Showing posts with label Thalaiva. Show all posts
Showing posts with label Thalaiva. Show all posts
Monday, September 16, 2013
Thalaivaa Total Box Office Collections
Ilayathalapthy Vijay’s Thalaivaa has made total box office collection of more than 150 crores, from its world wide collections. The movie was released world wide on August 9th expected Tamil Nadu and in Tamil Nadu it was released only on August 20.
Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office
Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office. Thalaivaa featured Vijay and Amala Paul in lead roles.
Wednesday, September 11, 2013
அமைதிதான் என் ஆயுதம்… விஜய்
தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
விஜய் அண்ணா
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.
அழுத ரசிகை
விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.

அமைதி ஏன்?
தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.

என்ன ரேட்டிங்?
தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.

ஜி.வி.பிரகாஷ்
பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.

அமலாவின் கண்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.
குட்டி ரசிகர்கள்
இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.
விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது.
இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
விஜய் அண்ணா
நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.
அழுத ரசிகை
விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.
அமைதி ஏன்?
தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.
என்ன ரேட்டிங்?
தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.
ஜி.வி.பிரகாஷ்
பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.
அமலாவின் கண்கள்
நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.
குட்டி ரசிகர்கள்
இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.
Wednesday, September 4, 2013
தலைவா பிரச்சினை... விஜய் அரசியல்.. முக ஸ்டாலின் கமெண்ட்ஸ்!
விஸ்வரூபம், தலைவா படப் பிரச்சினைகள் மற்றும் விஜய்யின் அரசியல் பிரவேசம் குறித்து திமுக பொருளாளர் முக ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தப் பட பிரச்சினைகளுக்கு முதல்வரின் ஈகோதான் காரணம் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கருத்து தெரிவித்துளளார்.
விஸ்வரூபம், தலைவா சிக்கல்கள்...
ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "விஸ்வரூபம்', 'தலைவா' பட சிக்கல் குறித்த கேள்விக்கு, "கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை," என்று கூறியிருந்தார்.
தன்னை மிஞ்சி யாரும்...
தொடர்ந்து அவர் கூறுகையில், "ஆனால், 'விஸ்வரூபம்' எடுப்பவர்களையும், 'தலைவராக'க் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும்; தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட 'அஸ்திரம்' அது. 'எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா?' என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!'' என்று கருத்து கூறியுள்ளார்
விஜய் அரசியல்
''நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?'' என்ற மற்றொரு கேள்விக்கு, "நடிகர்கள் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வரலாம். வரவேற்போம்.இது ஜனநாயக நாடு; இன்னின்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது!,'' என்றும் அவர் கூறியுள்ளார்

மரியான்
சமீபத்தில் தான் பார்த்ததில் படித்த படம் தனுஷ் நடித்த மரியான் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தப் பட பிரச்சினைகளுக்கு முதல்வரின் ஈகோதான் காரணம் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கருத்து தெரிவித்துளளார்.
விஸ்வரூபம், தலைவா சிக்கல்கள்...
ஆனந்த விகடனுக்கு சமீபத்தில் அவர் அளித்துள்ள பேட்டியில், "விஸ்வரூபம்', 'தலைவா' பட சிக்கல் குறித்த கேள்விக்கு, "கலைத் துறையில் இருந்து வந்தவர் என்பதால், சினிமாவுக்கு எதிராக ஜெயலலிதா இருப்பார் என்று நான் கருதவில்லை," என்று கூறியிருந்தார்.
தன்னை மிஞ்சி யாரும்...
தொடர்ந்து அவர் கூறுகையில், "ஆனால், 'விஸ்வரூபம்' எடுப்பவர்களையும், 'தலைவராக'க் கருதிக்கொள்பவர்களையும் அடங்கிப் போகச் செய்ய வேண்டும்; தலைவணங்கச் செய்ய வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா கையாண்ட 'அஸ்திரம்' அது. 'எல்லாப் பாளையக்காரர்களும் பணிந்துவிட்டார்கள்; பலன் அடைகிறார்கள். நீ மட்டும் பணியாதிருப்பதால், உனக்கு அது என்ன லாபமா?' என்று ஜாக்ஸன் துரை, கட்டபொம்மனிடம் கேட்கும் வசனம்தான் நினைவுக்கு வருகிறது. தன்னை மிஞ்சி யாரும் அரசியல் நடத்தக் கூடாது என்று நினைக்கும் ஜெயலலிதா, இப்படிச் செயல்படுவதில் ஆச்சர்யம் ஏதுமில்லை!'' என்று கருத்து கூறியுள்ளார்
விஜய் அரசியல்
''நடிகர் விஜய், அரசியலில் ஈடுபட்டால் வரவேற்பீர்களா?'' என்ற மற்றொரு கேள்விக்கு, "நடிகர்கள் மட்டுமல்ல, வேறு எந்தத் துறையில் இருப்பவர்களும் பொதுப்பணியில் நாட்டம் கொண்டு அரசியலுக்கு வரலாம். வரவேற்போம்.இது ஜனநாயக நாடு; இன்னின்னார்தான் அரசியலுக்கு வரவேண்டும் என்று எல்லைக்கோடு போட முடியாது!,'' என்றும் அவர் கூறியுள்ளார்
மரியான்
சமீபத்தில் தான் பார்த்ததில் படித்த படம் தனுஷ் நடித்த மரியான் என்றும் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.
Tuesday, August 27, 2013
'தலைவா கற்பனைக் கதை மட்டுமே.. யாரையும் குறிப்பிட்டு எடுக்கவில்லை' - இயக்குநர் விஜய்
விஜய் நடித்த தலைவா படத்தின் கதை கற்பனையானது. எந்த நிஜ மனிதர்களையும் குறிப்பிட்டு அந்தப் படம் எடுக்கவில்லை. எனவே படத்துக்கு தடை கோரும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும், என்று இயக்குநர் விஜய் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான்.
படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.

இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
நெல்லை மாவட்டம் சீதபற்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.கே.ஆர்.கர்ணன் என்பவர், "தலைவா' படம் மும்பையில் வாழ்ந்த தனது தாத்தா மற்றும் தந்தையின் வாழ்க்கை பற்றியது. தனது தாத்தாவும், தந்தையும் சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டது போல படத்தில் காட்டப்பட்டுள்ளது. "தலைவா' படம் வெளியே வந்தால் எனது குடும்பத்தினர் மீதான மரியாதை போய்விடும். அதனால் அந்தப் படத்தை வெளியிடத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி சென்னை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவுக்கு பதில் அளிக்குமாறு தயாரிப்பாளர், இயக்குநர் உள்பட பலருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது குறித்து இயக்குநர் ஏ.எல்.விஜய் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:
"தலைவா' படத்தை தடை செய்யக் கோரி மனு தாக்கல் செய்தவர் குறிப்பிட்டபடி, அந்தப் படம் யாரையும் மையப்படுத்தி எடுக்கவில்லை. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், படத்தின் கதாபாத்திரங்கள் உள்பட அனைத்தும் கற்பனைக் கதைதான்.
படத்தில் வரும் சத்யராஜ் கதாபாத்திரம் எந்த தொழிலும் செய்வதாக காட்டப்படவில்லை. மேலும், அவர் எந்த சங்கத்துக்கும் தலைவராக இருக்கவில்லை. அவர் அங்குள்ள ஏழைகள், பெண்கள், குழந்தைகள் அனைவருக்கும் உதவி செய்வதாக மட்டுமே காட்டப்பட்டுள்ளது.
இது தவிர, அந்த கதாபாத்திரம் குறிப்பிட்ட சாதி, மதம், மொழி மக்களுக்கு ஆதரவாக செயல்படவில்லை. மகாராஷ்டிரம், பிகார், தமிழகம் மற்றும் இதர மாநில மக்களுக்காக அவர் உதவுவதாகவே சித்திரிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் குறிப்பிட்டபடி மும்பை தாராவி பகுதியில் எந்த படப்பிடிப்பும் நடத்தவில்லை. மும்பை கடற்கரை ஓரங்களில்தான் நடத்தப்பட்டது. மனுதாரரின் மனுவில் கூறியவாறு படத்தில் யாரையும் குறிப்பிடவில்லை. அதனால் படத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்," என இயக்குநர் விஜய் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த இரண்டாவது உதவி அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜே.மாவியா தீபிகா சுந்தரவதனம், இந்த வழக்கு தொடர்பான உத்தரவை செப்டம்பர் 10-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்
Monday, August 26, 2013
நடிகர் விஜய்க்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி!
தலைவா திரைப்படத்தை வெளிநாட்டில் பார்த்துவிட்டு அங்கிருந்தபடியே நடிகர் விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மனம்திறந்து பாராட்டியிருக்கிறார் மு.க. அழகிரியின் மகன் துரை தயாநிதி.
தலைவா பற்றி ட்விட்டரில்
தலைவா திரைப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு காட்டி வருபவர் துரை தயாநிதி. மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி கூட, தலைவா பட பிரச்சனை முடிந்த நிலையில் அம்மாவுக்கு யாரும் நன்றி கூறலையே என்று கலாய்த்திருந்த போது அவருடன் துரைதயாநிதி அழகிரியும் கை கோர்த்திருந்தார்
பாரீஸில் படம் பார்த்த துரைதயாநிதி
இந்நிலையில் தலைவா படத்தை பாரீஸில் பார்க்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

விஜய்க்கு வாழ்த்து
தற்போது தமது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.. நல்ல மனதுக்காரர் என்று கூறியிருக்கிறார்
சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேனே..
அத்துடன் அவருடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். அப்படியென்ன பகிர்ந்து கொண்டிருப்பார்?

தலைவா பற்றி ட்விட்டரில்
தலைவா திரைப்படம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து விஜய்க்கு ஆதரவு காட்டி வருபவர் துரை தயாநிதி. மு.க. ஸ்டாலின் மகன் உதயநிதி கூட, தலைவா பட பிரச்சனை முடிந்த நிலையில் அம்மாவுக்கு யாரும் நன்றி கூறலையே என்று கலாய்த்திருந்த போது அவருடன் துரைதயாநிதி அழகிரியும் கை கோர்த்திருந்தார்
பாரீஸில் படம் பார்த்த துரைதயாநிதி
இந்நிலையில் தலைவா படத்தை பாரீஸில் பார்க்கப் போவதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
விஜய்க்கு வாழ்த்து
தற்போது தமது ட்விட்டர் பக்கத்தில், விஜய்யுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு வாழ்த்து தெரிவித்தேன்.. நல்ல மனதுக்காரர் என்று கூறியிருக்கிறார்
சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேனே..
அத்துடன் அவருடன் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டேன் என்று பதிவிட்டிருக்கிறார். அப்படியென்ன பகிர்ந்து கொண்டிருப்பார்?
விஜய்யின் 'ஜில்லா' ஹிட்டாக பழனி முருகனிடம் வேண்டிய ஜீவா
ஜீவா யான் மற்றும் என்றென்றும் புன்னகை படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் தனது மனைவி சுப்ரியா மற்றும் மகன் ஸ்பர்ஷுடன் கொடைக்கானலுக்கு அண்மையில் சென்றார். கொடைக்கானலில் ரிலாக்ஸ் செய்த அவர் அப்படியே அங்கிருந்து பழனிக்கு சென்றார்.
பழனியில் உள்ள முருகன் கோவிலுக்கு சென்ற அவர் தான் நடிக்கும் படங்கள் ஹிட்டாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டார். மேலும் தனது தந்தை ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கும் விஜய்யின் ஜில்லா படமும் ஹிட்டாக பிரார்த்தனை செய்தார் ஜீவா.
ஜீவா நல்லா வருவடா என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இதில் அவருக்கு ஜோடியாக நஸ்ரியா நஸீம் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
படத்தை வாங்க மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுக்கிறார்: தலைவா படத் தயாரிப்பாளர் மீது புகார்
தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மீது இயக்குனர் ரமேஷ் செல்வன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
நான் உளவுத்துறை, ஜனனம் போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளேன். தற்போது சத்யராஜ் கதாநாயகனாக வைத்து ‘கலவரம்' என்ற படத்தை இயக்கி முடித்துள்ளேன். இந்த படத்தை எனது நண்பர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார். எங்கள் படத்தின் விளம்பரங்களை பார்த்து, தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் எங்களை இரண்டு வாரங்களுக்கு முன் நேரில் அழைத்து பேசினார். அப்போது எங்களுடைய தலைவா படத்தின் பிரச்னையில் நாளை முடிவு தெரிந்துவிடும். தெரிந்ததும் தலைவா படத்தை உடனே வெளியிடுகிறோம். உங்களுடைய படம் கலவரம் வெளியிட்டால் எனது தலைவா படத்திற்கு போதுமான திரையரங்குகள் கிடைக்காது.
எனவே நானே உங்களுடைய படத்தினை 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கிக் கொள்கிறேன். ஒப்பந்தம் தயார் செய்து கொண்டு வந்து விடுங்கள் என்று கூறினார். அதன்படி நேற்று ஒப்பந்தத்தோடு சந்திரபிரகாஷ் ஜெயினை சந்திக்க சென்றோம். அதற்கு அவர் எங்களை சந்திக்க மறுத்ததுடன், எங்களை தாழ்த்தியும் அவமானப்படுத்தியது மட்டுமில்லாது உங்களை கொன்றுவிடுவேன் என்று மிரட்டி படத்தை வாங்க மறுத்துவிட்டார். படத்தை வெளியிடாததால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் நானும் எனது தயாரிப்பாளர் ரவிச்சந்திரனும் தற்கொலை செய்து செள்ளுவதை தவிர வேறு வழியில்லை. எனவே இந்த பிரச்னையில் போலீசார் தலையிட்டு எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். சந்திரபிரகாஷ் ஜெயின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Friday, August 23, 2013
அடுத்தது 'அதிரடி' எல்லாம் இல்லீங்கணா: விஜய்
விஜய்யின் தலைவா படம் பல பிரச்சனைகளைத் தாண்டி கடந்த 20ம் தேதி தமிழகத்தில் ரிலீஸ் ஆனது. விஜய் தற்போது நேசன் இயக்கத்தில் காஜல் அகர்வாலுடன் சேர்ந்து ஜில்லா படத்தில் நடித்து வருகிறார்.
படத்தில் விஜய் மதுரைக்கார தம்பியாக வருகிறார். இந்த படத்தை அடுத்து அவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு அதிரடி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இது குறித்து விஜய் கூறுகையில்,
நான் ஜில்லாவை முடித்துவிட்டு முருகதாஸ் படத்தில் நடிப்பது உண்மை. ஆனால் படத்தின் தலைப்பு அதிரடி இல்லை. அது வெறும் வதந்தி தான். படத் தலைப்பை இன்னும் முடிவு செய்யவில்லை என்றார்.
தலைவா பட விவகாரம்- எனக்கு சம்பந்தமில்லை என்கிறார் விஜயகாந்த்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த், தனது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அவருடன் மனைவி பிரேமலதா, மைத்துனர் சுதீஷ் ஆகியோரும் வந்திருந்தனர்.
பின்னர் கோயிலுக்கு வெளியே வந்த விஜயகாந்த், செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து பேசியதாவது:
ஆந்திராவை பிரிப்பது போல் தமிழகத்திலும் மாநிலம் பிரிக்கப்படுமா?.
ஆந்திராவிலேயே இதுகுறித்து முடிவு எடுக்கப்படாமல் உள்ளது. இங்கு அதற்கான முடிவு வந்தபிறகு தமிழகம் பிரிப்பது பற்றி பின்னர் ஆலோசிக்கலாம்.
தலைவா சிக்கல்
தமிழகத்தில் விஜய் படம் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது ஏன்? சினிமாவுக்கும், எனக்கும் இப்போது சம்பந்தம் இல்லை. நான் தற்போது அரசியலில் உள்ளேன் இவ்வாறு அவர் கூறினார்.
சினிமா நடிகராக இருந்து நடிகர் சங்கத்தலைவராக உயர்ந்தவர் விஜயகாந்த். தலைவா விவகாரத்தில் எந்த குரலும் கொடுக்கவில்லை. இப்போது நான் சினிமாக்காரனே இல்லை என்று பதில் கூறியுள்ளார்.
Wednesday, August 21, 2013
'தலைவா பட்டர் மசாலா' தயாரிப்பது எப்படி? செஃப் விஜய் விளக்கம்- ஃபேஸ்புக்கில் கலகல!
தலைவா பட்டர் மசால் - செஃப் .விஜய்
நாயகன் - ஒரு கிலோ
சர்க்கார் - அரை கிலோ
பாம்பே -1 துண்டு
தேவர்மகன் - 6 பல்
இந்திரா - ஒரு தேக்கரண்டி
பில்லா - அரை கப்
புதிய பறவை - கோபால் கோபால் மிக்ஸ் ஒரு டீஸ்பூன்
பொல்லாதவன் - தேவையான அளவு
கதாபாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இந்திரா, பம்பாய் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் நைசாக அரைத்து வைத்திருக்கும் தேவர்மகன் சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவும் .
பொன்னிறமாக வரும் போது கோபால் கோபால் மிக்ஸ் சிறிது சேர்த்து மிதமான சூட்டில் வேகவைக்கவும்.
நன்றாக வதங்கியதும் சுத்தபடுத்தி வைத்திருக்கும் நாயகன் துண்டுகளை சேர்த்து பிரட்டி மூடி வேக விடவும்.
நாயகன் வெந்ததும் அரைத்த சர்க்கார் சேர்த்து கொதிக்க விடவும்.
நன்றாக கொதித்ததும் பொல்லாதவன் தூவி இறக்கவும். தலைவா ரெடி.
தலைவா: தியேட்டர் முன்பு கெடா வெட்டி, மொட்டை போட்ட விஜய் ரசிகர்கள்
தலைவா படம் ரிலீஸானதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுள்ளனர்.
தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
மருத்துவமனையில் தயாரிப்பாளர்
படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ்
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

உதயம் தியேட்டர்
சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.

ஆடு வெட்டி, மொட்டை
புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.

பாலாபிஷேகம்
ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
மருத்துவமனையில் தயாரிப்பாளர்
படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ்
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
உதயம் தியேட்டர்
சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.
ஆடு வெட்டி, மொட்டை
புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.
பாலாபிஷேகம்
ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
Monday, August 19, 2013
தலைவா விவகாரம்..ஜெயலலிதாவை ட்விட்டரில் கலாய்த்த உதயநிதி! கரம் கோர்த்த துரைதயாநிதி!
தலைவா திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ட்விட்டரில் மு.க .ஸ்டாலின் மகன் உதயநிதி கலாய்க்க, அவருடன் மு.க. அழகிரியின் மகன் துரைதயாநிதியும் கரம் கோர்த்திருக்கிறார்.
தலைவா படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவே முடியாத 'உள்' காரணங்களால் முட்டுக்கட்டை நீடித்தது.
ஒருவழியாக நாளை தலைவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவுதான் உதயநிதி ஸ்டாலினும் துரைதயாநிதி அழகிரியும் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்கள்.
அம்மாவுக்கு நன்றி சொல்லலையே..
உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் அம்மாவுக்கு யாரும் நன்றி சொல்லலையே? மாணவர் புரட்சி படைக்கு என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறார்.
கரம் கோர்த்த மு.க. அழகிரி மகன்
இந்த ட்விட்டருக்கு பதில் கொடுத்திருப்பவர் மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி அழகிரி
தலைவா பற்றி அழகிரி மகன் சொன்னது என்ன?
தலைவா படம் செவ்வாய்க்கிழமை வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை அரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதே இதே நடவடிக்கையை அரசு ஏன் முன்னரே எடுக்கவில்லை? அப்படி முன்னரே எடுத்திருந்தால் படம் பிரச்சனையின்றி ரிலீஸாகி இருக்குமே? நான் நினைக்கிறேன் இது சரியான கேள்வி என்று! மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்
தலைவா படம் ஆகஸ்ட் 9-ந் தேதி வெளியாக வேண்டியது. ஆனால் வெளியில் சொல்லிக் கொள்ளவே முடியாத 'உள்' காரணங்களால் முட்டுக்கட்டை நீடித்தது.
ஒருவழியாக நாளை தலைவா திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று இரவுதான் உதயநிதி ஸ்டாலினும் துரைதயாநிதி அழகிரியும் ட்விட்டரில் கலாய்த்திருக்கிறார்கள்.
அம்மாவுக்கு நன்றி சொல்லலையே..
உதயநிதி ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் தமது ட்விட்டர் பக்கத்தில், இன்னும் அம்மாவுக்கு யாரும் நன்றி சொல்லலையே? மாணவர் புரட்சி படைக்கு என்ன தொடர்பு? என்று கேட்டிருக்கிறார்.
கரம் கோர்த்த மு.க. அழகிரி மகன்
இந்த ட்விட்டருக்கு பதில் கொடுத்திருப்பவர் மு.க. அழகிரி மகன் துரைதயாநிதி அழகிரி
தலைவா பற்றி அழகிரி மகன் சொன்னது என்ன?
தலைவா படம் செவ்வாய்க்கிழமை வெளியாவது மகிழ்ச்சி அளிக்கிறது. திரை அரங்கங்களுக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட போதே இதே நடவடிக்கையை அரசு ஏன் முன்னரே எடுக்கவில்லை? அப்படி முன்னரே எடுத்திருந்தால் படம் பிரச்சனையின்றி ரிலீஸாகி இருக்குமே? நான் நினைக்கிறேன் இது சரியான கேள்வி என்று! மக்கள் சிந்திக்கத் தொடங்கிவிட்டார்கள் என்று பதிவிட்டிருக்கிறார்
தலைவாவுக்கு நாளை ராஜ உபச்சாரம் தான்
தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக நாளை உதயம் தியேட்டருக்கு கொண்டு வரப்படுகிறது.
விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.

தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
விஜய்யின் தலைவா படம் ஒரு வழியாக நாளை தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது. இதனால் விஜய் ரசிகர்கள் ஏக குஷியில் உள்ளனர். தலைவா படத்தின் ரீல்பெட்டியை ரதத்தில் வைத்து நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள உதயம் தியேட்டருக்கு கொண்டு வருகின்றனர்.
தலைவா ரம்ஜானுக்கே வர வேண்டியது. ஆனால் தமிழகத்தை தவிர பிற மாநிலங்கள், நாடுகளில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. தலைவா ரிலீஸாகும் குஷியில் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் விஜய்யை புகழ்ந்து ட்வீட் செய்து கொண்டிருக்கின்றனர்.
மேலும் படம் நிச்சயம் 100 நாட்கள் ஓடும் என்றும், திரையுலகில் ரஜினியைத் தவிர வேறு யாராலும் விஜய்யை அடித்துக்கொள்ள முடியாது என்றும் அவரது ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.
Friday, August 16, 2013
அம்மா மனமிறங்குங்க... தலைவா ரிலீஸ் ஆகலேன்னா நடுத்தெருவுக்கு வந்துருவேன்- சந்திரபிரகாஷ் ஜெயின்
முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா...
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.

நல்ல தயாரிப்பாளர்... நாணயமானவன்
நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.

4 வருடமாக முயற்சித்து
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
9ம் தேதி வெளியிட ஒப்பந்தம்
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.

யாரோ குண்டு மிரட்டல் விட்டுட்டாங்கம்மா...
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

தியேட்டர்காரர்கள் பயந்துட்டாங்கம்மா
இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.

வெளிமாநிலத்தில் வெளியாகிடுச்சேம்மா...
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.

திருட்டு டிவிடி வந்துருச்சேம்மா...
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.

பெரிய கடனாளியாகி விடுவேன்
இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.

மன உளைச்சல்
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.
அம்மா மனமிறங்கி...
ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

தலைவா படத்தை வெளியிட பல்வேறு வழிகளிலும் அதன் குழுவினர் முயற்சித்து வருகின்றனர். நேற்று நடிகர் விஜய் வீடியோ மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த நிலையில் இன்று அதன் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் பேட்டி அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். கூடவே படத்தின் இயக்குநர் விஜய்யும் உடன் இருந்தார்
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அம்மா...
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன்.
நல்ல தயாரிப்பாளர்... நாணயமானவன்
நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
4 வருடமாக முயற்சித்து
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
9ம் தேதி வெளியிட ஒப்பந்தம்
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
யாரோ குண்டு மிரட்டல் விட்டுட்டாங்கம்மா...
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று
வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள்.

தியேட்டர்காரர்கள் பயந்துட்டாங்கம்மா
இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
வெளிமாநிலத்தில் வெளியாகிடுச்சேம்மா...
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
திருட்டு டிவிடி வந்துருச்சேம்மா...
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது.
பெரிய கடனாளியாகி விடுவேன்
இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.
மன உளைச்சல்
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள்.
அம்மா மனமிறங்கி...
ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
தலைவா' பிரச்சனையை தீர்க்க விஜய்யுடன் சேர்ந்து சரத் சார் பாடுபடுகிறார்: ராதிகா
தலைவா படம் தமிழகத்தில் என்று ரிலீஸாகும் என்பது தான் விஜய் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி. படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே தலைவா திருட்டு சிடிக்கள் விற்பனை விஜய்யை வேதனைப்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களோ திரையுலகினர் யாரும் உதவமாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அமைதியாக செயல்படுவது சரியா? இல்லை பேசிக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது சரியா? விஜய் ரசிகர்களே, பிரச்சனையை தீர்க்க சரத் சார் விஜய்யுடன் சேர்ந்து பாடுபடுகிறார். அவர்களை பணியாற்ற விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
தலைவா படக்குழுவினருடன் விஜய் உண்ணாவிரதம்- அனுமதி கோரி போலீசிடம் இன்று மனு
எவ்வளவோ முயற்சி செய்தும் தலைவா படம் வெளியாகவில்லை. நாளைக்குள் வெளியாக வேண்டும் என நடிகர் விஜய், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரப்பிரகாஷ் ஜெயின் ஆகியோர் தினசரி ஒரு பேட்டி, பிரஸ் மீட் வைத்து வருகின்றனர்.
அரசு இதில் தான் செய்ய வேண்டியது எதுவும் இல்லை என தெளிவுபடுத்திவிட்டது. போலீசாரோ இது தங்கள் வேலையல்ல என்றும், சினிமாத் துறையினர் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்றும் கூறிவிட்டது.
வெளியிட வேண்டிய தியேட்டர்காரர்களும், விநியோகஸ்தர்களும் எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்கிறார்கள். விஜய் படங்களால் ஏற்பட்ட நஷ்டங்களுக்குப் பழி வாங்கவே தியேட்டர்காரர்கள் இப்படிச் செய்வதாகவும் பேச்சு நிலவுகிறது.
இந்த நிலையில், தலைவா படத்தை வெளியிட முதல்வர் அம்மா நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜய்யும் அவரது குழுவினரும் திரும்பத் திரும்ப கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் விஜய், தயாரிப்பாளர், இயக்குநர் விஜய், தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் மற்றும் தலைவா படக் குழுவினர் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நாளை காலை 11 மணிக்கு சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜிடம் மனு கொடுக்கப் போவதாகக் கூறியுள்ளனர்.
சத்யராஜ், அமலாபால், சந்தானம் ஆகியோரிடம் பேசி இதற்கு சம்மதம் வாங்கியுள்ளாராம் இயக்குநர் விஜய். அனுமதி கிடைத்தால் கண்டிப்பாக உண்ணாவிரதத்தில் கலந்துகொள்வேன் என்று உறுதி அளித்துள்ளாராம் படத்தின் நாயகன் விஜய். எஸ்ஏ சந்திரசேகரன் மற்றும் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும் இதில் கலந்து கொள்ளப் போகிறார்களாம்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் vijeenthiran.blogspot.com
Thursday, August 15, 2013
தலைவா... நிபந்தனை அடிப்படையில் 23-ம் தேதி வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் முடிவு!
பல்வேறு பிரச்சினைகள் காரணமாக தலைவா படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.
9-ம் தேதி உலகமெங்கும் வெளியாகிவிட்ட இந்தப் படம் தமிழகத்தில் வெளியாகாததால், திருட்டு டிவிடிகள் வெளியாகிவிட்டன.
இந்த நிலையில் படம் இன்று வருமா நாளை வருமா என தவிப்போடு இருப்பதாக விஜய் வீடியோவில் உருக்கம் காட்டினார். திரையுலக பிரமுகர்கள் சிலரும் படத்தை வெளியிடும் முயற்சிகளில் இறங்கியுள்ளனர்.
இந்தப் படம் வெளியாக முதல்வர் உதவ வேண்டும் என திரும்பத் திரும்ப விஜய்யும் அவரைச் சார்ந்தவர்களும் கூறிவருவது அரசுத் தரப்புக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்தை வெளியிடுவதும் வெளியிடாததும் திரையரங்குகள் விருப்பம். அரசையோ முதல்வரையோ இதில் தொடர்பு படுத்தக் கூடாது என தலைவா படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அரசுத் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.
எனவே இனி படத்தை வெளியிடுவது தியேட்டர்காரர்கள் கையில் உள்ளது. இந்த நிலையில் நேற்று தேனாம்பேட்டையில் தங்கள் சங்க அலுவலகத்தில் கூடிய திரையரங்கு உரிமையாளர்கள், தலைவா படத்தை வரும் 23-ம் தேதி வெளியிடலாமா என ஆலோசித்தனர்.
ஆனால் அன்று தேசிங்கு ராஜா படத்துக்கு 350 அரங்குகள் கொடுத்திருப்பதால், விஜய் தரப்பு கேட்கும் 500 அரங்குகளில் வெளியிடுவது சாத்தியமில்லை என்று தெரிவித்தனர். 250 முத்ல 300 அரங்குகளில், சதவீத அடிப்படையில் வேண்டுமானால் தலைவாவை வெளியிடலாம். மினிமம் கியாரண்டி அடிப்படையில் என்றால், படத்தை வெளியிட முடியாது என்று ஒருமனதாக முடிவு செய்துள்ளனர்.
இந்த நிபந்தனைக்கு விஜய் தரப்பு ஒப்புக் கொண்டால், தலைவா படம் அடுத்த வாரம் வெளியாகக் கூடும்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.vijeenthiran.blogspot.com
தலைவா ரிலீஸாக உதவி செய்து எங்களை காப்பாத்தணும்: ஜெ.வுக்கு தயாரிப்பாளர் கோரிக்கை
முதல்வர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என தலைவா படத்தின் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது
குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள். ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். உடனடி செய்திகளுக்கு எப்போதும்
குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அம்மா நான் ஒரு திரைப்பட தயாரிப்பாளர். இதற்கு முன் இரண்டு படங்கள் தயாரித்து நல்ல விதமாக வெளியிட்டு இருக்கிறேன். நான் ஒரு நல்ல தயாரிப்பாளனாகவும், நாணயமான தயாரிப்பாளனாகவும் தமிழ் திரை உலகில் பேர் எடுத்து இருக்கிறேன்.
கடந்த 4 வருடங்களாக முயற்சி செய்து நடிகர் விஜய்யின் கால்ஷீட் பெற்று பல கோடிகள் கடன் வாங்கி மிகுந்த பொருட்செலவில் இந்த தலைவா திரைப்படத்தை தயாரித்து இருக்கிறேன்.
கடந்த 9.8.2013 அன்று படத்தை வெளியிடுவதாக விநியோகஸ்தர்களிடம் ஒப்பந்தம் செய்து இருக்கிறேன்.
இந்த தலைவா திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தியேட்டர்களுக்கு யாரோ இந்த திரைப்படத்தை வெளியிட கூடாது என்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்து இருக்கிறார்கள். இதனால் தியேட்டர் அதிபர்கள் படத்தை திரையிட பயந்து படம் 9-ந் தேதி வெளியிட முடியாமல் ஆகிவிட்டது.
ஆனால் அதே நாளில் வெளிநாடுகளிலும், கேரளா, கர்நாடக, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களிலும் படம் வெளியாகி தமிழ்நாட்டில் மட்டும் வெளிவராமல் நின்றுவிட்டது.
இதற்கு இடையில் இன்டர்நெட்டிலும், திருட்டு வி.சி.டிகளிலும் படம் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதனால் எனக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் நிலைமை உருவாகிவிட்டது. இந்த படம் இந்த வாரம் கூட அதாவது 16.8.2013 (நாளை) அன்று கூட வெளியாகாவிட்டால் நான் வாங்கிய கடனை திருப்பி கொடுக்க முடியாமல் மிகுந்த கஷ்டத்திற்கு ஆளாவேன்.
இந்த திரைப்படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும், திரை அரங்கு உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்திற்கும் மன உளைச்சலுக்கும் உள்ளாகி உள்ளார்கள். ஆகவே முதல்- அமைச்சர் ஜெயலலிதா மனமிறங்கி இந்த திரைப்படம் நாளை (16.8.2013) வெளிவர வேண்டிய நடவடிக்கை எடுத்து எங்களை காப்பாற்ற வேண்டும் என்று தாழ்பணிந்து கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார். உடனடி செய்திகளுக்கு எப்போதும்
Wednesday, August 14, 2013
தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்
தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா' தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்லோருக்கும் வணக்கம்
சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர்.
அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்...
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்...
தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க.
நடிகர் விஜய்யின் வீடியோ அறிக்கை
Subscribe to:
Posts (Atom)