Monday, August 29, 2011

வேலாயுதம் பாடல் வெளியீட்டு விழா... ரசிகர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார் விஜய்!

Velayudham Audio Release மதுரை: மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடந்த வேலாயுதம் திரைப்பட பாடல் வெளியீட்டு விழாவில் ஏழைகளுக்கு நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. மதுரை மாநகர் மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி தலைவர் ஆர்.மகேஸ்வரன் தலைமை வகித்தார்.

விழாவில் நடிகர் விஜய் 5 பசுமாடுகள், 3 மாணவர்களுக்கு உயர்படிப்பு செலவுகள், 40 மாணவ, மாணவிகளுக்கு கம்ïட்டர், 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு தையல் மெஷின், ஆட்டோ டிரைவரின் குழந்தைகள் 3 பேருக்கு கல்வி உதவித்தொகை உள்பட ஏராளமான உதவிகளை வழங்கினார்.

பின்னர் நடிகர் விஜய் கூட்டத்தில் இருந்து ரசிகர்-ரசிகையை தேர்ந்தெடுத்து, அவர்களை மேடைக்கு அழைத்து வந்தார். மதுரையை சேர்ந்த ரசிகை உமாமகேஸ்வரி வேலாயுதம் பட ஆடியோ சிட்யை வெளியிட, அதனை தஞ்சையை சேர்ந்த ரசிகர் தீபக் பெற்றுக்கொண்டார்.

விழாவில் நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோர் பேசினார்கள். விழாவில் தென் மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான ரசிகர்கள் கலந்து கொண்டனர்.

விழாவில் வேலாயுதம் படத்தின் கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன், இயக்குனர் ஜெயம்ராஜா, இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, பாடலாசிரியர் விவேகா, அண்ணாமலை மற்றும் திரைப்பட வினியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், தொழில் அதிபர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டி: எஸ்.ஏ. சந்திரசேகரன் அறிவிப்பு

SA Chandrasekaran மதுரை: தமிழகத்தில் நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கம் போட்டியிடும் என, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகரன் அறிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் அ.தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தது. அதற்காக அவரது தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் அ.தி.மு.க.வை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது விஜய் ரசிகர் மன்றம் சார்பில் போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியிடவில்லை.

இந்நிலையில், இது குறித்து நடிகர் விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது, டெல்லியில் நடந்த அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தில் மக்கள் இயக்கம் சார்பில் விஜய் சென்று தனது ஆதரவை தெரிவித்தார். நேர்மையான ஆட்சி என்பதே மக்கள் இயக்கத்தின் நோக்கம்.

மக்கள் இயக்கத்தின் தொண்டர்கள் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். இதை விஜய் ஏற்றுள்ளார். அ.தி.மு.க.வுடன் எங்களது சுமூகமான உறவு உள்ளது.

எனவே உள்ளூர் அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசனை நடத்தி உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுமாறு ரசிகர்களிடம் ஆலோசனை கூறப்பட்டுள்ளது. அடிதட்டு மக்களும் சேவை செய்யவே மக்கள் இயக்கம் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுகின்றது என்றார்.

நான் ஒரு முறை முடிவு செஞ்சா... - விஜய்


Vijayநான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது, என்றார் நடிகர் விஜய்.

நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கத்தின் சார்பில் ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் வேலாயுதம் பட ஆடியோ சிடி வெளியீட்டு விழா மதுரை, கே.புதூர் சி.எஸ்.ஐ. மைதானத்தில் நேற்று இரவு நடந்தது.

அந்த விழாவில் நடிகர் விஜய் பேசுகையில், "மற்ற ஊர்களுக்கும் மதுரைக்கும் வேறுபாடு உண்டு. மற்ற ஊர்களில் பக்கத்து வீட்டுக்காரன் அடிபட்டு கிடந்தால் நமக்கு ஏன் வம்பு என்று சென்றுவிடுவார்கள். ஆனால் மதுரை மக்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. பசு மாட்டுக்கு காய்ச்சல் என்றால் கூட, அதை தூக்கிக்கொண்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டுபோய் வைத்தியம் பார்க்கும் நல்ல குணம் கொண்டவர்கள்.

பெரிய பெரிய மீசை வைத்துக்கொண்டு, திருப்பாச்சி அரிவாள் வைத்துக்கொண்டு சுழற்றுவார்கள். ஆனால் பழகுவதற்கு குழந்தை உள்ளத்தோடு இருப்பார்கள். நான் இந்த ஏரியாவில் ஷுட்டிங் வந்த போது ஏலே ஏலே என்று கூப்பிடுவார்கள். அந்த குரலில் தான் அன்பும் பாசமும் கலந்து இருக்கும்.

இங்கு மாவட்ட மன்ற பொறுப்பாளர்கள் மற்றும் எங்க அப்பாவும் பேசினார்கள். ஆனால் நான் ஒரு தடவை முடிவு எடுத்தால், அந்த முடிவில் மாற மாட்டேன். மாற்றவும் முடியாது. அந்த முடிவு மாற்றத்துக்கு தைரியம் கொடுத்தது மதுரை மக்கள்தான்,"

Sunday, August 28, 2011

Velayutham MP3 free download


Velayutham - Vijay Antony

Velayutham - Vijay Antony

Velayutham Tamil Movie, Velayutham Songs Free Download Music By Vijay Antony - Velayutham

Featuring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani

Production : Oscar Ravichandran
Starring : Vijay, Genelia DSouza, and Hansika Motwani
Director : Raja M
Lyrics : Vaali, Pa. Vijay, Kabilan, Vijay Antony & Annamalai

Rathathin Rathamay - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Haricharan, Madhumitha

Molachu Moonu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Prasanna, Supriya Joshi

Chillax - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Karthik, Charulatha Mani

Mayam Seidhayo - VmusiQ.Com

DownloadAdd to Playlist
Singer(s) : Sangeetha Rajeshwaran

Sonna Puriyadhu - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Veera Shankar

Vela Vela - VmusiQ.Com (Full Songs)

DownloadAdd to Playlist
Singer(s) : Vijay Antony, Mark

Saturday, August 27, 2011

ஒரு லட்சம் ரசிகர்களின் முன்னிலையில் ‘வேலாயுதம்’ ஆடியோ ரிலீஸ்!

ஜெயம் ராஜாவின் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘வேலாயுதம்’ படத்தின் பாடல் வெளியீடு, நாளை மதுரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழாவில் திரை உலகப் பிரபலங்கள் பங்கு கொள்ளவில்லை. மாறாக விஜயில் ஒரு லட்சம் ரசிகர்கள் பங்குகொள்ளப் போகிறார்களாம். அவர்களின் முன்னிலையில் இப்படத்தின் பாடல் வெளியீடு நடைபெறுமாம்.
நடிகர் விஜயின் மக்கள் இயக்கத்தின் மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை (28-ந்தேதி) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்று ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்குகிறார். இதே மாநாட்டில்தான் விஜய் நடித்த வேலாயுதம் படத்தின் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து விஜய்யின் தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியதாவது:
“விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள்.
ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்.” என்றார்.

‘வேலாயுதம்’ ரசிகர்களின் எதிர்பார்ப்பை குறைக்காது: விஜய்


விஜய், ஜெனிலியா, ஹன்சிகா மொத்வானி, சந்தானம், சரண்யா மோகன் ஆகிய நடிப்பில் உருவாகி விரைவில் வெளிவரவிருக்கும் படம் வேலாயுதம். இப்படத்தை ஜெயம் ராஜா இயக்குகிறார். ஆஸ்கர் பிலிம்ஸ் சார்பாக ரவிச்சந்திரன் தயாரிக்கிறார். இப்படம் விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை எதிர்நோக்கியிருக்கும் இந்நிலையில் இப்படத்தின் ஆடியோ வெளியீடு இன்று மதுரையில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெறுகிறது.
இப்படத்தை பற்றி விஜய்யிடம் கேட்டதில், அவர் கூறியதாவது
வேலாயுதம் படத்தின் கதை பற்றி இயக்குநர் ராஜா என்னிடம் சொல்ல வந்தபோது, படத்தின் கதையை கேட்ட எனக்கு மிகவும் பிடித்து போனது. அவர் சொன்ன கதை வலிமையாக இருந்ததால் இப்படத்தில் நடிக்க உடனடியாக ஒப்புக் கொண்டேன். படம் மிகவும் அழகாக வந்திருக்கிறது.
எல்லா நடிகர்களுக்கும் சூப்பர் ஹீரோ சப்ஜெக்டில் நடிக்கணும் என்று ஒரு கட்டத்தில் ஆசைப்படுவார்கள். அப்படி ஒரு ஆசை எனக்கும் இருந்தது. அப்படிப்பட்ட படம் தான் இந்த வேலாயுதம். ரசிகர்கள் எதிர்பார்க்கிற எல்லாமே இந்த படத்தில் இருக்கிறது. வேலாயுதத்தில் ஹீரோ செய்யும் ஒவ்வொரு செயலும் ரொம்பவும் லாஜிக்காக இருக்கும்.
படத்தில் முக்கியமான விஷயம் என்று சொன்னால் அது ரயிலில் வரும் சண்டைக்காட்சி. இப்படிப்பட்ட சண்டை காட்சியில் நடிக்க எனக்கு ரொம்ப நாளாக ஆசை. ஆனால் அதுவும் லாஜிக்காக இருக்க வேண்டும் என்பதற்காக ஹாலிவுட் பைட் மாஸ்டர் டாம்டேல்மரை வரவழைத்து அக்காட்சியை படமாக்கினோம். ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த சண்டைக்காட்சி பிடிக்கும்.
இந்த படத்தில் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி. அவரைப் பற்றிக் கண்டிப்பாக இங்கே கூறவேண்டும். அவரைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். எங்களோட காம்பினேஷன் எப்படி இருந்தது என்று வேட்டைக்காரன் படத்திலேயே அனைவருக்கும் தெரிந்திருக்கும். அதைவிட பல மடங்கு வேலாயுதத்தில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும். அவரிடம் எனக்கு பிடித்த விஷயம் என்னவென்றால் படத்தில் ஐந்தாறு பாட்டு இருந்தாலும் எல்லா பாடலிலும் மெலடி மிஸ் ஆகாது. குத்துப்பாட்டு, வெஸ்டர்ன், நாட்டுப்புற பாட்டு என எல்லாவற்றிலும் சுகமான அந்த இனிமை இருக்கும். அதுதான் நீண்டகாலத்திற்கு நிலைக்கும் என்ற எண்ணம் அவருக்கு உண்டு.
ரசிகர்களாகிய உங்களிடம் நான் பகிர்ந்து கொள்ள வேண்டிய இன்னொரு விஷயம் இருக்கிறது. அது என்னவென்றால், படத்தின் ஆடியோ வெளிவரும் முன்னே, இணையதளங்களில் வெளிவரலாம். தயவு செய்து யாரும் திருட்டி வி.சி.டி-யை ஆதரிக்க வேண்டாம். இது என்னுடைய படத்திற்கு மட்டுமல்ல, மற்ற எல்லா தயாரிப்பாளர்கள், டைரக்டர்கள், நடிகர்கள் படத்துக்கும் தான்.
மொத்தத்தில் “வேலாயுதம்” படம் ரசிகர்களுடைய எதிர்பார்ப்பை குறைக்காது, கண்டிப்பாக அனைவரும் ரசிக்கும் படியாக இருக்கும்.

விஜய்யை இயக்கும் விஜய்!


'பில்லா-2' படத்தை அடுத்து அஜீத் நடிக்க இருக்கும் படத்தை இயக்குனர் விஜய் தான் இயக்குவார் என்று தகவல்கள் வெளியாகின. இல்லை.. இயக்குனர் விஜய் இயக்க நடிகர் விஜய் நடிப்பார் என்றும் சொல்லப்பட்டது.

இப்போது விஜய்-விஜய் கூட்டணி உறுதியாகியிருக்கிறது.

நடிகர் விஜய் இப்போது நடித்து வரும் 'நண்பன்' படத்தை அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம், அடுத்து கெளதம் மேனன் இயக்கத்தில் 'யோஹன்' ஆகிய படங்களில் நடிக்க இருக்கிறார். இப்படங்களை முடித்தபின் விஜய்-விஜய் கூட்டணியில் படம்  துவங்கும் என்கிறது படக்குழு.

'தெய்வத்திருமகள்' படத்தைத் தொடர்ந்து விக்ரம்-இயக்குனர் விஜய் மீண்டும் இணையும் படத்தை எடுக்க இருக்கிறார்கள். அதற்குப் பிறகு விஜய்யை இயக்குவார் விஜய் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த படத்திற்கு இசையமைக்கிறார் ஜி.வி.பிரகாஷ்குமார்.  ஏற்கனவே இயக்குனர் விஜய்யின் முந்தைய படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் என்றாலும்,  நடிகர் விஜய் நடிக்க இருக்கும் படத்திற்கு இசையமைப்பதால் மிகந்த சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஜிவி பிரகாஷ்.

விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இளையதளபதி விஜயின் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலாயுதம்’ படத்தின் ரிலீஸ் தேதியை அப்படத்தின் இயக்குனரான ஜெயம் ராஜா அறிவித்தார். இப்படத்தில் பால்காரராக விஜய்க்கு பத்திரிகையாளராக வரும் ஜெனிலியா மற்றும் கிராமத்து பெண்ணாக வரும் ஹன்சிகா மோட்வானி இரண்டு கதாநாயகிகள். நாளை இப்படத்தின் பாடல் வெளியீடு மதுரையில் நடைபெறுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியை இயக்குனர் அறிவித்தார். ‘’பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படம் விஜய் ரசிகர்களுக்கு பிடித்த படமாக வந்துள்ளது. இப்படம் அவரது ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக வருகிறது. அதாவது தீபாவளி அன்று திரைக்கு வர இருக்கிறது’’ என்றார்.
வரும் அக்டோபர் 26-ம் தேதி அன்றுதான் தீபாவளித் திருநாள் வருகிறது. அன்றைய தினம் சூர்யாவின் ‘ஏழாம் அறிவு’, சிம்புவின் ‘ஒஸ்தி’, தனுஷின் ‘மயக்கம் என்ன’ ஆகிய படங்களும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் நாளை 'வேலாயுதம்' பாடல் வெளியீடு

விஜய்யின் மக்கள் இயக்க மாநாடு மதுரை புதூர் மைதானத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. 

விஜய் பங்கேற்கும் இந்த மாநாட்டிஸ் அவர் நடித்த வேலாயுதம் பாடல் சி.டி.யும் வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து விஜய் கூறுகையில், "எனக்கு எல்லாமே எனது ரசிகர்கள்தான். எனவே இந்த பிரமாண்டமான படத்தின் பாடல் வெளியீட்டை அவர்கள் மத்தியில் நடத்துவதே சரியானது என்பதால் மதுரையில் ரசிகர்கள் மூலம் பாடலை வெளியிடுகிறேன்.

இதை சாதாரணமாக நடத்தாமல், விஜய் மக்கள் இயக்கம் மூலம் நடத்துகிறேன். அதற்காகத்தான் தமிழகத்தின் மத்தியில் உள்ள இந்த மதுரை மாநகரைத் தேர்வு செய்தேன்," என்றார்.

இதுகுறித்து விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறுகையில், "விஜய் மாதந்தோறும் ஒவ்வொரு மாவட்டத்திலும் மக்கள் இயக்கம் சார்பில் ஏழைகளுக்கு உதவிகள் வழங்கி வருகிறார். நாளை மதுரையில் நடக்கும் மாநாட்டில் பங்கேற்கிறார். இதில் ஒரு லட்சம் ரசிகர்கள் திரள்கிறார்கள். இதில் 5 ஏழை பெண்களுக்கு வேளைக்கு 15 லிட்டர் பால் தரும் கன்றுடன் கூடிய பசு மாடுகளை விஜய் வழங்குகிறார்.

20 பள்ளிகளுக்கும், 20 ஏழை மாணவ-மாணவிகளுக்கும் 40 கம்ப்யூட்டர்களையும் இலவசமாக வழங்குகிறார். 100 ஏழை பெண்களுக்கு தையல் மிஷின்களும் வழங் கப்படுகின்றன. பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 3 ஏழை மாணவ-மாணவிகளை தத்தெடுத்து அவர்களின் பொறியியல் மருத்துவ படிப்புக்கான மொத்த செலவையும் விஜய் ஏற்கிறார்.

ரசிகர்கள் மாநாட்டில் வேலாயுதம் பாடல் சி.டி.யை வெளியிட அப்படத்தின் இயக்குனர் ராஜா விருப்பப்பட்டார். அதன்படி ரசிகர் மற்றும் ரசிகை மூலம் பாடல் சி.டி. வெளியிடப்படும். மாநாட்டிலேயே அந்த ரசிகர்-ரசிகைகளை தேர்வு செய்வோம்," என்றார்.

Nanban Shooting 98.8888% Finish- Director Shankar's Website



Hi Everyone,
…….ha… we’ve successfully completed 98.8888% of the film, and the rest 1.1112% is one song and a quarter of another song, will be shot in the first week of September.
I feel ‘Nanban’ has shaped out very well in all aspects… The highlight of the film will be its characters and the excellent performances of the artists in it. Its going to be a treat watching Vijay, Jeeva, Sathyaraj, Srikanth, Sathyan, Illeana altogether… every scene is edited and dubbed till date.
Vijay throwed a wonderful party for the completion of the film and it was so nice that all the artists and technicians of the film gathered; it was a very very relaxing evening full of jolly talks, dance, fun, laughter etc.
Thanks to everyone who wished me on my birthday. My wife threw a surprise party, and it was another wonderful day. Vijay, Vikram, Jeeva, Sathyaraj, Srikanth, K.V.Anand, Lingusamy, Randy, A.M.Rathnam, Harris and Antony were there, surprisingly Superstar called me and wished, and made my day.
I started working on the final edit of the film for the background score and rushing Harris to complete the songs for the audio release.
Anna Hazare’s dream is
every ‘INDIAN’s dream!
Hope this dream comes true!

திருட்டு சிடியில் கேட்காதீங்க... ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்


ரசனை விஷயத்தில் மதுரை எப்பவுமே ஒன் ஸ்டெப் மேலேதான். சாப்பாட்டுVelayuthamவிஷயத்தில் துவங்கி, சினிமாவை ரசிக்கிற விஷயத்தில் முன்னேறி அடிதடியில் ஆல் த பெஸ்ட் வாங்குகிற வரைக்கும் இவர்களின் ரசனை கொஞ்சம் தாறுமாறானது. இந்த லட்சணத்தில் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தால் என்னாகும்? மறுபடியும் ஒரு கள்ளழகர் திருவிழாவாக இருக்கும் போலிருக்கிறது விழா நடக்கப் போகும் 28 ந் தேதி.
விஜய்யுடன் நடிக்கும் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானியும் கூட நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மதுரைக்கு வர இருப்பதால், இப்பவே ரசிகர்கள் மனசில் உடுக்கை சத்தம். தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் படம் பற்றி சில தகவல்களையும் அவர்களுக்காக கூறியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயம் இதுதான்.
பொதுவா இப்போ எல்லா படத்தையும் ஆடியோ ரிலீஸ் பண்ணுறதுக்கு முன்னாடியே இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணிடுறாங்க. தயவு செய்து என்னோட ரசிகர்கள் இதை ஆதரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவர்.
இந்த படத்தில் ஒரு ட்ரையின் ஃபைட் பண்ணியிருக்கிறாராம். இது விஜய்யின் பல நாள் ஆசை. இந்த படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மர் என்பவர் இந்த சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறாராம். பொதுவா ஒரு படத்தின் ஃபைட் வலிய திணிக்கப்பட்டதா இருக்கக் கூடாது. இந்த ஃபைட் கதையோடு இணைந்து வருது என்கிறார் விஜய்.

Thursday, August 25, 2011

அண்ணா ஹசாரேவின் மன உறுதியை வணங்குகிறேன்: தில்லியில் நடிகர் விஜய் பேட்டி



ஊழலுக்கு எதிராக தில்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க, நடிகர் விஜய் இன்று தில்லி சென்றார். அங்கே அண்ணா ஹசாரேவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொண்டு அவர் பேசியதாவது;
“ஊழல் பிரச்னை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதத்தை, இந்த இயக்கம் தூண்டியிருக்கிறது. ஒரு தமிழனாக இங்கு வந்து பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். அண்ணாவின் உடல் நலனுக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சத்தியாகிரஹத்தின் மேல் பற்றுள்ள அண்ணா ஹசாரேவின் மன உறுதியை நான் வணங்குகிறேன்’’ என்றார்.
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், கடந்த 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அண்ணா ஹசாரே. இப்போராட்டத்தில் அவருடன் இன்று ஒருநாள் மட்டும் நடிகர் விஜயும் உடன் அவரது மக்கள் இயக்கத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.

உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றது பெருமை அன்னா ஹசாரேவை சந்தித்து விஜய் பேச்சு


அன்னாஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய். இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி சென்றவர், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவை சந்தித்து இந்த போராட்டம் வெற்றியடைய தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அதன்பின் அவர் பேசியதாவது-
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் அன்னாVijayஹசாரே. முக்கியமாக இளைஞர்கள் மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதை பெருமையாக கருதுகிறேன். அன்னா ஹசாரேவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கி அவர் தொடர்ந்து பொது சேவை செய்ய வேண்டும். இந்த மேடையில் நான் வேண்டிக் கொள்வது இதுதான். அவருடைய அறவழி போராட்டத்திற்கு எங்கள் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

Wednesday, August 24, 2011

WHO IS VIJAY GOING TO DIRECT NEXT?


vijay-nanban-22-08-11










Director Vijay has turned out to be one of the hottest directors in Kollywood today with two of his successive films Madarasapattinam and Deiva Thirumagal turning out to be blockbusters.

Following this, there is a lot of expectation on whom he would direct next. It was announced already and Vikram and Vijay will team up once again for a light entertainer. But now, there is a buzz that Vijay and Ilayathalapathy Vijay may join hands for a new project.

Sources in Kollywood say that the Ilayathalapathy may allot his dates for Vijay prior to the Gautham Menon project. An official announcement on this is awaited.

VIJAY IN NEW DELHI


vijay-anna-hazare-25-08-11











Vijay, his wife Sangeetha and a group of their supporters traveled to New Delhi early this morning to join Anna Hazare’s fast. The Ilayathalapathy will stay with Anna Hazare at the Ramlila Maidan and fast the entire day to show that he is against corruption and supports the Lokpal Bill.

The press note from the star said that he will take a flight to New Delhi early today morning and return back to Chennai the very same day after participating in the fast for one whole day.

Vijay’s supporters will also fly down to New Delhi with him.

விஜய்யே அமைதியா இருந்தார் வடிவேலுவுக்கு என்னவாம்? -பொங்கி வெடிக்கும் டைரக்டர்


பல நாள் நோயாளி ஒருநாள் இருமுன மாதிரி, நுரையீரலே வெளியில் வர்ற அளவுக்கு பொங்கி வெடிக்கிறார்கள் திரையுலகத்தில் வடிவேலு பற்றி. அதிலும் சுறா படத்தை இயக்கிய எஸ்.பி.ராஜ்குமார் புலம்புவது சற்று கவலையாக கூட இருக்கிறது.
சுறா படத்தில் வெண்ணிறாடை மூர்த்தி மேடையில் அமர்ந்து சங்கீதம் பாடுவதுVadiveluபோலவும், அவரை பாடவிடாமல் வடிவேலு எதிரில் அமர்ந்து ஊறுகாய் தின்பது போலவும் ஒரு காட்சி வருமே, நினைவிருக்கிறதா? அரைநாளில் எடுத்து முடிய வேண்டிய அந்த காட்சியை மூன்று நாட்கள் எடுக்க வைத்துவிட்டார் வடிவேலு. அந்த படத்தில் அவர் எனக்கு கொடுத்த குடைச்சலை என் வாழ்நாளில் மறக்க மாட்டேன் என்று கதறிக் கொண்டிருக்கிறார் இப்போது.
என்ன நடந்ததாம்? சென்னைக்கு வெளியே சுமார் 50 கிலோ மீட்டர் தாண்டிதான் இந்த காட்சியை எடுத்துக் கொண்டிருந்தாராம் எஸ்.பி.ராஜகுமார். அன்றைய படப்பிடிப்பில் விஜய்யும் இருந்தாராம். திடீரென்று கேரவேனில் உள்ள ஏசி வேலை செய்யவில்லை. அதனால் என்ன, பரவாயில்லை. சர்வீசுக்கு ஆளை வரச்சொல்லுங்க என்று கூறிய விஜய், வெளியே அமர்ந்து இயற்கை காற்றை அனுபவிக்க துவங்கிவிட்டார். ஆனால் வடிவேலு யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் வீட்டுக்கு போய்விட்டாராம். இதுபோல மூன்று நாளும் மூன்று காரணங்களை சொல்லி, சட்டென்று முடிய வேண்டிய காட்சியை இழு இழு என்று இழுத்தார் என்று புலம்பிய ராஜ்குமார் இன்னொரு கேள்வியை எழுப்பினார்.
பிறக்கும் போதே செல்வ செழிப்பில் பிறந்து, எப்போதும் ஏ.சியில் வளர்ந்த அவ்வளவு பெரிய ஹீரோவான விஜய்யே அமைதியாக இருக்கும் போது இவருக்கு முடியாதா? இத்தனைக்கும் கிராமத்துல இருந்து வந்த ஆளு. என்னத்தை சொல்ல என்று தலையிலடித்துக் கொண்டார்.

கதையை மாத்துங்க... கவுதமிடம் விஜய் யோசனை


யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இப்போது துவங்கப் போவதில்லை கவுதம். ஆனால், படம் துவங்குகிற வரைக்கும் அவருக்கு சரியான வேலை கொடுத்திருக்கிறார் விஜய்.
என்னவாம்?
கவுதம்மேனன் திடீரென்று சின்னத்திரையில் சீரியல் எடுக்கப் போகிறேன் என்றுGautham Menonகூறிவந்தாரல்லவா? அதில் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என்று தகவல் வந்ததே, நினைவிருக்கிறதா? அந்த சீரியல் கதையைதான் விஜய்யிடம் சொல்லிவிட்டாராம். முதலில் அது புரியாமல் சம்மதித்த விஜய், அப்புறமாக சில திருத்தங்களை கூறியிருக்கிறாராம் கதையில். முக்கியமாக நான் வெளிநாட்டுக்கு போய் குற்றவாளிகளை புலனாய்ந்து கண்டு பிடித்து வருவதாக சம்பவங்கள் இருந்தால் அதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இது விஜயகாந்த் டைப் படமாச்சே என்று கூறிவிட மாட்டார்களா என்று சந்தேகத்தை எழுப்பினாராம்.
மறுபடியும் விண்ணைதாண்டி வருவாயா மாதிரி காதல் கதையை எடுத்தால் கூட அதில் நடிக்க நான் ரெடி. இதுபோன்ற துப்பறியும் கதையை கொஞ்சம் மாற்றலாமே என்றாராம். இதையடுத்து தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் கவுதம்.
இப்படிதான் கதை மாற்றத்திற்காக அடிக்கடி ரிவர்ஸ் அடித்துக் கொண்டிருந்தார் சீமானும்.

Tuesday, August 23, 2011

Ilayathalapathy Vijay to join hands with Venkat Prabhu

Ilaya Thalapathy’ Vijay is the most wanted man now. He recently threw a party for the successful completion of his part in Shankar’s ‘Nanban’.His Latest Flick Velayudham is releasing First week of next month,and he is giving more and more surprises to his fans,Now latest surprise is that he is joining hands with Venkat Prabhu , the director of Mankatha, Saroja .His latest film Mankatha is releasing this month.
It is reported that Vijay’s next would be A R Murugadoss’ ‘Maalai Neram Mazhaithuli’. And, Murugadoss, who is in his post-production work and release of his magnum opus Suriya starring ‘7am Arivu’, is all set to start his next with Vijay. After this the actor will be doing Gautham Menon’s ‘A R Murugadoss’ ‘Maalai Neram Mazhaithuli’’.Fans were excited seeing his new look posters in this Gautham Menons Flick .And the director Vijay told that his next film will be with vijay. So ilayathalapthy on a fast track with big directors.
Meanwhile, Vijay had appreciated the work of Venkat Prabhu seeing the trailor of Ajith’s big film ‘Mankatha’. It was also reported that the mass actor had expressed his wish to work with the able director of the ‘Thala’ starrer. Does this mean that both are coming together in their near future

Sunday, August 21, 2011

மதுரைக்கு வரும் விஜய்-வரவேற்புக்கு பிரமாண்ட ஏற்பாடுகள்!



Vijay












மதுரைக்கு வரும் நடிகர் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு தர ரசிகர்களும், 
விஜய்யின் மக்கள் இயக்கத்தினரும் தடபுடலாக ஏற்பாடுகள் செய்து வருகின்றனராம்.

150 கார்கள் பின் தொடர விஜய்யை விமான நிலையத்திலிருந்து விழா நடக்கும்
 இடத்திற்கு அழைத்து வரத் திட்டமிட்டுள்ளனராம்.

விஜய் நடித்துள்ள வேலாயுதம் படத்தின் ஆடியோ வெளியீடு பிரமாண்ட விழாவாக
 மதுரையில் ஆகஸ்ட் 28ம் தேதி நடைபெறுகிறது. விஜய் நடித்த படத்தின் ஆடியோ
 வெளியீடு சென்னையைத் தாண்டி வேறு ஒரு நகரில் நடைபெறுவது இதுவே முதல் முறை.

மேலும் காவலன் பட ரிலீஸின்போது மிகப் பெரிய சோதனைகளைச் சந்தித்து
 விட்டதால் வேலாயுதம் விழாவை மிகப் பெரிய விழாவாக்க வேண்டும் என்று
 விஜய் ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர்.

மதுரைக்கு வரும் விஜய்க்கு, விமான நிலையத்தில் பிரமாண்ட வரவேற்பு 
அளிக்கவுள்ளனராம். பின்னர் அங்கிருந்து 150 கார்கள் பின் தொடர விஜய்யை 
அழைத்துச்செல்கின்றனர். விழா மேடைக்கு விஜய்யை பிரமாண்ட பேரணி மூலம்
 அழைத்துச் செல்லவுள்ளனர்.

மேலும் நகர் முழுவதும் விஜய்யின் கட் அவுட்கள், வேலாயுதம் பட பேனர்கள் 
பெருமளவில் வைக்கப்படவுள்ளதாம். விழாவுக்கான ஏற்பாடுகளை படத் தயாரிப்பாளர்
 ஆஸ்கர் ரவிச்சந்திரன் செய்து வருகின்ற போதிலும், ரசிகர்களும் பல்வேறு 
ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.

விழாவில் வேலாயுதம் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களைப் பாடியுள்ள 
பின்னணிப் பாடகர்கள் கலந்து கொண்டு நேரடியாக மேடையில் பாடல்களைப்
 பாடவுள்ளனராம். கலகலப்பான நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

விஜய், நாயகிகள் ஜெனீலியா, ஹன்சிகா மோத்வானி, எஸ்.ஏ.சந்திரசேகர்,
 ஆஸ்கர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வெளியே கேசட்கள், சிடிக்கள் விற்பனைக்கு
 வைக்கப்படவுள்ளன. இதற்கான ஏற்பாடுகளை ஆடியோ உரிமையைப் பெற்றுள்ள
 சோனி மியூசிக் நிறுவனம் செய்துள்ளதாம்.

Saturday, August 20, 2011

விஜய்..? விக்ரம்..? அஜீத்..?!


நடிகர் விஜய்யை இயக்கப் போகும் முன்னணி இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, சீமான், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றவர்களைத் தொடர்ந்து,  இப்போது புதிதாக இணைந்து இருப்பது இயக்குனர் விஜய்.

இயக்குனர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் ஒரு பிரம்மாண்டமான படத்தில் இணைய  இருக்கிறார்களாம். கெளதம் மேனன் - விஜய் இணையும் படத்திற்கு முன்பாக இப்படம் அமையலாம் என்று நடிகர் விஜய்க்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆனால் இயக்குனர் விஜய்க்கு நெருக்கமானவர்களோ அஜீத்துடன் 'கிரீடம்' படத்தில் ஏற்பட்ட நட்பு இன்னும் தொடர்வதால், இருவரும் 'பில்லா -2' படப்பிடிப்பு முடிந்தவுடன்  இணைவது உறுதி என்று கூறுகிறார்கள்.

'தெய்வத்திருமகளு'க்கு கிடைத்த வரவேற்பால் அதே அணி யு.டிவி தயாரிப்பில் ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் இணைகிறார்கள் என்று ஏற்கனவே அறிவித்து இருக்கிறார்கள்.

விஜய் யாரை இயக்குவார் என்பது கூடிய விரைவில் தெரிய வரும்

இடையில் நுழைந்த விஜய் மீண்டும் தள்ளப்பட்ட சீமான்


மார்க்கெட்டில் திடீர் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது தெய்வ திருமகள் இயக்குனர்Vijayவிஜய்க்கு. ’சுட்டுக்’ கொடுப்பதில் மட்டுமல்ல, அதையே சூடாக கொடுப்பதிலும் வல்லவர் என்று நினைத்திருக்கலாம். இந்த டிமாண்ட் நடிகர் விஜய் வரைக்கும் தொற்றியிருப்பதுதான் ஆச்சர்யம்.
தெய்வ திருமகள் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பின் போதே அடிக்கடி அஜீத்தை சந்தித்து கதை பேசி வந்தார் விஜய். எனவே அஜீத்தின் பில்லா-2 வுக்கு பிறகு விஜய்க்குதான் அஜீத்தின் கால்ஷீட் என்று பரவலாக பேசி வந்தார்கள். இல்லையில்லை, யூடிவி தயாரிக்க, மீணடும் விக்ரமும் விஜய்யும் இணைகிறார்கள் என்ற பேச்சும் பரவியது. ஆனால் இவ்விரு தகவல்களையும் வெளுத்துப் போக வைத்திருக்கிறது புது தகவல் ஒன்று.
நடிகர் விஜய்யிடம் ஒரு கதை சொன்னாராம் டைரக்டர் விஜய். அது பிடித்துப் போனதால் நண்பன் முடிந்த கையோடு இதில் நடிப்பதாக வாக்கு கொடுத்திருக்கிறாராம் விஜய். கவுதம் மேனன் படத்தை சற்றே ஒத்தி வைத்துவிட்டு விஜய்யை உள்ளே நுழைத்திருப்பதாகவும் பேச்சிருக்கிறது.
திடீர் திடீரென்று ஏற்படும் திருப்பங்களில் சிக்கி நசுங்கிப் போய் கிடப்பதென்னவோ, செந்தமிழன் சீமான் இயக்குவதாக சொல்லப்பட்ட படம்தான்!

Friday, August 19, 2011

விஜயின் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன? – இயக்குனர் ஜெயம் ராஜா

இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘வேலாயுதம்’ படத்தின் கதை என்ன என்று, அப்படத்தின் இயக்குனரான ஜெயம் ராஜாவிடம் கேட்டோம். அவரோ ஒளிவு மறைவுமின்றி கதையை அழகாக விவரித்தார்.
அப்படி என்னதான்யா வேலாயுதத்துல இருக்குன்னு கேக்கறவங்க தொடர்ந்து படிக்க ஆரம்பிக்கலாம்.
“பவனூர் என்ற கிராமத்தில் வாழும் பால்கார இளைஞன் வேலு. அன்பால் ஊரையே தன் பாச வளையத்துக்குள் கொண்டு வந்தவன். இன்னொரு புறம் தன் தங்கை மேல் உயிரையே வைத்திருக்கும் அண்ணன். அவனையே சுற்றிச்சுற்றி வரும் முறைப்பெண்.
இதையும் தாண்டி அவன் மனதுக்குள் புகுந்து காதல் விதைக்கும் இளம்பெண்.
இவர்களை சுற்றி நிகழும் சுவாரசிய சம்பவங்கள்தான் இப்படத்தின் கதைப் பின்னணி. விஜய்யின் உணர்ச்சிமயமான காட்சிகள் படத்துக்கு பெரிய பிளஸ்சாக இருக்கும்” என்றார்.
விஜய்யின் தங்கையாக சரண்யா மோகன் நடிக்கிறார். கதாநாயகிகளாக ஜெனிலியாவும், ஹன்சிகா மோட்வானியும் நடிக்கிறார்கள். படம் வந்த பிறகு வேலாயுதம் எப்படி என்று தெரிந்து விடும்

அஜித்திற்கு போட்டி விஜய்தான் – ஷாலினி அஜித் பரபரப்பு.!

குழந்தை நட்சத்திரமாக இருந்து கதாநாயகியாக மாறியவர் ஷாலினி. ‘அமர்க்களம்’ படத்தில் அஜித்துடன் நடித்த போது, அவர்களுக்குள் காதல் மலரவே, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அனோவ்ஷ்கா என்ற அழகான மகளை பெற்றெடுத்திருக்கின்றனர்.
திருமணத்திற்குப் பிறகு நடிப்பிற்கு முழுக்கு போட்ட ஷாலினி குடும்பத்தலைவியாகவும், இறகுப்பந்து வீராங்கனையாகவும திகழ்கிறார்.
சிலதினங்களுக்கு முன்பு, தேனியில் மாநில அளவிலான இறகுப் பந்து போட்டி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட ஷாலினி ஒரு பத்திரிகைக்கு பேட்டியளித்திருந்தார். அதில் அஜித் – விஜய் போட்டி பற்றி குறிப்பிட்டிருந்தார். அதை அப்படியே உங்களிடம்…
“சினிமாவில் அஜித்துக்கும் விஜயக்கும் போட்டிதான். அது ஆரோக்கியமான போட்டி. ஆரோக்கியமான போட்டி நல்லதுதான். எதிலும் போட்டி இருக்கணும். ஆனா அவங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். நானும் விஜயின் மனைவியும் நல்ல தோழிகள். எங்க ரெண்டு பேரோட குழந்தைகளும் அப்படித்தான்.’’ என்றார்.

'Velayudham' Original Song List

Velayutham Original Track List :
1. Rathathin Rathamay - Haricharan & Madhumitha
2. Molachu Moonu - Prasanna & Supriya Joshi
3. Chillax - Karthik & Charulatha Mani
4. Mayam Seidhayo - Sangeetha Rajeshwaran
5. Sonna Puriyadhu - Vijay Anthony & Veera Shankar
6. Vela Vela - Vijay Anthony & lux & Mark

Who will it be in Vijay - Murugadoss' next?


These days it seems as though heroines are hard to find. They are either booked with their call sheets over flowing with dates or they are all heaped up in Bollywood! With Vijay and Murugadoss shaking hands and deciding to collaborate for a film, the two are on the look out for that pretty face who would share screen space with 'Ilayathalapathy' in Murugadoss' next.
The director has not finalized his lead lady yet but all that he reveals is that it will be a Bombay-based female artist. While some sections of the media were pointing fingers at Sonam Kapoor and Priyanka Chopra, the director has shunned them as rumours. Yet a few others who are in the field suggest that the role might either go to Shruti Haasan who has already featured in Murugadoss� upcoming '7 Am Arivu' with Suriya, and who has seen Shruti perform before the camera; or Asin who shot up to fame in Bollywood through Murugadoss' Hindi �Ghajini' might bag the offer.
Though there has not been any confirmation about either of these two actresses yet, fans of Vijay are about it. The reason - they love to watch Asin pair up with their matinee idol for the fourth time around if it happens in this film, or they are also game to see their star pair up with Shruti Haasan or the first time ever!

விஜய்க்கு முன்பு ‌‌ஜீவா

விஜய்யை வைத்து யோஹன். அத்தியாயம் ஒன்று படத்தை அடுத்த வருடம் தொடங்குகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். அதற்கு முன்...?

விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இந்தி ‌ரீமேக்கை முடித்து வெளியிட வேண்டும். அப்படியும் நாட்கள் மீந்து போகுமே?

அந்த இடைவெளியில் ‌‌ஜீவாவை வைத்து படமெடுக்க கௌதம் திட்டமிட்டிருப்பதாக‌த் தெ‌ரிகிறது. வந்தான் வென்றான் படத்தை முடித்த ‌‌ஜீவா தற்போது ஷங்க‌ரின் நண்பன் படத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து சூப்பர் ஹீரோவாக நடிக்கும் மிஷ்கினின் முகமூடி இருக்கிறது. ஜனநாதனின் படமும் உள்ளது. இதற்கு நடுவில் கௌதம் படத்திலும் நடிக்கயிருக்கிறார்.

விரைவில் அறிவிப்பை எதிர்பார்க்கலாம். 
Although the first look for Vijay's movie with Gautham Menon, Yohan Adhyayam Ondru, is released, the director seems to have no immediate plans to commence the project. Vijay is right now busy with Nanban and Velayudham.

Industry sources reveal that Gautham, in the interim, is planning for a movie with Jiiva. It is also learnt that the movie will be called Nithya. Jiiva has Mysskin's Mugamudi to work on and Nithya might commence after that.

எம்.ஜி.ஆர்., வழியில் விஜய்... யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது : எஸ்.ஏ.சி., பேட்டி

எம்.ஜி.ஆர்., கடந்து வந்த பாதையில், விஜய் சென்று கொண்டு இருக்கிறார். அவரை யாரும் விலை கொடுத்து வாங்க முடியாது என்று விஜய்யின் தந்தையும், டைரக்டருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் வருகிற ஆகஸ்ட் 28ம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மதுரை மாவட்ட விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் எஸ்.ஏ.சந்திரசேகர் கலந்து ஆலோசித்தார். பின்னர் விழாவுக்கான அனுமதி கோரியும், தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழங்கவும் வலியுறுத்தி, போலீஸ் கமிஷனரை சந்தித்து மனு அளித்தனர்

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சி., ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கி வருகிறார். கடந்த மாதம் கூட சேலத்தில் பெரிய விழா நடந்தது. அதேபோல், இந்தமாதம் 28ம் தேதி மதுரையில் தெண்டரணி தலைவர் மகேஸ்வரன் முயற்சியில், மாநகர தலைவர் தங்கப்பாண்டியன், புறநகர் தலைவர் இன்பராஜ் ஆகியோர் பெரிய விழாவிற்கு ஏற்பாடு செய்து வருகிறார்கள். இந்த விழாவிற்கான இடத்தேர்வு முடிந்து, புதூர் மூன்றுமாவடியில் உள்ள சி.எஸ்.ஐ. மைதானத்தில் விழா நடக்க உள்ளது. நடிகர் விஜய் 92-ல் நடிக்க வந்தார். அப்போது ரசிகர் மன்றமாக ஆரம்பித்து, நற்பணி இயக்கமாக உருவாகி, தற்போது மக்கள் இயக்கமாக மாறி ஒரு சமூக இயக்கமாக செயல்படுகிறது. இந்த இயக்கம் ஏழை மக்களுக்கும், தமிழர்களுக்கும் குரல் கொடுத்து, பல்வேறு உதவிகளை செய்து வருகிறது. ஏழைப் பெண்களுக்கு திருமணம் செய்து வைக்கிறோம். மக்கள் இயக்கத்தின் மூலம் பல நல்ல விஷயங்களை நாங்கள் செய்து வருகிறோம்.

விஜய்க்கு நடிகர் எம்.ஜி.ஆரை ரொம்ப பிடிக்கும். நடிகனாக வாழ்க்கையை தொடங்கி, முதல்வராகி இன்றும் அவரை வாழ்க்கை முடியாமல் உள்ளது. அவர் மறைந்தும், மறையாமல் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். அவர் செய்த நல்ல விஷயங்கள் விஜய்க்கு ரொம்ப பிடிக்கும். எனவே அவரை ஒரு ரோல் மாடலாக வைத்து தான் இது போன்ற நல்ல விஷயங்களை செய்து வருகிறார். விஜய்யின் கடைக்கோடி ரசிகன் படம் பார்க்க கொடுக்கும் பணம், வினியோகஸ்தரிடம் சென்று, அவரிடமிருந்து தயாரிப்பாளரிடம் வந்து, அங்கிருந்து அந்த படத்தில் விஜய் நடிப்பதற்கு சம்பளமாக வருகிறது. ஏழை மக்களிடம் இருந்து வரும் பணத்தில் 10 சதவீதத்தை நல்ல விஷயத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்று விருப்பப்பட்டார். அதன்படி தான் இது போன்ற நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். வேலாயுதம்

விஜய்யின் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்ற திட்டம் உள்ளதா என்று நீங்கள் கேட்டீர்கள். அரசியல் கட்சியாக மாறினால் தான் மக்களுக்கு நல்லது செய்ய முடியுமா? மக்கள் கொடுக்கும் பணத்தை வைத்துத் தான் சமூக உணர்வோடு மக்களுக்கு நலத்திட்ட உதவியாக செய்து வருகிறோம். தற்போது ஆட்சி மாற்றத்தால், சினிமா துறைக்கு விடுதலை கிடைத்துள்ளது. நான் போராட்ட குணம் கொண்டவன். அதே போன்று எனது மகனும் உள்ளான். இந்த சந்திரசேகரரை யாரும் விலை கொடுத்து வாங்கி விட முடியாது. அதே போன்று நான் பெற்று எடுத்த விஜய்யையும் வாங்கி விட முடியாது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Thursday, August 18, 2011

WHAT IS YOHAN - ADHYAYAM ONDRU ABOUT?

yohan-adhyayam-ondru-vijay-17-08-11Yohan – Adhyayam ondru is about bank robbery, sources in Kollywood say. This slick entertainer is to be directed Gautham Menon with Vijay playing the hero. Yohan – Adhyayam ondru is due to commence next year and the posters released recently has already created a huge expectations among the Vijay fans.
Another interesting bit of info circulating in Kollywood is that Amy Jackson may play the female lead in this film. Amy is currently starring in the Hindi version of Vinnaithanndi Varuvaya which is directed by Gautham Menon and he is expected to sign her up again for Yohan – Adhyayam ondru.

Wednesday, August 17, 2011

படம் சூப்பர்.. பிடிங்க 50 சவரன் ! : விஜய்

விஜய் நடித்து வரும் 'வேலாயுதம்' படத்திற்காக இன்று விஜய் - ஜெனிலியா நடனமாடும் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.

இதுவரை எடுத்துள்ள படத்தை விஜய்க்காக பிரத்யேக காட்சி ஒன்றை திரையிட்டு காட்டி இருக்கிறார்கள். படத்தை முழுவதுமாக பார்த்த விஜய், இயக்குனர் ராஜாவை கட்டிப்பிடித்து தனது பாராட்டை தெரிவித்து இருக்கிறார்.

தான் நடித்த 'கில்லி' படத்தை விட இப்படம் அருமையாக வந்துள்ளதாகவும், 'கில்லி' படத்தை விட 'வேலாயுதம்' தனது திரையுலக வாழ்வில் ஒரு மகுடமாக அமையும் என்று இயக்குனர் ராஜாவை புகழ்ந்து இருக்கிறார்.

தனது சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக படக்குழுவினர் 50 பேருக்கு, ஒவ்வொரு நபருக்கும்  1 சவரனில் செயின் ஒன்றை வாங்கி பரிசளித்து இருக்கிறார்.

ஆகஸ்ட் 28ம் தேதி ரசிகர்கள் முன்னிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் நடைபெற இருக்கிறது. இவ்விழா குறித்து கருத்து தெரிவித்துள்ள விஜய் " இப்போது எல்லாம் பாடல்கள் கடைக்கு வரும் முன்பே, இணையத்தில் பாடல்களை வெளியிட்டு விடுகிறார்கள். கண்டிப்பாக எனது ரசிகர்கள் அனைவரும் ஒரிஜினல் சி.டி.க்களை மட்டுமே வாங்க வேண்டும் " என்று கூறியுள்ளார்

'Nanban' status quo

Nanban', the Tamil remake of Bollywood blockbuster '3 Idiots', marks director Shankar's first ever directorial remake venture. The film is taking shape at a fast pace and is gearing up for a Diwali release.

The latest is that some of the first few scenes from the film were canned in an apartment in Chennai, and the scenes are said to be set in Jiiva's house in the film.

The scenes featuring Vijay and Jiiva are wrapped and the post-production work on the film has begun side by side. As earlier reported, Andrea Jeremiah will be dubbing for Ileana D' Cruz.

The film features an ensemble of star cast including Ilayathalapathy Vijay, Jiiva, Srikanth, Sathyaraj, Ileana D� Cruz, Raghava Lawrence and SJ Suriya. Raghava Lawerence's special appearance will bring out the main twist in the plot.

The director also expressed that Lawrence has a natural flair for comedy and the scenes between him and Ilayathalapathy Vijay will be one of the highlights in the film. So what do you movie buffs feel about this pair? Ready for some rib-tickling comedy?

நண்பனில் விஜய்யுடன் இணையும் லாரன்ஸ்?

Vijay and Ragava Lawrenceவிஜய் - ஜீவா - ஸ்ரீகாந்த் நடிக்க ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் ரீமேக் நண்பனில் புதிதாக இணைகிறார் ராகவா லாரன்ஸ்.

நடன இயக்குநர் என்பதைத் தாண்டி, நடிகராக பெரிய அங்கீகாரம் கிடைக்காதவராக இருந்தவர் லாரன்ஸ். ஆனால் முன் -2 அவரது கேரியரையே புரட்டிப் போட்டுவிட்டது.

இன்று தமிழ் சினிமாவில் அதிக தயாரிப்பாளர்கள் மொய்க்கும் நடிகர் கம் இயக்குநர் லாரன்ஸ்தான். 'ஹீரோவாக நடிங்க, இல்லன்னா நடிச்சு இயக்குங்க... எப்படியோ நம்ம கம்பெனிக்கு ஒரு படம் பண்ணா போதும்' என ராகவா லாரன்ஸிடம் நச்சரிக்கும் பிரபல தயாரிப்பாளர்கள் நிறைய.

ஆனால் லாரன்ஸ் மிகக் கவனமாக புதிய படங்களைத் தேர்வு செய்து வருகிறார். முனி - 3 தொடரும் என படத்தில் போட்டிருந்தாலும், இப்போதைக்கு வேறு சில படங்களை தமிழ் மற்றும் தெலுங்கில் செய்த பிறகே முனி 3-ம் பாகத்தை இயக்கப் போகிறாராம்.

இதற்கிடையே, நண்பன் படத்தில் முக்கிய வேடம் ஒன்றில் நடிக்குமாறு லாரன்ஸை கேட்டுக் கொண்டாராம் இயக்குநர் ஷங்கர். இந்த வாய்ப்புக்கு மறுப்பு சொல்லாமல் உடனே ஒப்புக் கொண்ட லாரன்ஸ், விரைவில் படப்பிடிப்பில் பங்கேற்கவிருக்கிறார்.

லாரன்ஸும் விஜய்யும் திருமலை படத்தில் இணைந்து நடித்துள்ளனர்.

நண்பனில் ஏற்கெனவே எஸ்ஜே சூர்யா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Vijay and Genelia are Shooting For Velayutham Song

Vijay and Genelia have been busy these past few days, getting their groove on for a spectacular track by Vijay Antony. Apparently the beats are super catchy for this awesome number and everyone on the sets just want to get up and dance for it. The song is for Velayudham and the entire team had a wonderful time filming it. Vijay and Genelia especially are satisfied as they feel their hard work will show on screen and the fans are going to love it.
This film is going to be a pure commercial entertainer and Vijay fans are going to lap it up if insiders are to be believed. Vijay and Genelia did Sachein together and there were some super hit tracks in that film like Gundu Maanga, Kan Moodi, and Vadi Vadi. Looks like they are all set to repeat the magic together.

Former Vijay's heroine is his new heroine

Priyanka Chopra did her first film in Tamil, opposite Vijay, fresh after winning the Miss World crown. The film was Tamizhan and the duo even sang a song together for it called Ullathai Killathey. Vijay must have been her lucky charm because her career really took off after that film. A couple of films with Akshay Kumar later, Priyanka became one of the hottest stars in Bollywood and even went on to win the National award for her film, Fashion.
Now it looks like Priyanka will work with Vijay again for his film with Murugadoss. Apparently the script wowed Vijay and Priyanka also fell in love with her role and was eager to team up with her first co - star. Besides Murugadoss is a big name in Bollywood after Ghajini with Aamir Khan became a blockbuster and launched Asin's career north of the Vindhyas. If this trio come together successfully we are sure that there will be fireworks.