இன்று காலை 11 மணிக்கு தேனாம்பேட்டையில் உள்ள சங்க அலுவலகத்தில் நடந்த இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் பொதுச் செயலாளர் பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் இதில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசியவர்கள், திருட்டு டிவிடி வந்துவிட்டதால் எம்.ஜி (மினிமம் கியாரண்டி) முறைக்கு பதில் சதவீத அடிப்படையில் படத்தை திரையிடலாம் என்றனர். சுதந்திர தினத்தையொட்டி வருகிற 15 அல்லது 16-ந் தேதி படத்தை திரையிடலாமா என ஆலோசித்தனர். இன்று மாலை இறுதி முடிவு அறிவிக்கப்படும் என தெரிகிறது.
இதற்கிடையில் ‘தலைவா' படத்தின் திருட்டு டிவிடி க்கள் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தாராளமாகக் கிடைக்க ஆரம்பித்துவிட்டது. இன்டர்நெட்டிலும் இப்படம் வெளியாகியுள்ளது. இதைத் தடுக்க போலீசிடம் தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகின்றனர் படக் குழுவினர்.
உடனடி செய்திகளுக்கு எப்போதும் www.vijeenthiran.blogspot.com
No comments:
Post a Comment