விஜய் நடிக்க 'பகலவன்' படத்தை கலைப்புலி எஸ் தாணுவுக்காக தயாரிக்கிறார்.
இந்தப் படத்துக்கான எழுத்துப் பணிகள் அனைத்தையும் முடித்துவிட்ட சீமான், அடுத்து விஜய்க்கு கதை சொல்ல தயாராகிறார்.
பகலவன் கதை என்ன? "அரசின் அனைத்து துறைகளையும் தனியார்மயமாக்கி வருகிறார்கள். இது தொடர்ந்தால் நாடே முதலாளிகளின் கையில் அடைப்பட்டு விடும். இதனை எதிர்த்து போராடும் ஒரு வீரமான இளைஞனைப் பற்றிய படம் தான் 'பகலவன்'. கண்டிப்பாக விஜய்க்கு இந்த திரைப்படம் பெரும் மாற்றத்தை தரும், அவர் விரும்பும் துறைகளில்.
விஜய்க்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் இருக்கிறார்கள். நாயகிகளை தேர்ந்தெடுக்கும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. தம்பி விஜய்க்கு இன்னும் ஒரு வாரத்தில் முழு கதை மற்றும் திரைக்கதையை கூறி விடுவேன்.
இன்னும் ஒரிரு மாதங்களில் பகலவன் தொடங்கப்படும்," என்றார்.
No comments:
Post a Comment