Sunday, June 30, 2013

யூ டியூபை சினிமா நம்பலாமா?

img1130629016_1_1ஃபர்ஸ்ட் காப்பி முடிந்ததும் பிரதியை சாமிக்கு முன் வைத்து கும்பிடுகிறார்களோ இல்லையோ… ட்ரெய்லர் கட் செய்து யூ டியூபில் ஏற்றிவிடுகிறார்கள். அதன் பிறகு ஒரே நாளில் இரண்டு லட்சம் பேர் பார்த்தார்கள், எட்டு லட்சம் பேர் லைக்கினார்கள், பத்து லட்சம் பேர் ஷே‌ரினார்கள் என்று ஒரே புள்ளிவிவர கணக்குகள்.
விஜய்யின் தலைவா படத்தின் ட்ரெய்லரை போட்ட உடனே பத்து லட்சம் பேர் பார்த்தார்களாம். அ‌ஜீத்தின் புதிய பட ட்ரெய்லர் அதை தாண்ட வேண்டும் என அவ‌ரின் ரசிகர்கள் இப்போதே கீ போர்டை தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஒருபுறம் என்றால், பெயர் தெ‌ரியாத ஹீரோக்களின் படங்களுக்கும் யூ டியூப் புள்ளி விவரங்கள்தான் விளம்பரத்துக்கு உதவுகிறது. சில்லுன்னு ஒரு காதல் படத்தை இயக்கிய கிருஷ்ணா நெடுஞ்சாலை என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஆ‌ரி (சட்டுன்னு பார்த்தால் தாடியும் மீசையுமாக கும்கி விக்ரம் பிரபு போலவே இருக்கிறார்) ஹீரோவாக நடித்திருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லரை இதுவரை அஞ்சு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் யூ டியூபில் பார்த்திருக்கிறார்களாம். படம் ஹிட்டாகும் என்பதற்கு இந்த புள்ளி விவரத்தைதான் தூக்கி முன்னால் போடுகிறார்கள்.
தேர்தல் பிரச்சாரத்துக்கு நடிகையை பார்க்க வரும் கூட்டம் வோட்டு போடும் என்று நம்புவதை போலதான் இதுவும். யூ டியூபில் ட்ரெய்லர் பார்த்தவர்கள் அதே டியூபில் மொத்தப் படத்தையும் பார்க்க ஆசைப்படுவார்களே… இந்த கோணத்தில் ஏன் இன்னும் யோசனை பண்ணலை?

Monday, June 24, 2013

அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான்: வேந்தர் மூவிஸ் டி. சிவா

ரஜினிகாந்திற்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் என்றால் அது விஜய் தான் என்று வேந்தர் மூவிஸ் டி. சிவா தெரிவித்துள்ளார். 

ஏ.எல். விஜய் இயக்கத்தில் விஜய், அமலா பால் நடித்துள்ள தலைவா படத்தின் வினியோக உரிமையை வேந்தர் மூவிஸ் வாங்கியுள்ளது. படத்தின் இசை உலக இசை தினமான கடந்த வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது. பாடல்கள் சூப்பர் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் புகழ்ந்து தள்ளியிருக்கிறார்கள்.

48 மணிநேரத்தில் விற்பனை


 தலைவா படத்தை தயாரிப்பாளரிடம் இருந்து வாங்கிய 48 மணிநேரத்திற்குள் அது தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் விற்றுவிட்டதாக வேந்தர் மூவிஸின் டி. சிவா தெரிவித்துள்ளார்.


அடுத்த சூப்பர் ஸ்டார் 

ரஜினிகாந்துக்கு பிறகு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய் தான் என்பது அனைவருக்கும் தெரியும் என்று சிவா கூறினார். அவர் மேலும் கூறகையில், ரஜினி போன்று விஜய்க்கும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்றார்


4வது ஹிட்டா? 

காவலன், நண்பன் மற்றும் துப்பாக்கி ஆகிய 3 தொடர் ஹிட் படங்களை கொடுத்தார் விஜய். இந்நிலையில் தலைவாவும் ஹிட்டாகும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.



Sunday, June 23, 2013

தலைவா... முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!

அசினுக்குப் பிறகு முதல் முறையாக சொந்தக் குரலில் பேசிய நடிகை என்ற 'பெருமை'யைப் பெற்றுள்ளார் நடிகை அமலா பால். 

அமலா பாலுக்கு தமிழ் நன்கு தெரியும் என்றாலும், அவர் இதுவரை நடித்த படங்களில் இரவல் குரல்தான்.தலைவா... முதல் முறையாக சொந்தக் குரலில் டப்பிங் பேசிய அமலா!
ஆனால் விஜய் நடிக்கும் தலைவா படத்தில் மட்டும் முதல் முறையாக தன் குரலிலேயே டப்பிங் பேசியுள்ளார். 

இதற்காக தொடர்ந்து நான்கு நாட்கள் இயக்குநர் விஜய்யிடம் தமிழ் ட்யூஷன் கற்றுக் கொண்டாராம் அமலா.

 பின்னர் எதிர்ப்பார்த்ததை விட வேகமாகவே டப்பிங் பேசி முடித்திருக்கிறார். அசினுக்குப் பிறகு தமிழில் சொந்தக் குரலில் டப்பிங் பேசும் ஒரே மலையாள நடிகை என்ற பெருமை அமலா பாலுக்குக் கிடைத்திருக்கிறது. 

இதுகுறித்து இயக்குநர் விஜய் கூறுகையில், "அமலாவுக்கு நல்ல குரல். உச்சரிப்பில் மட்டும் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. என் ஹீரோயின்கள் அனைவரும் சொந்தக் குரலில் தமிழ் பேச வேண்டும் என்று விரும்புவேன். அனுஷ்காதான் இதில் மிஸ்ஸாகிவிட்டார்," என்றார்.

ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்தளித்து பிறந்த நாள் கொண்டாடிய விஜய்!

22-vijay-birthday32-300கு ஏகப்பட்ட இலவசப் பொருள்கள், அன்னதானம் என வழங்கி தனது பிறந்த நாளைக் கொண்டாடி வந்த விஜய், இந்த முறை அமைதியாக ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரியாணி விருந்து அளித்து பிறந்த நாளை ‘அடக்கமாகக்’ கொண்டாடினார்.
இன்று விஜய்யின் பிறந்த நாளை அவரது ரசிகர்கள் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் இந்த முறை விமரிசையாக பிறந்த நாள் கொண்டாடவில்லை என்று கூறப்படுகிறது.
இன்று காலையிலேயே தன் பெற்றோரைச் சந்தித்து ஆசி பெற்ற விஜய், பின்னர் ஜில்லா படப்பிடிப்புக்குக் கிளம்பிப் போய்விட்ட விஜய், அங்கு படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடினார். அவருக்காக படக்குழுவினர் கேக் வரவழைத்திருந்தனர்.
கேக் வெட்டிய பிறகு, அனைவருக்கும் தன் கையாலேயே பிரியாணி பரிமாறினார் விஜய்.

Thursday, June 20, 2013

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?

பி. வாசுவுடன் ஹாலிவுட் செல்ல மறுத்த விஜய்?பி. வாசு இயக்கும் ஹாலிவுட் படத்தில் நடிக்க விஜய் மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இயக்குனர் பி. வாசு கரி இன் லவ் என்ற ஹாலிவுட் படத்தை இயக்குகிறார். படத்தின் நாயகி சோனம் கபூர். இதில் சோனமின் தந்தை அனில் கபூரும் நடிக்கிறாராம்.

இது குறித்து பி. வாசு கூறுகையில்,

கரி இன் லவ் தெய்வீக சக்திக்கும், தீய சக்திக்கும் இடையேயான பேய் படம். இதில் இந்திய நடிகர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். படப்பிடிப்பு மதுரை, காஞ்சீபுரம், மைசூர், கேரளா மற்றும் வெளிநாட்டில் நடக்கிறது என்றார். 

ஹாலிவுட் கனவுகளுடன் இருக்கும் இந்திய இளைஞன் ஒருவன் அமெரிக்காவில் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு ஆவி இருந்து கொண்டு வெளியே செல்ல மறுக்கிறது. சிறு வயிதிலேயே முடிவான நாயகன், நாயகியின் திருமணம் என்று கதை செல்கிறது. சோனம் கபூர் தான் நாயகி. அவரது தந்தை அனில் கபூர் அமெரிக்காவில் தொழில் அதிபராக வருகிறார். 

படத்தில் ஹாலிவுட் நடிகர் ஜான் வொயிட், நிக் நோல்டி, டினா ஃபே, சூசன் என்கிற சத்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

சந்திரமுகி படத்தைப் பார்த்த பிறகு கரி இன் லவ் படத்தை இயக்க பி. வாசு தான் சரியானவர் என்று நினைத்ததாக தயாரிப்பாளர் ராஜ் திருச்செல்வன் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் செட்டிலான இலங்கை தமிழரான திருச்செல்வன் ஏற்கனவே 2 ஹாலிவுட் படங்களை தயாரித்துள்ளார். வரும் ஆகஸ்ட் அல்லது செப்டம்பரில் படப்பிடிப்பு துவங்குமாம். படத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விஜய் நாயகனாக நடிக்கிறார் என்று இருக்கிறது. ஆனால் விஜய் நடிக்க மறுத்துவிட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து விஜய்க்கு பதிலாக வேறு ஒரு நடிகரை நடிக்க வைக்க முயற்சி நடந்து வருகிறதாம்.


விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்

விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்

விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்.

Download Tamil Mp3 Songs: Thalaivaa

Download Tamil Mp3 Songs: Thalaivaa

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்பு

நாளை தலைவா இசை... விஜய் - அமலா பால் பங்கேற்புவிஜய் நடித்துள்ள தலைவா படத்தின் இசை நாளை வெளியாகிறது. நாளை மறுதினம் விஜய் பிறந்த தினம் என்பதால், நாளை இசை வெளியிட்டு விஜய் ரசிகர்களை குஷிப்படுத்தவிருக்கிறார்கள். 

இயக்குநர் விஜய்யும் - நடிகர் விஜய்யும் முதன் முதலாக கைகோர்த்த படம் தலைவா. ஜிவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். 

விஜய்க்கு ஜோடியாக அமலா பால் நடித்துள்ளார். சத்யராஜ் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தின் இசை வெளியீடு நாளை மாலை சென்னையில் நடக்கிறது. 

தாஜ் கோரமண்டல் நட்சத்திர ஹோட்டலில் நடக்கும் இந்த நிகழ்ச்சியில் விஜய், அமலா பால், சத்யராஜ் உள்பட பலரும் கலந்து கொள்கின்றனர். தலைவா படத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

 விஜய் பாடும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடல் வெளியீட்டுக்கு முன்பே பிரபலமடைந்துள்ளது. இந்தப் படத்தின் விற்பனை உரிமை பெரும் விலைக்கு விற்கப்பட்டுள்ளது. வேந்தர் மூவீஸ் இதனை வெளியிடுகிறது.

Wednesday, June 19, 2013

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!

விஜய்யுடன் ஆட்டம் போடும் ஜிவி பிரகாஷ்!தலைவா படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமாருடன் நடனம் ஆடுகிறார் ஜிவி பிரகாஷ் குமார். 

இசையமைப்பாளர்கள் அனைவருமே இப்போது திரையில் தோன்ற அல்லது நடனமாட ஆரம்பித்துள்ளனர். 

இசைஞானி இளையராஜா கூட ஒரு படத்தில் முழுப் பாடலுக்கும் தோன்றுகிறார். அவர் மகன் யுவன் சங்கர் ராஜாவை நிறைய படங்களில் பாடலுக்கு நடனமாட வைக்கின்றனர் இயக்குநர்கள். 

ஏ ஆர் ரஹ்மான் ஏற்கெனவே தனி இசை வீடியோவே வெளியிட்டுள்ளார். அதில் அவர் நடனமும் இடம்பெற்றுள்ளது. அடுத்து இமானும் அதே போல ஒரு பாடலுக்கு தோன்றுகிறார். தேவி ஸ்ரீ பிரசாத்தும் நடிக்கிறார். 

விஜய் ஆன்டனியோ முழுப் படத்திலும் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் பட்டியலில் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரும் இணைகிறார். விஜய் நடிக்கும் தலைவா படத்தில், ஒரு பாடலுக்கு அவருடன் இணைந்து ஆடுகிறார். சமீபத்தில் இணையதளங்களில் லீக்கான 'வாங்கண்ணா...' என்ற பாடலுக்குத்தான் இருவரும் ஆடுகிறார்களாம். 

தலைவா பட ஆடியோ, விஜய்யின் பிறந்த நாளான 22-ம் தேதிக்கு ஒரு நாள் முன்பாக வெளியாகிறது.

விஜய் சின்சியர், சூர்யா சிங்கம், சிம்பு வாலு, சந்தானம் அய்யய்யோ

ஹன்சிகா தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

இன்றைய தேதியில் கோலிவுட்டின் நம்பர் ஒன் நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார், நடித்தும் வருகிறார். அவர் சித்தார்த்துடன் ஜோடி சேர்ந்து நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

அவர் சூர்யாவுடன் நடித்துள்ள சிங்கம் 2 விரைவில் ரிலீஸ் ஆகிறது. பிரியாணி பட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இந்நிலையில் அவர் தான் பணிபுரிந்த நடிகர்கள் பற்றி மனம் திறந்துள்ளார்.

விஜய்


 தன்னுடைய வேலாயுதம் பட நாயகன் விஜய் சின்சியர் என்று தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

சூர்யா 

சூர்யா எப்படி என்று ஹன்சிகாவிடம் கேட்டதற்கு சிங்கம் என்றார்.
ரவி 

எங்கேயும் காதல் நாயகன் ஜெயம் ரவி நாட்டி(குறும்புத்தனம்) என்று தெரிவித்துள்ளார்.

சிம்பு 

சிம்பு எப்படிப்பட்டவர் என்று கேட்டதற்கு வாலு என்று பதில் கூறினார் ஹன்சிகா.

ஆர்யா

சேட்டை நாயகன் ஆர்யா என்று கேட்டதற்கு ஃபன்(வேடிக்கையானவர்) என்று ஹன்சிகா தெரிவித்தார்.

சந்தானம் 

ஹன்சிகாவின் பெரும்பாலான படங்களில் நடித்து வரும் சந்தானம் பற்றி கேட்டதற்கு அவரின் ரியாக்ஷன் அய்யய்யோ. அவரைப் பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும் என்றார்.



விஜய் - ஜிவி முதல் காம்பினேஷனில் தலைவா... பாட்டு சாம்பிள் கேட்டீங்களா?

விஜய்- ஜிவி பிரகாஷ் குமாரின் முதல் காம்பினேஷனில் உருவாகியுள்ள தலைவா படப் பாடல்கள் வரும் ஜூன் 21-ம் தேதி வெளியாகின்றன. 

அதற்கு முன் அனைத்துப் பாடல்களின் சாம்பிள் துணுக்குகளை டீஸராக வெளியிட்டுள்ளனர், பாடல்களின் உரிமையைப் பெற்றுள்ள சோனி நிறுவனம். அமேசான் இணைய தளத்தில் கேட்கக் கிடைக்கும் இந்த சாம்பிள் பாடல்கள் குறித்து ஒரு பார்வை...

6 பாடல்கள்..

இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அனைத்துப் பாடல்களையும் நா முத்துகுமார் எழுதியுள்ளார். ஜிவி பிரகாஷ் குமா்ர் இசையமைத்துள்ளார்
.


வாங்கண்ணா வணக்கங்கண்ணா...

இந்த ஆறு பாடல்களில் கேட்டதும் பிடித்துப் போகும் பாடல், விஜய் - சந்தானம் பாடியுள்ள வாங்கண்ணா வணக்கங்கண்ணா.. மை சாங்க நீ கேளுங்கண்ணா... பாடல்தான். முதல் முறை கேட்கும்போதே நினைவில் நிற்கிறது. இந்தப் பாடல்தான் இணையதங்களில் வெளியாகிவிட்டதாக சில தினங்களுக்கு முன் தலைவா குழுவினர் போலீசில் புகார் செய்திருந்தனர்.


தமிழ்ப் பசங்க... 

தமிழோடுதானே என் சங்கீதங்க... என்று ஆரம்பிக்கிறது இந்த தமிழ்ப் பசங்க பாட்டு. பென்னி தயாள், ஷீஸே பாடியுள்ளனர். சுமாராக இருக்கிறது


யார் இந்த சாலை ஓரம்... 

ஜிவி பிரகாஷ் குமாரும் சைந்தவியும் பாடியுள்ள டூயட் பாட்டு, யார் இந்த சாலை ஓரம். கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. இசையில் புதுமை என்று எதுவுமில்லை.



சொல் சொல்... 

கொஞ்சம் வேகமான ரொமான்டிக் பாட்டு இந்த சொல் சொல்.... விஜய் பிரகாஷ், அபஸ் ஜோத்புர்கர், மேகா பாடியுள்ளனர். முதல் முறை கேட்கும்போது பெரிதாக கவரவில்லை. முழுப் பாடலும் வெளியான பிறகுதான் தெரியும்.



தி எக்ஸ்டஸி ஆஃப் டான்ஸ்

 இது தீம் மியூசிக் மாதிரி வருகிறது. சென்னை சிம்பொனியுடன் இணைந்து கிரண் பாடியுள்ளார். ஆனால் ஏற்கெனவே புன்னகை மன்னன், 7 ஜி ரெயின்போ காலனி படங்களில் கேட்ட தீம் மியூசிக் மாதிரிதான் இருக்கிறது.



தலைவா தலைவா 

இதுதான் டைட்டில் பாட்டு மாதிரி தெரிகிறது. வழக்கம் போல ஆக்ஷன் ஹீரோவுக்கான ஒரு ரெடிமேட் பாடல். ஹரிசரண், பூஜா, ஜியா வுல் அக் பாடியுள்ளனர். ஹே ராமில் வரும் 'ராம் ராம்...' பாடலை நினைவூட்டுகிறது அந்த பீட்.





Monday, June 17, 2013

விஜய்யை ஹாலிவுட்டுக்கு அழைத்துச் செல்லும் பி. வாசு?

P Vasu Takes Vijay Hollywood இயக்குனர் பி. வாசு ஹாலிவுட் படத்தை எடுக்கிறாராம். அதில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்கப் போகிறார் என்று கூறப்படுகிறது. 

இயக்குனர் பி. வாசு தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களை எடுத்து வெற்றி கண்டவர். அவர் தற்போது ஹாலிவுட் படம் ஒன்றை எடுக்கவிருக்கிறாராம். படத்திற்கு கரி ஆஃப் லவ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாம்.

 ஹாலிவுட் போகும் வாசு தன்னுடன் இளைய தளபதி விஜய்யை அழைத்துச் செல்ல விரும்புகிறாராம். அதாவது தனது ஹாலிவுட் படத்தில் விஜய்யை ஹீரோவாக நடிக்க வைக்க முயற்சி செய்து வருகிறாராம். விஜய்க்கு ஜோடியாக சோனம் கபூரை நடிக்க வைக்க வாசு விரும்புகிறாராம். 

ஆனால் இது குறித்து வாசு இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

Friday, June 14, 2013

நலத்திட்ட விழா ரத்தானதற்கு காரணம் யார்? மௌனம் கலைத்தார் விஜய்

Why Did My Function Get Cancelled Explains Vijay தனது நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவை அரசியல் கட்சி விழா என்று யாரோ தவறான தகவல் கொடுத்ததால் கல்லூரி நிர்வாகத்தினர் தான் விழாவுக்கு தடை போட்டதாக விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி ரூ. 1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரி வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் கடந்த 8ம் தேதி நடப்பதாக இருந்தது. ஆனால் விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டது. விழா ரத்தானதற்கு அரசியல் கட்சிகள் காரணம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் இது குறித்து விஜய் மௌனம் கலைத்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில்,

எனக்கு சமூகத்தின் மீது அக்கறை இருக்கிறது. எனது ரசிகர்களுக்கு அதே உணர்வு உள்ளது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது, பெண்களுக்கு திருமணம் செய்து வைப்பது, ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்து, ரத்ததானம் செய்வது என்று பல நல்ல காரியங்களை நான் செய்து கொண்டிருக்கிறேன். என் ரசிகர்களும் என்னைப் போன்று பிறருக்கு உதவி செய்து வருகிறார்கள்.

என் பிறந்தநாளில் நான் மட்டுமின்றி ஏழைகளும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் தான் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய 3 மாநிலங்களைச் சேர்ந்த 3,900 ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க நினைத்தேன். இந்த விழாவை நடத்த மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியில் இடம் கேட்டோம். அவர்களும் அளித்தார்கள். ஆனால் நான் நல்ல காரியங்கள் செய்வது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் நான் கூறாதவற்றை, அறிவிக்காத செய்திகளை எல்லாம் வைத்து வதந்தியை பரப்பினார்கள். பிறந்தநாளைக் கூட நிம்மதியாக கொண்டாட முடியவில்லை.

என் பிறந்தநாள் விழா நிகழ்ச்சி என்று கூறித் தான் எங்கள் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த் கல்லூரி நிர்வாகத்திடம் அனுமதி பெற்றார். ஆனால் அந்த நிகழ்ச்சி என் அரசியல் பிரவேசத்திற்கு அடித்தளம் போடும் நிகழ்ச்சி என்று சிலர் வதந்தியை கிளப்பிவிட்டார்கள். அதை கல்லூரி நிர்வாகம் நம்பி அனுமதி மறுத்துவிட்டது. எங்களுக்கு வேண்டாதவர்கள் தான் இப்படி தவறான தகவல் கொடுத்துள்ளார்கள் என்று எவ்வளவோ எடுத்துக் கூறியும் கல்லூரி நிர்வாகம் நம்பவில்லை. காவல் துறையினரும் அரசியல் விழா என்று நினைத்து தான் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார்கள் போன்று.

இந்த விழாவுக்காக நிர்வாகிகள் இரவு பகல் பார்க்காமல் வேலை செய்தார்கள். அது எல்லாம் அவர்களின் சொந்த பணம். விழாவில் வழங்க ஆட்டோ, கம்ப்யூட்டர், தையல் எந்திரம், மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி எல்லாம் பல லட்சம் ரூபாய் செலவு செய்து வாங்கிவிட்டனர். ரசிகர்களை நினைத்தால் தான் வருத்தமாக உள்ளது. அவர்கள் செலவு செய்த பணத்தை நான் அவர்களுக்கு கொடுத்துவிடுவேன். ஆனால் ஏமாற்றம் மற்றும் மனவேதனைக்கு என்னால் எப்படி மருந்து போட முடியும்? இதற்கு யார் பதில் சொல்வார்கள்?

நடிப்பது தான் என் தொழில். ஓய்வின்றி நடித்துக் கொண்டிருக்கிறேன். கடவுளும், ரசிகர்களும் என்னுடன் இருக்கிறார்கள். கிடைத்த வெற்றியை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. அதற்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இந்நேரத்தில் அரசியலை பற்றி யோசிக்கக் கூட எனக்கு நேரம் இல்லை.
ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்போம் என்று பேரறிஞர் அண்ணா தெரிவித்தார். என் விழா மட்டும் நடந்திருந்தால் 3.900 ஏழைகள் சிரித்திருப்பார்கள். ஏழைகளின் சிரிப்பை அழித்தவர்களுக்கு நன்றி. நான் வேறு என்ன கூற முடியுங்ணா என்றார்.

Wednesday, June 12, 2013

Vijay Wins Vikatan Poll “Who has more Fans at Present in Tamil Cinema?”

Vijay Wins Vikatan Poll
Ilayathalapathy Vijay has Won the Prestigious Poll conducted by VIKATAN with 44% of Votes. Vikatan conducted a poll on current Actors to see, “Who has more Fans at Present in Tamil Cinema?”

In the poll Vijay won with a massive 44% of vote. Ajith came second with 39% of votes and Rajini came third with 9% of votes. This poll once again proves the mass of Vijay.

Vijay also recently won the Favourite Hero of the Year Award at Vijay Awards 2013, which was also done through online voting. Vijay Awards 2013 and Vikatan clearly show that Vijay is king of Kollywood now and he has a huge fan following in Tamil Nadu.

கோலிவுட்டில் விஜய் குரலுக்கு எவ்வளவு கிராக்கி தெரியுமா?

12-1371032930-thuppakki34-600இளைய தளபதி விஜய்க்கு படங்களில் பாட ஏராளமான வாய்ப்புகள் வந்து குவிகிறதாம். விஜய் நன்றாக பாடுவார் என்று நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய வேண்டியதில்லை. அவர் தன் படங்களில் தனக்காக பாடியதுடன் பிறருக்காவும் பாடியுள்ளார்.
அதிலும் குறிப்பாக சூர்யாவுக்காக அவர் பாடிய நான் தம்மடிக்கிற ஸ்டைல பாத்து தனலட்சுமி விரும்புச்சு பாடல் மிகவும் பிரபலமானது ஆகும்.

Monday, June 10, 2013

விஜய் என் தம்பி மாதிரி: மோகன்லால்

Vijay Has Lot Fans Kerala Mohanlal இளைய தளபதி விஜய்க்கு கேரளாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்று மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் தெரிவித்துள்ளார். 

நேசன் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ஜில்லா படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்து வருகிறார். அவர் விஜய்யுடன் முதன்முதலாக சேர்ந்து நடிக்கும் படம் இது தான். 

இந்நிலையில் அவர் ஜில்லா பட அனுபவம் பற்றி கூறுகையில், 

ஜில்லா படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். படப்பிடிப்பு காரைக்குடியில் துவங்கியது. தற்போது சென்னையில் நடிக்கும் படப்பிடிப்பில் நானும், விஜய்யும் வரும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அவருடன் சேர்ந்து நடிப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவருக்கும், எனக்கும் ஏற்கனவே அறிமுகம் உள்ளது. நாங்கள் சில நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளோம். ஆனால் அதிகம் பேசியதில்லை. 

விஜய் என் தம்பி போல உணர்கிறேன். மனிதநேயமிக்க அவரை எனக்கு மிகவும் பிடிக்கும். தமிழகத்தில் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது ஆச்சரியம் அல்ல. கேரளாவிலும் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் என்றார்.

Sunday, June 9, 2013

விஜய்யின் தலைவா பட ரிலீஸ் ஆகஸ்ட்டுக்கு தள்ளிப்போனது!

04-thalaiva--movuie-300துப்பாக்கியைத் தொடர்ந்து விஜய் நடித்துள்ள படம் தலைவா. மதராசப்பட்டினம் விஜய் இயக்கியுள்ள இதன் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்து விட்டதால், அடுத்து நேசன் இயக்கும் ஜில்லா படத்தில் நடித்து வருகிறார் விஜய். அதோடு, தலைவா படத்தின் இறுதிகட்டப்பணிகள் வேகமாக நடந்து வந்த நிலையில், விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ந்தேதி படத்தை வெளியிட ஏற்கனவே திட்டமிட்டிருந்தனர். ஆனால், டப்பிங், இசைக்கோர்ப்பு பணிகள் இன்னும் முடிவடையவில்லையாம்.
அதனால், இம்மாத தொடக்கத்திலேயே ஆடியோவை ரிலீஸ் செய்து விட்டு, 22-ந்தேதி படத்தை வெளியிட திட்டமிட்டிருந்தவர்கள் இப்போது படத்தின் ஆடியோ வெளியீட்டு தேதியை ஜூன் 22-ந்தேதிக்கு மாற்றி விட்டனர். அதோடு, படத்தின் ரிலீஸ் தேதியை ஆகஸ்ட் 9-ந்தேதிக்கு மாற்றியுள்ளனர். இதனால் இம்மாதம் தலைவா தியேட்டருக்கு வந்து விடும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த விஜய் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Friday, June 7, 2013

விஜய் நலத்திட்ட விழா கடைசி நேரத்தில் ரத்து ஏன்?: பரபரப்பு தகவல்கள்

Why Did Vijay S Function Get Cancelled நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி சென்னையில் நடக்கவிருந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ரத்து செய்யப்பட்டதற்கான காரணங்கள் தெரிய வந்துள்ளது.

 நடிகர் விஜய்யின் பிறந்தநாளையொட்டி நாளை சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக நேற்று அறிவிக்கப்பட்டது. விழா திடீர் என்று ரத்து செய்யப்பட்டதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகிறது.

 இது குறித்து அகில இந்திய விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் கூறுகையில், 

வரும் 8ம் தேதி விஜய் ரூ.1 கோடி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடக்கவிருந்தது. ஆனால் அது ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் வெளியூர்களில் இருந்து ரசிகர்கள் யாரும் சென்னைக்கு வர வேண்டாம் என்றார்.

 இந்த விழாவுக்காக மீனம்பாக்கம் ஜெயின் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் கூட நடந்து வந்தன. மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அருகில் உள்ள இந்த கல்லூரியில் விழா நடந்தால் விஜய் ரசிகர்கள் குவிந்து போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்று கருதிய போலீசார் விழாவுக்கு அனுமதி மறுத்ததாகக் கூறப்படுகிறது. 

முதலில் சிறிய அளவில் விழா நடத்த திட்டமிட்டனர். பின்னர் மாநிலம் முழுவதும் இருந்து ரசிகர்கள் வந்து கலந்து கொள்ளும் பிரமாண்ட விழாவாக நடத்த திட்டமிட்டதால் தான் இத்தனை குளறுபடியாம். தமிழகம் முழுவதும் இருந்து ரசிகர்கள் திரண்டு வருவதால் பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்ததாம். அதனால் பாதுகாப்பு காரணங்களை மனதில் வைத்து போலீசார் அனுமதி மறுத்துவிட்டார்களாம்.

 மேலும் நாளை அதிமுக தலைமைக் கழகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதனால் விஜய் விழாவுக்கு பாதுகாப்பு அளிப்பதில் குளறுபடி ஏற்படலாம் என்று கருதியும் போலீசார் அனுமதி மறுத்தனராம். மேலும் அரசியல் கட்சியின் தலையீட்டாலும் தான் இந்த விழா ரத்து செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.

இளைய தளபதி விஜய்க்கு சூப்பர் ஜோடி யாரு?

நாளைய தீர்ப்பு படத்தில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் விஜய் 20 ஆண்டுகளாக தமிழ் திரை உலகில் முன்னணி கதாநாயகனாக நடித்து வருகிறார். 

விஜய்யின் முதல் கதாநாயகி கீர்த்தனா தொடங்கி ஜில்லா கதாநாயகி காஜல் அகர்வால் வரை பத்துக்கும் மேற்பட்ட கதாநாயகிகள் ஜோடி சேர்ந்து நடித்துள்ளனர். 

எந்த நடிகையுடன் அதிக அளவில் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிறதோ அந்த நடிகையுடன் அதிக அளவில் விஜய் தொடர்ந்து நடிப்பார். அந்த வகையில் அசினும், திரிஷாவும்தான் விஜய்க்கு சிறந்த ஜோடி என்று ரசிகர்கள் கூறியுள்ளனர். விஜய் உடன் ஜோடி சேர்ந்த நடிகைகள் பற்றி நீங்களும் தெரிந்து கொள்ளுங்களேன்.

விஜய் – அசின் 


அசினுடன் சிவகாசி, போக்கிரி, காவலன் போன்ற படங்களில் ஜோடி சேர்ந்தார் விஜய், இந்த ஜோடிதான் டாப் லிஸ்ட்டில் நம்பர் 1 என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். 43 சதவிகிதம் ரசிகர்கள் அசின்தான் விஜய்க்கு ஏற்ற ஜோடி என்று கூறியுள்ளனர்.




விஜய் – திரிஷா

 கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி என திரிஷா உடன் இணைந்து நடித்தார் விஜய். இந்த ஜோடி சூப்பர் ஹிட் என்பது பெரும்பாலான ரசிகர்களின் கணிப்பு.


விஜய் – ஷாலினி 

காதலுக்கு மரியாதை, கண்ணுக்குள் நிலவு என இரண்டு படங்களில் நடித்த இந்த ஜோடி 90களில் இளசுகளால் அதிகம் பேசப்பட்டது.



விஜய் – சிம்ரன் 

துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா என சிம்ரனுடன் ஜோடி சேர்ந்த விஜய் அப்போதைக்கு சூப்பர் ஹிட் என பேசப்பட்டார்.


விஜய் – ஜோதிகா 

குஷி, திருமலை, படங்களில் பப்ளி ஜோதிகாவுடன் ஜோடி சேர்ந்தார். குஷி படத்தில் இருவருக்கும் செம கெமிஸ்ட்ரி என்று பேசப்பட்டது.


விஜய் – காஜல் அகர்வால் 

துப்பாக்கியில் முதன் முறையாக காஜல் அகர்வாலுடன் ஜோடி சேர்ந்தார் விஜய் இப்போது ஜில்லாவிலும் ஜோடி சேர்ந்துள்ளார். இதுவும் சூப்பர்தான் என்று பேசுகின்றனர் ரசிகர்கள்.



விஜய் – ஜெனிலியா

 சச்சின், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்த ஜெனிலியா, வேட்டைக்காரனில் நடித்த அனுஷ்கா, அழகிய தமிழ் மகனில் நடித்த ஸ்ரேயா, சுறா படத்தில் நடித்த தமன்னா என பல நாயகிகள் விஜய் உடன் சேர்ந்தவர்கள்தான். ஆனால் ஏனோ அதற்குப் பிறகு அவர்களுடன் இணைந்து நடிக்க விஜய் விரும்பியதில்லை.




உலக சுற்றுச்சூழல் தினம் – மரக் கன்று நட்டார் விஜய்

06-vijay-worldenvironmentday-600உலக சுகதாதார தினத்தை முன்னிட்டு, சென்னையில் மரக் கன்று நட்டார் நடிகர் விஜய். ஆண்டுதோறும் ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. சென்னையில் நேற்று பூமித் தாயைக் காப்போம் என்ற தலைப்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் ஆரம்பமானது. ஒரு ஆண்டு நடக்கும் இந்த பிரச்சாரத்தின் முதன் நாளான நேற்று அதனை மரக் கன்று நட்டு தொடங்கி வைத்தார் நடிகர் விஜய்.
இதன் பிரான்ட் அம்பாசடராகவும் விஜய் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் சார்பில் நடத்தப்படும் நிகழ்வு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக எக்ஸ்னோராவின் இளைஞர் பிரிவு வி கோ க்ரீன் எனும் பெயரில் சுற்றுச்சூழல் நிகழ்ச்சியை ஜூலை 3 முதல் 9-ம் தேதி வரை சென்னையில் நடக்கிறது. மாணவர்கள் உள்பட 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் கலந்து கொள்கிறார்.

Thursday, June 6, 2013

விஜய் சினிமா பயணம்: நாளைய தீர்ப்பு டூ தலைவா

இளைய தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் 39 வது பிறந்தநாளை இன்னும் சில தினங்களில் கொண்டாடப் போகிறார். சினிமா பின்னணி கொண்ட குடும்பத்தில் இருந்து வந்த விஜய் சிறு வயது முதலே சினிமாவில் இருந்தாலும் குறிப்பிடத்தக்க படங்கள் மட்டுமே அவரை நடிகராக நிரூபித்தது. 

நாளைய தீர்ப்பில் தொடங்கிய பயணம் தலைவா, ஜில்லா என தொடர்ந்து கொண்டிருக்கிறது. குழந்தை நட்சத்திரமாக 6 படங்கள் வரை நடித்த விஜய், கல்லூரி பருவ மாணவராக நடித்த நாளைய தீர்ப்பு தமிழக சினிமா ரசிகர்களிடையே பேச வைத்தது.

 தமிழ் சினிமாவில் முதலில் இருப்பை தக்க வைக்க எடுக்கப்பட்ட படங்கள் செந்தூரப்பாண்டி, ரசிகன், தேவா, விஷ்ணு போன்ற படங்கள் அதீத மசாலாத்தனங்கள் இருந்தன இதனாலேயே பெண் ரசிகைகள் விஜய்க்கு கிடைக்க சில நாட்கள் ஆனது.

 சில வருடங்களில் சுதாரித்த விஜய் தனக்கான கதையை தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். இதில் ரசிகர்கள் ஏற்றுக் கொண்டு வெற்றி பெற வைத்த படங்களைப் பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.




பூவே உனக்காக 

ராஜா மசாலாப்படங்களுக்கு இடையே விக்ரமன் இயக்கத்தில் ராஜாவாக நடித்த பூவே உனக்காக படம் சூப்பர் ஹிட் வெற்றி விஜய்யின் சினிமா பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது.

லவ் டுடே 

காதல் என்று சுற்றிய இளைஞன் பொறுப்பான இளைஞனாக மாறி அட்வைஸ் செய்த படம் லவ் டூடே. இளைஞர்களை மட்டுமல்ல இளம் பெண்களையும் கவர்ந்தார் விஜய்.


ஒன்ஸ் மோ

ர் விடலைப் பருவக் குறும்புகள் கொண்ட விஜய் நடித்த ஒன்ஸ் மோர் ரசிகர்களை ரசிக்க வைத்தது.


காதலுக்கு மரியாதை

 காதலர்கள் மீது மரியாதை ஏற்படுத்திய படம் காதலுக்கு மரியாதை. ஜீவா என்று இளம் பெண்கள் உருகியிருக்கின்றனர். சிறந்த நடிப்பிற்காக தமிழக அரசின் விருது பெற்றார் விஜய்.


பிரியமுடன் வில்லன் 

எத்தனை நாள்தான் ஹீரோவாக நடிப்பது கொஞ்சம் வில்லத்தனம் செய்வோமே என்று விஜய் நடித்த பிரியமுடன் படத்தை வெற்றி பெற வைத்தனர் ரசிகர்கள்.

குஷி

இளசுகளை ரசிக்க வைத்த குஷி சிவா உற்சாகமாக, ஜாலியாக ரசிகர்களுக்கு விருந்து படைத்தார். இதுவரை இப்படி ஒரு விஜய் படத்தை பார்த்ததே இல்லை என்று பேசினர் ரசிகர்கள்.
திருமலை 

மென்மையான நாயகனாக இருந்த விஜய் ஆக்சன் அவதாரத்தில் வெற்றி பெற்ற படம் திருமலை.



சொல்லியடித்த கில்லி 

ஆக்சனுடன் காமெடியும் கலந்து நடித்த கில்லி சொல்லியடித்தது. விஜய் வெற்றிப் பாதையில் தனி ரூட் போட்டது.

போக்கிரி 

பெரிய வெற்றி ஏதாவது கொடுக்கவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்த விஜய்க்கு பிரபுதேவா இயக்கத்தில் அமைந்த படம்தான் போக்கிரி.

காவலன் 

அதிரடியில் இருந்து அமைதியான விஜய், நடிப்பில் தனி முத்திரை பதித்த படம் காவலன். அதன்பின்னர் நடித்த வேலாயுதமும் வெற்றிப் படமானது.



நண்பன் 

நண்பனில் தனி நடிப்பை வெளிப்படுத்திய விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாது சினிமா ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தார் என்றே கூறலாம். துப்பாக்கியில் ராணுவ வீரனாக நடித்தும் அசத்தினார் விஜய்.

தலைவா

 இப்போது நடித்துக் கொண்டிருக்கும், தலைவா, ஜில்லா பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ரசிகர்களை மட்டுமல்லாது அனைத்து தரப்பு சினிமா ரசிகர்களையும் கவர வேண்டும் என்பதே நமது எதிர்பார்ப்பும் கூட.