தலைவா படம் ரிலீஸானதையொட்டி விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுள்ளனர்.
தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
மருத்துவமனையில் தயாரிப்பாளர்
படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ்
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.

உதயம் தியேட்டர்
சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.

ஆடு வெட்டி, மொட்டை
புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.

பாலாபிஷேகம்
ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தலைவா படம் கடந்த 9ம் தேதி அதாவது ரம்ஜான் அன்று ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் ரிலீஸுக்கு முந்தைய நாள் இன்ன காரணம் என்று தெரியாமல் படத்தின் ரிலீஸ் திடீர் என்று நிறுத்தப்பட்டது.
இதையடுத்து விஜய் தனது அப்பா சந்திரசேகரை அழைத்துக் கொண்டு முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க கொடநாடு சென்றார். முதல்வரை பார்க்க முடியாமல் போன வேகத்தில் திரும்பி வந்தார்.
மருத்துவமனையில் தயாரிப்பாளர்
படத்தை ரிலீஸ் செய்யக் கோரி தலைவா படத் தயாரிப்பாளர் சந்திரபிரகாஷ் ஜெயின் முதல்வருக்கு கோரிக்கை விடுத்தார். இந்நிலையில் அவர் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஒருவழியாக ரிலீஸ்
பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து படம் ஒரு வழியாக நேற்று தமிழகம் முழுவதும் ரிலீஸ் ஆனது.
உதயம் தியேட்டர்
சென்னை உதயம் தியேட்டருக்கு தலைவா படப்பெட்டி ரதத்தில் வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. விஜய் ரசிகர்கள் ஏக குஷியாக காணப்படுகின்றனர்.
ஆடு வெட்டி, மொட்டை
புதுக்கோட்டையில் உள்ள தியேட்டர் முன்பு விஜய் ரசிகர்கள் ஆடு வெட்டி, மொட்டை போட்டுக் கொண்டனர்.
பாலாபிஷேகம்
ஆடு வெட்டிய ரசிகர்கள் விஜய்யின் படத்திற்கு பாலாபிஷேகம் செய்து மகிழ்ந்தனர். படம் பல நாட்கள் ஓடத் தான் இப்படி செய்கிறோம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment