Monday, September 30, 2013

பொங்கலுக்கு விஜய், அஜீத் படங்கள் போட்டி: ஜில்லா, வீரம் ஒன்றாக வருகிறது

2bf9d9f3-eecc-4397-8651-fc383b5d4bd6_S_secvpfவிஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் பொங்கலுக்கு வருகின்றன. இரு படங்களும் ஒரே நாளில் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பான எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.
ஜில்லா படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மலையாள நடிகர் மோகன்லாலும் முக்கிய கேரக்டரில் வருகிறார். ஆர்.டி.நேசன் இயக்குகிறார். ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கிறார். குடும்ப சென்டிமென்டுடன் கூடிய ஆக்சன் படமாக தயாராகிறது. இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடக்கிறது.
வீரம் படத்தில் அஜீத் ஜோடியாக தமன்னா நடிக்கிறார். சந்தானம், விதார்த், அப்புக்குட்டி போன்றோரும் உள்ளனர். சிவா இயக்குகிறார். இதன்படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடக்கிறது.

Monday, September 23, 2013

Legendary writer on board for Ilayathalapathy Vijay

Kaviperarasu Vairamuthu will be penning a song for Vijay's Jilla'Kaviperarasu' Vairamuthu is set to pen the lyrics for one of the songs in Vijay's Jilla, which has Imman taking charge of the music. Neason directs this commercial entertainer based around Madurai and the likes of Mohanlal, Kajal Agarwal, Ravi Mariya, Vidyulekha Raman and Soori complete a very strong support cast list.
 
Jilla has been filmed in places such as Madurai, Chennai and Hyderabad till now and the movie is set for release in the early part of 2014.
 
There are reports suggesting that Vijay is playing the role of a cop in the movie and even Kajal might be donning the police 'khaki'. But, we have to wait for the movie to release, to get a firm answer to such speculations. 

Sunday, September 22, 2013

ட்விட்டரில் டிரென்டாகும் 'விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா'

விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்பது உலக அளவில் ட்விட்டரில் டிரென்டாகியுள்ளது. 

விஜய்யின் ரசிகர்கள் ட்விட்டரில் தங்கள் தளபதியை அவ்வப்போது புகழ்ந்து தள்ளுகிறார்கள். அதனால் விஜய்யின் பெயர் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது. தலைவா பிரச்சனைக்கு பிறகு இந்திய சினிமாவின் நூற்றாண்டு கொண்டாட்டத்தில் விஜய் கலந்து கொள்வது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. 

இந்நிலையில் விஜய் நேற்றைய விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா 


விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்ட் ஆகியுள்ளது.

வீ லவ் விஜய் அண்ணா 

கடந்த சில நாட்களுக்கு முன்பு வீ லவ் விஜய் அண்ணா என்ற வார்த்தை ட்விட்டரில் டிரென்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

கடை வரிசை 

சினிமா நூற்றாண்டு விழாவில் விஜய்க்கு கடைசி வரிசையில் சீட் கொடுத்தாலும் இன்றைய நாளிதழ்களில் அவரது போட்டோ தான் முன்பக்கத்தில் உள்ளது என்று விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

செல்லப் புள்ள 

விஜய் கிஃப்ட் ஆஃப் 100 ஆண்டு இந்திய சினிமா எங்க வீட்டு செல்லப் புள்ள...உன்ன போல யாருமில்ல என்று விஜய்யின் தீவிர ரசிகர் ஒருவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.


ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும்.. விஜய் பெருமை

அம்மா முதல்வராக இருப்பது சினிமா கலைஞர்களுக்கு கவுரவம்: விஜய் பேச்சு

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டும் தான் என்று நடிகர் விஜய் முதல்வர் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார். 


இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழாவை முதல்வர் ஜெயலலிதா நேற்று துவக்கி வைத்தார். விழாவுக்கு இளையதளபதி விஜய் வருவாரா, மாட்டாரா என்று இருந்தது. விழாவுக்கு விஜய் அழைக்கப்பட மாட்டார் என்று கூறப்பட்ட நிலையில் அவர் விழாவில் கலந்து கொண்டார். 

விழாவில் விஜய் ஸ்டண்ட் கலைஞர்கள் மற்றும் ஜெயலலிதா பற்றி பெருமையாகப் பேசினார்.

சண்டை கலைஞர்கள்


 சினிமா 100 ஆண்டுகள் ஆனாலும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். உழைப்பாளிகள் வியர்வை சிந்தி உழைப்பவர்கள். சண்டை கலைஞர்களோ ரத்தம் சிந்த உழைப்பவர்கள். எதிர்பாராமல் நடப்பது விபத்து. ஆனால் விபத்தை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் சண்டை கலைஞர்கள் என்று விஜய் தெரிவித்தார்.


மறக்க முடியாது

 ஒரு படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஒருவர் ஆபத்தான காட்சியில் நடித்ததை அவரது மனைவியும், மகளும் கண்ணீர் பொங்க பார்த்துக் கொண்டிருந்தாங்க. அந்த காட்சியை என்னால மறக்கவே முடியாது என்று விஜய் கூறினார்

கலங்கிட்டேன் 

மற்றொரு ஸ்டண்ட் கலைஞர் நெருப்பில் காரை ஓட்டும் காட்சியில் நடிக்க வேண்டும். அவர் அந்த காட்சியில் நடிக்கும் முன்பு தனது மகளிடம் போனில் பேசிவிட்டு வந்தார். ஏன் என்று கேட்டதற்கு காட்சி முடிந்த பிறகு என்னால் பேச முடியுமோ முடியாதோ அதனால் தான் என்றார். அவர் சொன்னதை கேட்டு அப்படியே கலங்கிவிட்டேன் என்று விஜய் பேசினார்.

சல்யூட் 

படத்தில் நீங்கள் கை தட்டி ரசிக்கிற ஆக்ஷன் காட்சிகள் ஒவ்வொன்றுக்குப் பின்னாலும் சில காயங்கள், சில வலிகள், ஏன் சில மரணங்கள் கூட உள்ளது. தீயை அணைப்பவர்களை வீரர்கள் என்கிறோம். அப்படி என்றால் தீயோடு விளையாடும் ஸ்டண்ட் கலைஞர்களை எப்படி அழைப்பது?. அவர்களுக்கு என்னுடயை சல்யூட் என்றார் விஜய்.


நடிகை நாடாள்கிறார் 

அம்மா தலைமையில் இந்த சினிமா நூற்றாண்டு விழா நடப்பது நமக்கெல்லாம் கவுரவம். ஒரு நடிகையாக வாழ்க்கையைத் துவங்கி, எதிர்ப்புகள், சவால்களை எல்லாம் முறியடித்து ஒரு நடிகை நாடாள்கிறார் என்றால் அது தமிழகத்தில் மட்டுமே. இது ஒட்டுமொத்த சினிமா கலைஞர்களுக்கு கவுரவமான விஷயம் என்று விஜய் பேசினார்.



Saturday, September 21, 2013

'Jilla' release February 2014

Ilayathalapathy Vijay starrer Jilla directed by Nesan was earlier touted to be a Pongal 2014 release, clashing with Ajith's Veeram at the box office. The last time their films hit screens together was in 2007, when Vijay's Pokkiri and Ajith's Alwar released, but looks like 'Jilla' will be a February 2014 release.

Vijay-AR Murugadoss project will be the Hat-trick...

Anirudh and Hip Hop Thamizha Aadhi are aiming at Vijay-AR Murugadoss project to be their hat-trick

Ilayathalapathy Vijay is expected to join his Thuppakki director, AR Murugadoss in early 2014, after the actor wraps up Neason’s Jilla, which also stars Mohan Lal, Kajal Aggarwal, Mahat and Poornima Bhagyaraj.
The AR Murugadoss project will have Anirudh doing the music and George C Williams cranking the lens. The young composer, who is now working on Maan Karate, will feature in the Chennai city Gangsta videos song that’s released 20th September 2013.
The song will also feature Rappers ‘Hip Hop Thamizha’ Aadhi and Hard Kaur. It should be noted that Chennai City Gangsta is the second consecutive hit song which brought Anirudh and Aadhi together, after Ethir Neechal. However, our sources tell us that the duo wouldn’t collaborate for the next Siva Karthikeyan starrer, Maan Karate.
They are apparently aiming at Vijay-AR Murugadoss project to be their hat-trick. And with Vijay in the lead, the sources close to the duo inform that they will bring out the best music to satisfy the demanding fans of Ilayathalapathy Vijay.

Vijay's Jilla will have 'Special 26'

exclusive-vijays-jilla-will-have-special-26-photos-pictures-stills

Vijay's Jilla is fast being readied for an early 2014 release, and composer Imman is also working on the music side by side. He had assured fans of an album which would have both melodies and peppy tracks in the right proportion.

Earlier, he had updated in his social networking page, that the team of Jilla would try their best to convince Vijay into singing for Jilla as well. In the recent past, Vijay's numbers for Thuppakki and Thalaivaa have been roaring hits and he would be looking to add more glowing hits to his resume as a lead singer, which already comprises 25 songs.

Sources close to Imman's camp have today assured us that Vijay will indeed be singing in Jilla as well and that such plans are very much in place. But the recording for this number hasn't happened yet. So, Ilayathalapathy fans have one more reason to rejoice now as Vijay's 'Special 26' is set to get ready.

Imman meanwhile is geared up to continue his recent success streak and the Filmfare Award for his work in Kumki has only increased his focus more. His camp is very happy with the reception to his music for Desingu Raja and Varuthapadatha Valibar Sangam and the composer has also signed on for another biggie for the Studio Green banner, which would apparently feature Karthi in the lead.

Wednesday, September 18, 2013

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி

குழப்பத்தில் விஜய்.. 'எதுக்கு வம்பு.. நான் இமயமலைக்கு எஸ்கேப்' - எஸ்ஏசி
முதல்வர் கலந்து கொள்ளும் சினிமா நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டாலும் பிரச்சினை... கலந்து கொள்ளாவிட்டாலும் பிரச்சினை. எதுக்கு வம்பு என்று இமயமலைக்கு பறந்துவிட்டாராம் விஜய்யின் அப்பா எஸ் ஏ சந்திரசேகரன். 

தலைவா படப் பிரச்சினையில் பெரிய அவமானத்துக்கு உள்ளானார்கள், விஜய்யும் அவர் தந்தையும். 

கொடநாடு தேடி வந்தபோதும் விஜய்யைச் சந்திக்க முடியாதென்று திருப்பி அனுப்பி விட்டார் ஜெயலலிதா. 

அந்தப் பிரச்சினைக்குப் பிறகு இப்போது சினிமா நூற்றாண்டு விழாவுக்கு வருகிறார் முதல்வர். சொல்லப் போனால் இந்த முறை பதவி ஏற்ற பிறகு அவர் பங்கேற்கும் முதல் சினிமா நிகழ்ச்சி இது. 

இந்த நிகழ்ச்சியில் யார் யாரை அழைக்கலாம் அழைக்கக் கூடாது என பெரிய பட்டியலே தயாரித்துள்ளார்களாம். 

இதில் தனக்கும் அழைப்பு வருமா... வந்தாலும் அதை நம்பிப் போகலாமா என்றெல்லாம் விஜய்க்கு பெரிய குழப்பம் ஏற்பட்டுள்ளதாம். 

அழைப்பு வந்தாலும் வராவிட்டாலும் விழாவில் கலந்து கொள்வது சரியாக வராது என்று கருதிய எஸ்ஏ சந்திரசேகரன், இரண்டு நாட்கள் முன்கூட்டியே இமயமலைக்குப் பறந்துவிட்டார். சினிமா 100 நிகழ்ச்சிகள் முடிந்து 5 நாட்கள் கழித்தே அவர் சென்னை திரும்புகிறார். 

விஜய் சென்னையில்தான் இருக்கிறார். படப்பிடிப்பில் கலந்து கொண்டேன் என்று சொல்லவும் வழியில்லை. காரணம் 1 வாரம் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

இப்போது விஜய் வேண்டுவதெல்லாம், நமக்கு அழைப்பிதழ் வராமலிருக்க வேண்டுமே என்றுதானாம்!


Monday, September 16, 2013

Thalaivaa Total Box Office Collections

Thalaivaa Total Box Office Collections


Ilayathalapthy Vijay’s Thalaivaa has made total box office collection of more than 150 crores, from its world wide collections. The movie was released world wide on August 9th expected Tamil Nadu and in Tamil Nadu it was released only on August 20.
Thalaivaa total box office collections from Chennai alone stands at 6.5 crores. On its opening day Thalaivaa collected Rs 16 crores from world wide collections and on day 2 it collected 13 crores. Thalaivaa has made very good collections in overseas as well.
As per the latest reports and Wikipedia sources Thalaivaa total box office collections stands at Rs 195 crores till date. Directed by A.L Vijay, Thalaivaa feature Vijay and Amala Paul in lead roles.

Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office

Thalaivaa Completes 25 Days


Vijay’s Thalaivaa has successfully 25 Days of its run at Tamil Nadu box office. Thalaivaa featured Vijay and Amala Paul in lead roles.

Sunday, September 15, 2013

மோகன்லாலுக்கு திடீர் உடல் நலக்குறைவு: ‘ஜில்லா’ படப்பிடிப்பு நிறுத்தம்

c1f8c2fa-3dff-4e6d-a209-5187e74973de_S_secvpf‘தலைவா’ சர்ச்சைகளைத் தாண்டி விஜய் தற்போது ‘ஜில்லா’ படத்தில் ஜாலி மூடில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். அறிமுக இயக்குனர் நேசன் இயக்கும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்ரி தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும், ரவி மரியா, பூர்ணிமா பாக்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடத்த முடிவெடுத்தனர். இங்கு மோகன்லாலும், ரவி மரியாவும் மோதும் காட்சியை படமாக்க திட்டமிட்டிருந்தார்கள்.
இந்நிலையில், மோகன்லாலுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால் இப்படப்பிடிப்பை சற்று தள்ளி வைத்துள்ளனர். அவர் குணமாகி வந்ததும் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்துள்ளனர்.
ஆனால், இயக்குனரோ கிடைத்த கால்ஷீட்டுகளை சும்மா விடக்கூடாது என்பதற்காக, இந்த நேரத்தில் சென்னையில் விஜய் சம்பந்தப்பட்ட ஆக்ஷன் காட்சிகளை எடுக்க திட்டமிட்டிருக்கிறாராம். இதற்காக சென்னையில் முகாமிட்டு இதற்கான பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளாராம்.

போச்சே, போச்சே விஜய் படம் போச்சே: புலம்பும் நஸ்ரியா. சமந்தா ஒப்பந்தம்

விஜய் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கை நழுவியதை நினைத்து நஸ்ரியா புலம்புகிறாராம். 

நஸ்ரியா நசீம் கோலிவுட்டில் வந்த வேகத்தில் பிரபலமும் ஆனார், காதல் கிசுகிசுவிலும் சிக்கினார். அவர் ஜெய்யுடன் திருமணம் என்னும் நிக்காஹ் மற்றும் ராஜா ராணி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த படங்களில் நடிக்கையில் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டதாக செய்திகள் வந்தன. 

ஆனால் இதை நஸ்ரியா மறுத்துவிட்டார். தற்போது அவர் தனுஷுடன் நையாண்டி படத்தில் நடித்து வருகிறார். மேலும் கார்த்தியுடனும் ஜோடி சேர்கிறார்.

முருகதாஸ் 

ராஜா ராணி படத்தை தயாரித்துள்ள ஏ.ஆர். முருகதாஸ் தான் அடுத்ததாக விஜய்யை வைத்து இயக்கும் படத்தில் நடிக்க நஸ்ரியாவை கேட்டிருந்தாராம். அடடா விஜய் படம் கிடைக்கிறதே என்ற சந்தோஷத்தில் இருந்தார் நஸ்ரியா.

கமுக்கமாக முடித்த சமந்தா 

விஜய்யை வைத்து முருகதாஸ் படம் இயக்கும் செய்தியை அறிந்த சமந்தா சம்பந்தப்பட்டவர்களை சத்தமில்லாமல் தொடர்பு கொண்டு அந்த படத்தின் ஹீரோயின் வாய்ப்பை பெற்றுவிட்டார்.

பெரிய நடிகை 

நஸ்ரியா வளர்ந்து வரும் நடிகை. ஆனால் சமந்தா முன்னணி நடிகை. மேலும் தெலுங்கில் அவரது மார்க்கெட் சூப்பராக உள்ளதால் படத்தை ஆந்திரக் கரையோரமும் விற்றுவிடலாம் என்று நினைத்த முருகதாஸ் சமந்தாவை ஒப்பந்தம் செய்துவிட்டாராம்
.


போச்சே, போச்சே 

விஜய்யுடன் ஜோடி சேரப் போகிறோம் என்ற மகிழ்ச்சியில் இருந்த நஸ்ரியாவுக்கு சமந்தா கமுக்கமாக வாய்ப்பை பெற்றது அதிர்ச்சி அளித்துள்ளதாம். இப்படி விஜய் பட வாய்ப்பு கை நழுவிவிட்டதே என்று புலம்புகிறாராம் நஸ்ரியா.

கோடிகளில் புழங்கும் விஜய் படங்களின் வியாபாரம்!

விஜய் படங்களின் வியாபாரம் கோடிகளில் நடந்து வருகிறது. அப்படி என்றால் அடுத்த சூப்பர் ஸ்டார் ஆகிவிடுவாரா? 

கோலிவுட் நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு அடுத்தபடியாக குட்டீஸ்களின் மனம் கவர்ந்த நாயகன் யார் என்றால் அது விஜய் தான். நண்டு, சுண்டுகளும், கல்லூரி மாணவ, மாணவிகளும் விஜய்யை தங்கள் சொந்த அண்ணனாகவே நினைக்கின்றனர்.

 நடுவில் சில காலம் விஜய்யின் படங்கள் அவரது ரசிகர்களே பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது. இதையடுத்து நண்பன் படத்தில் இருந்து விஜய்க்கு நல்ல காலம் மீண்டும் துவங்கியது. அவரது படங்களின் சாட்டிலைட் உரிமங்கள் மட்டும் பல கோடிக்கு போய்க் கொண்டிருக்கிறது.

நண்பன், துப்பாக்கி


 ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடித்த நண்பன் படத்தின் சாட்டிலைட் உரிமம் ரூ. 12 கோடிக்கு போனது. இதே போல துப்பாக்கி படத்தின் சாட்டிலைட் உரிமமும் பல கோடிக்கு போனது. மேலும் இந்த இரண்டு படங்களுமே வசூலை அள்ளிக் குவித்தன. 

தலைவா 

தலைவா படத்திற்கு பிரச்சனை வந்ததும் வந்தது படத்தின் எதிர்பார்ப்பு கண்டமேனிக்கு எகிறிவிட்டது. இதையடுத்து தலைவா படம் மட்டும் ஓடவில்லை அதன் சாட்டிலை உரிமம் கூட ரூ.15 கோடிக்கு போனது. வாங்கியது வேறு யாருமில்லை சன் டிவி தான்.

ஜில்லா 

நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால் நடித்து வரும் ஜில்லா படத்தின் சாட்டிலை உரிமம் ரூ.18 கோடிக்கு போயுள்ளது. இது தவிர விஜய்யின் சம்பளமும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

அடுத்த சூப்பர் ஸ்டாரா?

 விஜய்யின் படங்கள் தொடர்ந்து கல்லா கட்டி வருகின்றன. அவரது படத்தின் சாட்டிலைட் உரிமங்களும் பிற நடிகர்களின் படங்களை விட அதிக விலைக்கு போகிறது. அப்படி என்றால் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டாரா?

Thursday, September 12, 2013

அரசியல் பிரவேசமா? –விஜய் பதில்



நடிகர் விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதும் இது வலுப்பெற்றது. விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என பேசினார்கள். தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களையும் விஜய் சந்தித்தார். பொதுக் கூட்டங்களிலும் பேசினார்.
ஏழைகளுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். கிராமங்கள் வரை மக்கள் இயக்கத்துக்கு கிளை அணிகளும் உருவாக்கப்பட்டன. கடந்த சட்டமன்ற தேர்தலிலேயே வெளிப்படையாக தனது அரசியல் முடிவை அறிவித்து பிரசாரங்களில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடக்கவில்லை. அரசியல் முடிவு பற்றி அதிகாரபூர்வமாக அறிவிக்காமலேயே இருந்தார்.
`தலைவா’ படம் மூலம் தனது அரசியல் கருத்துக்களை பகிரங்கப் படுத்துவார் என பேச்சு நிலவியது. அப்படம் திட்ட மிட்டபடி ரிலீசாகாமல் சர்ச்சைகளிலும் சிக்கியது. அதிலும் விஜய்யின் தெளிவான அரசியல் முடிவுகள் எதுவும் இல்லை. விஜய் அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்விகள் ரசிகர்களிடமும் பொது மக்களிடமும் எழுந்த வண்ணம் இருந்தன.
இந்த நிலையில் டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விஜய்யிடம் நீங்கள் விரைவில் அரசியலுக்கு வருவீர்களா? தலைவா படத்திலும் அதைத்தான் சொல்லி இருக்கிறீர்களா? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் `தலைவா’ படத்தில் அரசியல் பற்றி எதுவும் சொல்லவில்லை. நீங்களாகத் தான் அப்படி நினைத்து இருக்கிறீர்கள். எனக்கு அரசியல் ஆர்வம் இருக்கிறது. ஆனால் நான் அரசியலுக்கு வரப்போகிறேன் என்று எங்கேயும் சொன்னதே இல்லை.
நான் அரசியல்வாதி இல்லை. எந்த அரசியல் கட்சியையும் சார்ந்தும் நான் இல்லை. நான் ஒரு நடிகன், என் முழு கவனமும் சினிமாவில் மட்டுமே இருக்கிறது என்றார்.

Wednesday, September 11, 2013

தலைவா, ஜில்லா சேட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன்: அஜீத், சூர்யா, கார்த்தியில் விஜய்தான் நம்பர் 1!

விஜய் நடித்த ஜில்லா திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமத்தை பெரிய தொகை கொடுத்து சன் டிவி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

விஜய் படத்தின் ரெகார்ட்டை விஜய் படமே முறியடித்துள்ளதாம். ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை ரூ.18 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாம் சன் டிவி. 

சேட்டிலைட் உரிம விற்பனையில் விஜய் நடித்த திரைப்படங்கள் தான் நம்பர் 1 என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.


குழந்தைகளின் அண்ணா 

ரஜினிக்கு பிறகு குழந்தைகளால் அதிகம் விரும்பப்படும் நடிகராக உள்ளார் விஜய். எனவே டிவியில் விஜய் நடித்த படங்களை ஒளிபரப்பினால் குட்டீஸ்கள் அதிகம் பார்க்க விரும்புவார்கள்.

சேட்டிலைட் உரிமம் 

விஜய் நடித்த படங்களின் சேட்டிலைட் உரிமைத்தை வாங்க சேனல்களிடையே தனி போட்டியே நிலவுகிறது. அஜீத், சூர்யா படங்களை விட விஜய்யின் படம்தான் அதிக விலைக்கு விற்பனையாகிறதாம்.

தலைவா 

தலைவா படத்தை ரூ. 15 கோடி கொடுத்து சன் டிவி நிறுவனம் வாங்கியுள்ளது.

ஜில்லாவுக்கு அதிகம் 

அதே சமயம் விஜய் நடித்து வெளிவர உள்ள ஜில்லா திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமத்தை சன் டிவி ரூ.18 கோடிக்கு வாங்கியுள்ளதாம்.

விஜய் நம்பர் 1

 ‘ஸ்டுடியோ கிரீன்' நிறுவன அதிபர் கே.ஈ.ஞானவேல் ராஜா நான்கு பெரிய நடிகர்கள் நடித்த படங்களின் சாட்டிலைட் வியாபாரம் குறித்து ஒரு தகவலை வெளியிட்டிருக்கிறார். அதில் விஜய்க்கு தான் முதல் இடம் என்று கூறியுள்ளார்.


தல அஜீத் 

அஜீத் நடித்து திரைக்கு வர உள்ள வீரம் திரைப்படத்தின் சேட்டிலைட் உரிமம் ரூ.13 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாம்.

சூர்யா, கார்த்தி 


இதற்கு அடுத்த இடத்தில் சூர்யா, கார்த்தி நடித்த படங்கள் விற்பனையாகியுள்ளன. மேலும் கார்த்தி நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ‘ஆல் இன் ஆல் அழகு ராஜா' மற்றும் ‘பிரியாணி' படங்கள் தலா 11 ½ கோடிக்கு விலை போய்யுள்ளதாகவும் கூறியுள்ளார் ஞானவேல்ராஜா.






அமைதிதான் என் ஆயுதம்… விஜய்

தலைவா பட பிரச்சினையின் போது நான் அமைதியாக இருந்ததுதான் படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது என்று நடிகர் விஜய் கூறியுள்ளார். 

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு சன்டிவியில் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சி ஒளிபரப்பானது. 

இதில் நடிகர் விஜய், நாயகி அமலாபால், இயக்குநர் ஏ.எல்.விஜய், இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் ஆகியோர் பங்கேற்றனர்.

விஜய் அண்ணா 


நிகழ்ச்சியில் பங்கேற்ற ரசிகைகள் அனைவருமே நடிகர் விஜயை அண்ணா என்றே கூப்பிட்டனர். உங்க சிரிப்பு பிடிக்கும், உங்க டான்ஸ் பிடிக்கும் என்று கூறியதோடு என்னென்ன பிடிக்கும், எதனால் பிடிக்கும் என்றும் கூறினர்.

அழுத ரசிகை 

விஜயை நேரடியாக பார்க்க வேண்டும் என்று நினைத்திருந்த நேரத்தில் எதிர்பாரமல் சந்திக்க நேர்ந்தது ஒரு ரசிகைகக்கு கண்ணீரை வரவழைத்து விட்டது. இதனால் அருகில் அழைத்து கட்டியணைத்து ஆறுதல் சொன்னார் விஜய்.


அமைதி ஏன்?

 தலைவா பட பிரச்சினையின் போது ஊடகங்களை சந்தித்து ஏன் பேசவில்லை என்று நிகழ்ச்சித் தொகுப்பாளர் கேட்டதற்கு, அமைதியாக இருந்தால் மட்டுமே இந்த பிரச்சினை எளிதாக தீரும் என்று நினைத்தேன். நான் வேகமாக பேசி, அதனால் என் ரசிகர்கள் வேகப்பட்டு பிரச்சினை பெரிதாகவேண்டாமே என்பதானாலேயே அமைதியாக இருந்ததாக கூறினார் விஜய். தலைவா படம் தமிழ்நாட்டில் ரிலீசாக தாமதமானாலும் படத்தை வெற்றிப் படமாக்கியிருக்கின்றனர்.


என்ன ரேட்டிங்? 

தலைவா படத்திற்கு என்ன ரேட்டிங் கொடுப்பீர்கள் என்ற கேட்டதற்கு அதான் ரசிகர்கள், தமிழ்நாட்டு மக்கள் கொடுத்துவிட்டார்களே? நான் என்ன புதிதாக கொடுப்பது என்று பதிலுக்கு கேட்டார்.


ஜி.வி.பிரகாஷ் 

பெண் ரசிகைகள் அதிகம் கவலைப்பட்டது ஜி.பி.பிரகாஷ்க்கு இவ்ளோ சீக்கிரம் திருமணம் ஆகிவிட்டதே என்றுதான். உங்க குரல் ரொம்ப பிடிக்கும். ஆனால் இவ்ளோ சீக்கிரம் சைந்தவி அக்காவை கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களை என்று செல்லமாய் கோபப்பட்டனர்.


அமலாவின் கண்கள் 

நிகழ்ச்சியில் பேசிய அமலா அழகுத்தமிழில் ரசிகைகளின் கேள்விக்கு பதிலளித்தார். உங்களின் கண்கள் எங்களுக்கு ரொம்ப பிடிக்கும் என்று ஒரு ரசிகை கூறியதற்கு அழகாய் வெட்கப்பட்டார். தான் நடித்த படங்களிலேயே தனக்கு பிடித்தது மைனாதான் என்றார் அமலா.

குட்டி ரசிகர்கள் 

இளம் ரசிகைகள் மட்டுமல்லாது குட்டி ரசிகைகள் கையில் ரோஜா கொடுத்து விஜயை வரவேற்ற போதும், விஜய் அண்ணா என்று அன்பாய் பதாகையை உயர்த்தி காட்டிய நேரத்திலும் நெகிழ்ந்துவிட்டார் விஜய்.

Monday, September 9, 2013

Vijay, Kajal and the Police Story

Thuppakki-Vijay-Kajal-Thuppakki-Movie-Stills-Photos

The old scoop delved into the details of Ilayathalapathy sporting khakhis for his upcoming flick with director Nesan. We later heard the grapevine abuzz about Kajal’s dream come true as a cop in ‘Jilla’. Now, we got it confirmed and the actress, in an effort not to divulge anything, simply shrugged and smiled when quizzed about this feed.
But how well accustomed is she to the role? Actually, not at all. But going from the basics, her already fit physique favoured her a great deal on this regard, as she did not have to sweat her pounds out for the trim look. Added to that, she has been part of a training programme for Independence Day parade, hosted by a Telugu channel, which has given her ample surface level knowledge on how the police force works and carries itself. Also, the actress has invested her time in watching and learning from many cop movies, to get her demeanour right. The actress us currently shooting in Palani for ‘All In All Azhagu Raja’ and will hop on to Khakhis, likely from next month.

Sunday, September 8, 2013

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்

விஜயைத் தொடர்ந்து... மோகன்லாலுடன் இணையும் பரத்ஹிந்தியில் ‘ஜாக்பாட்' படத்தைத் தொடர்ந்து, மலையாளத்தில் கோத்ரா என்ற படத்தில் நடிக்கிறார் பரத். இப்படத்தில் இவருடன் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் நடிக்க இருக்கிறார். 

இளைய தளாபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் ஜில்லா படத்தில், அவருடன் மோகன்லால் நடித்து வருகிறார் என்பது ஏற்கனவே நாமறிந்த விஷயம் தான். இந்நிலையில், கோத்ரா என்ற மலையாளப் படத்தில் மோகன்லாலுடன் நடிக்க இருக்கிறாராம் பரத். 

பரத் ஏற்கனவே மலையாள மக்களுக்கு அறிமுகமானவர் தான். அவர் நடிப்பில் வெளிவந்த ‘போர் த பீப்பிள்' படம் கேரளாவில் வெற்றிநடை போட்டது குறிப்பிடத்தக்கது. அப்படத்தில் கோபிகா பரத்தின் ஜோடியாக நடித்திருந்தார். 

இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் நடித்து வரும் அனுபவம் குறித்து பரத் கூறுகையில், ‘இது ஒரு நல்ல அனுபவம். மோகன்லால் சார் போன்ற மூத்த நடிகர்களுடன் நடிக்கும் போது பல நல்ல விஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிகிறது. இதன் மூலம் நடிப்புத் திறமையை இன்னும் மேம்படுத்திக் கொள்ள இயலும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Friday, September 6, 2013

விநாயகர் சதுர்த்தியில் விஜய்க்கு போட்டியாகும் விஜய்

விநாயகர் சதுர்த்தி தினத்தில் தமிழக தொலைக்காட்சிகளில் போட்டி போட்டுக் கொண்டு விஜய் படங்களை ஒளிபரப்பாகின்றன. 

விஜய் டிவியில் துப்பாக்கி ஒளிபரப்பாக உள்ள நிலையில் கலைஞர் டிவியில் விஜய், திரிஷா நடித்த குருவி படம் ஒளிபரப்பாகிறது. 

ஜெயா டிவியில் விஜய், ஜெனிலியா, ஹன்சிகா நடித்த வேலாயுதம் திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. அதே சமயம் சன் டிவியில் விஜய், அசின் நடித்த காவலன் படம் ஒளிபரப்பாகிறதாம்.

கலகலப்பு 


இந்த திரைப்படங்களைத் தவிர சன் டிவியில் கலகலப்பு, நான் ஈ ஆகிய இரண்டு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளதாக முன்னோட்டம் ஒளிபரப்பாகி வருகிறது.

தலைவா ஸ்பெசல் 

இதை தவிர விஜய், அமலாபால் பங்கேற்கும் ‘தலைவா' சிறப்பு நிகழ்ச்சியும் ஒளிபரப்பாக உள்ளது.

சந்தானம் கலக்கல் 

மேலும் கல்லூரி பேராசிரியராக சந்தானம் பங்கேற்கும் நகைச்சுவை நிகழ்ச்சி சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.


கலைஞர் டிவியில் 

விநாயகர் சதுர்த்தி தினத்தன்று கலைஞர் டிவியில் விடுமுறை தின சிறப்பு நிகழ்ச்சியாக பட்டிமன்றம் ஒளிபரப்புகின்றனர். முன்னோட்டத்திலேயே நிறைய பஞ்ச் ஒளிபரப்பப்பட்டது. திரைப்படம் ரிலீசாக சென்சாரில் சர்டிபிகேட் வாங்கியது அந்தக்காலம். இப்போது கொடநாட்டில் சர்டிபிகேட் வாங்க வேண்டியிருக்கிறது என்றார் ஒரு பேச்சாளர். இதைத்தவிர ஜீ தமிழ், பாலிமர், உள்ளிட்ட பல தொலைக்காட்சிகளில் சிறப்பு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன

Thursday, September 5, 2013

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியா

விஜய், ஜெயம் ரவிக்கு போன் மேல் போன் போடும் ஜெனிலியாதிருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலான ஜெனிலியா வாய்ப்பு கேட்டு தனக்கு பழக்கமான நடிகர்களுக்கு போன் போடுகிறாராம். 

ஷங்கரின் பாய்ஸ் படம் மூலம் கோலிவுட்டுக்கு வந்தவர் ஜெனிலியா. அடுத்த படத்திலேயே விஜய்யுடன் ஜோடி சேர்ந்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்தார். இந்தியில் இம்ரான் கானுடன் சேர்ந்து அவர் நடித்த ஜானே து யா ஜானே நா படம் சூப்பர் ஹிட்டானது. 

அவர் ஜெயம் ரவியுடன் நடித்த சந்தோஷ் சுப்பிரமணியம் சூப்பர் ஹிட் படமானது. அதன் மூலம் அவருக்கு நல்ல பெயரும் கிடைத்தது. மறுபடியும் விஜய்யுடன் சேர்ந்து வேலாயுதம் படத்தில் நடித்தார். விஜய்க்கு ஜோடி இல்லை என்றாலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். இதற்கிடையே அவர் பாலிவுட் நடிகர் ரிதேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்து கொண்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார். 

திருமணத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் இல்லை. இந்நிலையில் அவர் தெலுங்கு நடிகர்கள் வெங்கடேஷ், பவன் கல்யாண், கோலிவுட்டில் விஜய், ஜெயம் ரவி ஆகியோருக்கு போன் போட்டு வாய்ப்பு கேட்டு வருகிறாராம்.

விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது என்று இயக்குனர் நேசன் தெரிவித்துள்ளார். 

விஜய்யின் தலைவா படம் பட்டபாட்டை பார்த்து ஜில்லாவில் இருந்த அரசியல் பஞ்ச் வசனங்களை தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரி நீக்கிவிட்டார். மேலும் தனது படத்தில் அரசியல் பஞ்ச் வசனங்களே கூடாது என்று கூறிவிட்டார்
.
விஜய்யின் ஜில்லாவில் 'அது' 1 சதவீதம் கூட இருக்காது: இயக்குனர்

இந்நிலையில் இது குறித்து இயக்குனர் நேசன் கூறுகையில், 

ஜில்லாவில் அரசியல் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒரு சதவீதம் கூட இருக்காது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நான் எழுதிய திரைக்கதை அப்படியே தான் உள்ளது என்றார். 

ஜில்லா என்ற தலைப்பை விஜய்யிடம் நேசன் தெரிவித்ததுமே அவர் குஷியாகி இதுவே இருக்கட்டும் என்று கூறிவிட்டாராம். முன்னதாக நேசன் விஜய்யின் வேலாயுதம் படத்தில் துணை இயக்குனராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

சந்தானம் ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கவிருக்கிறாராம். 

இன்றைய தேதியில் அதிகம் கிராக்கி உள்ள காமெடி நடிகர் என்றால் அது சந்தானம் தான். சந்தானம் மீது கோலிவுட் ஹீரோக்கள் பலர் கடுப்பில் உள்ளார்களாம். நாம் ஒரு படத்தில் சில மாதங்கள் நடித்து வாங்கும் சம்பளத்தை மனிதர் 10 நாட்கள் நடித்து வாங்கிவிடுகிறாரே என்று ஹீரோக்கள் காட்டமாக உள்ளார்களாம். 

இப்பொழுது அவர்கள் வயிறு ரியும்படி சந்தானம் ஒன்றை செய்துள்ளார். வேறு ஒன்றும் இல்லை ரூ.2 கோடிக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்குகிறாராம். தற்போது கோலிவுட்டில் விஜய் மற்றும் இயக்குனர் ஷங்கரிடம் மட்டுமே ரோல்ஸ் ராய்ஸ் உள்ளது.
விஜய், ஷங்கரை அடுத்து 'ரோல்ஸ் ராய்ஸ்' கார் வாங்கும் சந்தானம்

முன்பு பாலிவுட் கவர்ச்சி நடிகை மல்லிகா ஷெராவத் ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ஆர்டர் கொடுத்தபோது அதை ஓட்ட உங்களுக்கு தகுதி இல்லை என்று அந்நிறுவனம் தெரிவித்துவிட்டது. ஆனால் சந்தானம் தமிழக மக்களை சிரிக்க வைக்கிறார் என்ற தகுதியை வைத்து அவருக்கு காரை விற்கிறதாம். 

தமிழகத்தில் ரூ.2 கோடிக்கு கார் வாங்கும் ஒரே காமெடி நடிகர் சந்தானம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.