Wednesday, September 7, 2011

விஜய்-சீமான் சந்திப்பு மூன்று மணி நேரம் பேச்சு

கருப்பு சேலையில் ’இங்க்’ தெளித்த மாதிரி புலப்படாமலே இருந்தது சீமான்- விஜய் இணைந்து உருவாக்கும் புதுப்படம் தொடர்பான உண்மைகள். பல முறை விஜய்யை சந்தித்து கதையை சொல்லி அவரை சம்மதிக்கவும் வைத்திருந்தார் சீமான். இது ஒருபுறம் Seeman - Vijayநடந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு புறம் கவுதம் மேனன், ஏ.ஆர்.முருகதாஸ் என்று கதை கேட்டு கன்பார்ம் பண்ணிக் கொண்டிருந்தார் விஜய்.
கோபம், பகலவன் என்று தலைப்புகள் மாறிக் கொண்டிருந்தனவே தவிர, இந்த பட விஷயத்தில் உருப்படியான ஒரு முன்னேற்றமும் இல்லாமல் தடுமாறிக் கொண்டிருந்த சீமான், தனது கொள்கை லட்சியத்திற்காக இன்னும் அதிக நேரம் செலவிட்டுக் கொண்டிருந்தார். இந்த நேரத்தில்தான் கடந்த 5 ந் தேதி சீமானை அழைத்தாராம் விஜய்.
ஒளிப்பதிவாளர் ஏகாம்பரத்தோடு விஜய்யை சந்தித்தார் சீமான். சுமார் மூன்று மணி நேரம் இந்த சந்திப்பு நீடித்ததாம். முடிவு என்ன என்பதை இருவரில் யாராவது ஒருவராவது வாய் திறந்தால்தான் தெரிந்து கொள்ள முடியும் போலிருக்கிறது

No comments:

Post a Comment