தலைவா படம் தமிழகத்தில் என்று ரிலீஸாகும் என்பது தான் விஜய் ரசிகர்கள் கேட்கும் ஒரே கேள்வி. படத்தை ரிலீஸ் செய்ய விஜய்யும் தன்னால் முடிந்தவற்றை எல்லாம் செய்து வருகிறார். ஆனால் இன்னும் ஒரு தீர்வு கிடைக்கவில்லை.
இதற்கிடையே தலைவா திருட்டு சிடிக்கள் விற்பனை விஜய்யை வேதனைப்படுத்தியுள்ளது. விஜய் ரசிகர்களோ திரையுலகினர் யாரும் உதவமாட்டார்களா என்று எதிர்பார்க்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து ராதிகா சரத்குமார் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
அமைதியாக செயல்படுவது சரியா? இல்லை பேசிக் கொண்டு ஒன்றுமே செய்யாமல் இருப்பது சரியா? விஜய் ரசிகர்களே, பிரச்சனையை தீர்க்க சரத் சார் விஜய்யுடன் சேர்ந்து பாடுபடுகிறார். அவர்களை பணியாற்ற விடுங்கள் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment