவருடைய உயரத்தை ஏற்றி வைக்கும்” என இளையதளபதிக்கு நற்சான்றிதழ் தருகிறார் அமீர்.

விஜய் நடித்தால்தான் 3 இடியட்ஸ் எடுபடும் - ஷங்கர்

விஜய் நடித்தால்தான் 3 இடியட்ஸ் எடுபடும் - ஷங்கர்

ஒரேயொரு வெற்றி, ஆயிரம் தோல்விகளை மறக்க வைக்கும் சக்திமிக்கது என்பார்கள். விஜய் விஷயத்தில் அது நிரூபணமாகி யிருக்கிறது. எக்கச்சக்க சிக்கல்கள், சதிகளைத் தாண்டி வெளியான காவலன் படம் பெற்ற வெற்றி, விஜய்க்கு மீண்டும் பாக்ஸ் ஆபீஸில் மரியாதையை ஏற்படுத்தியுள்ளதோடு, கைவிட்டுப் போன பெரிய வாய்ப்பையும் மீண்டும் தேடி வர வைத்திருக்கிறது. இந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்தி படமான, ‘3 இடியட்ஸை’ தமிழில் விஜய் – ஜீவா – ஸ்ரீகாந்தை வைத்து ரீமேக் செய்ய முடிவு செய்தது ஜெமினி பிலிம் சர்க்யூட். படத்துக்கு, ‘மூவர்’ என்று பெயர் சூட்டவும் முடிவு செய்திருந்தனர். அமீர்கான் நடித்த வேடத்தில் விஜய் நடிப்பதாக முடிவாக, அதற்காக கெட்டப் மாற்றங்களுக்கும் தயாரானார் விஜய். ஆனால் இயக்குநருடன் பிரச்சினை காரணமாக விஜய் இந்த படத்தில் இருந்து விலகிக்கொண்டதாக செய்தி பரவியது. இன்னொரு பக்கம், இந்தப் படத்தில் விஜய் நடிப்பதை சில முக்கிய சக்திகள் விரும்பவில்லை என்றும், அதனால் நீக்கப்பட்டுவிட்டார் என்றும் கூறினர்.

விஜய் நடிக்கவில்லை, அவருக்குப் பதில் சூர்யா நடிக்கிறார் என்று ஜெமினி நிறுவனமும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே படத்துக்கு ‘ஏழரை’ பிடித்த எஃபெக்ட் வந்துவிட்டது. தன்னைத் தேடி வந்த வாய்ப்பு என்பதால் சூர்யா ரொம்பவே கிள்ளுக்கீரையாக நினைத்துவிட்டார் போலிருக்கிறது இயக்குநர் ஷங்கரை. ஏகத்துக்கும் கண்டிஷன்கள் போட ஆரம்பித்தார். தெலுங்கிலும் நானே ஹீரோவாக நடிப்பேன் என்று முதல் கண்டிஷன் போட்டார். சரி பரவாயில்லை என்று தயாரிப்பாளர் ஒப்புக் கொண்டதால், ஷங்கர் மவுனம் காத்தார்.
அடுத்து, இந்தப் படத்துக்கு சம்பளமாக ரூ 8 கோடியும், தெலுங்கு விநியோக உரிமையில் 50 சதவீதமும் கேட்டாராம் சூர்யா. ஆடிப் போனார்கள் தயாரிப்பாளர்கள்.
அடுத்து அவர் வைத்த ஒரு மெகா கண்டிஷன்… மூன்று மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும். அதாவது சூர்யா ஏழாம் அறிவு, மாற்றான் படங்களை முடித்துவிட்டு வரும் வரை ஷங்கர் காத்திருக்க வேண்டுமாம்!
அதற்கு மேல் பொறுமை போயே போச்… ‘விஜய்யுடனே திரும்பப் பேசலாம். அவரை சம்மதிக்க வைக்கலாம். சூர்யாவை வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்’ என்று கூறிவிட்டு, மீண்டும் விஜய்யைத் தொடர்பு கொண்டாராம் ஷங்கர்.

எடுத்த எடுப்பிலேயே எந்த நிபந்தனையுமில்லாமல் சம்மதம் சொன்ன விஜய், வேலாயுதம் படத்தின் சில காட்சிகள் எடுத்து முடிந்ததும் படப்பிடிப்புக்கு ஆஜராகிவிடுவதாகக் கூறிவிட்டார். ஷங்கர், தயாரிப்பாளர், விஜய் ரசிகர்கள், சினிமா ஆர்வலர்கள் எல்லோருக்குமே இப்போது பரம திருப்தி!
காரணம்… 3 இடியட்ஸ் கதை அப்படி. ஷங்கர் முன்பே சொன்ன மாதிரி, விஜய் போன்ற நடிகர்கள் நடித்தால்தான் இந்த மாதிரி படங்கள் எடுபடும். பார்க்கவும் அம்சமாக இருக்கும்!
விஜய்யுடன் இணைந்து ஸ்ரீகாந்த், ஜீவா ஆகிய இருவரும் நடிக்கிறார்கள். இலியானா நாயகியாக நடிக்கிறார். படப்பிடிப்பு ஊட்டியில் கடந்த ஜனவரி 25-ம் தேதியே தொடங்கி, தொடர்ந்து நடைபெறுகிறது. பிப்ரவரி 7-ந் தேதி முதல் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொள்கிறார்.

என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மூன்று மாணவர்களை பற்றிய கதை இது. மூன்று பேரும் நண்பர்கள். கல்லூரி படிப்பு முடிந்ததும், நண்பர்கள் மூன்று பேரில் ஒருவர் மட்டும் காணாமல் போகிறார். படிப்பை முடித்து வேலைகளில் சேர்ந்த மற்ற இரண்டு நண்பர்களும், காணாமல் போன நண்பனை தேடுகிறார்கள். அவர்கள் அந்த நண்பனை கண்டுபிடித்தார்களா, அப்போது அந்த நண்பனின் நிலை என்ன என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருப்பார்கள் ஒரிஜினல் ‘3 இடியட்ஸ்’ படத்தில்.
தமிழுக்கேற்ப ஷங்கர் ஏதாவது மாற்றங்கள் செய்துள்ளாரா என்பது இனிமேல்தான் தெரியும்

Tuesday, March 22, 2011

விஜய் நியூஸ்


இன்னொரு விஜய் செய்தி. இதுவும் ரொம்ப சோக மயமானதுதான். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் கண்டன கூட்டம் நடத்தினாரல்லவா? அக்கூட்டத்தில் மிக ஆவேசமாக பேசிய விஜய், இந்த மீனவர் படுகொலையை கண்டித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும்.
நீங்கள் எல்லாரும் உடனடியாக இரண்டு அரசுகளுக்கும் தந்தி அனுப்புவதுதான் சரியான வழி. லட்சக்கணக்கான தந்திகள் இரு அரசுகளையும் நோக்கி குவியட்டும் என்றெல்லாம் உசுப்பேற்றினார். ஆனால் அவர் சொல்லை யாரும் கேட்டதாக தெரியவில்லை. மிக சொற்ப அளவிலேயே தந்திகள் அனுப்பப்பட்டதாம்.
இதற்கு முன்பும் இலங்கை பிரச்சனை தொடர்பாக அவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோதும் இப்படி தெரிவித்திருந்தார். அதற்கு போன தந்திகள் கூட இப்போது இல்லையாம்