எம்ஜிஆர், ரஜினியின் படங்களின் பார்முலாதான் சினிமாவில் எவர்கிரீன் வெற்றி பார்முலா என்றார் நடிகர் விஜய்.நடிகர் விஜய்யின் `வேலாயுதம்' படம் தீபாவளிக்கு ரிலீசாகி ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் வெற்றி பெற்றதால், அதைப் பகிர்ந்து கொள்ள பிரஸ் மீட் வைத்திருந்தார் நடிகர் விஜய்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், "நான் நடிச்ச 52 படங்களை விட 'வேலாயுதம்' பெரிய ஹிட்டாகியுள்ளது என்கிரார்கள். கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இப்படியொரு அருமையான படம் கொடுத்த இயக்குனர் ராஜாவுக்கு நன்றி. தமிழ் சினிமாவில் முக்கியமான இயக்குனராக அவர் வருவார்.
ஜெயம் ரவியும் கதை விவாதத்துக்கு வந்தார்...
ஜெயம்ரவிக்கும் நான் முக்கியமாக நன்றி சொல்ல வேண்டும். அவரும் இந்த படத்தின் கதை விவாதத்தில் பங்கேற்றார். ராஜாவின் தந்தை எடிட்டர் மோகனும் பல ஆலோசனைகள் சொன்னார்.
ஆஸ்கார் ரவிச்சந்திரன் படத்துக்கு தேவையான எல்லா வசதிகளையும் ஏன் எதற்கு என்று கேட்காமல் செய்து கொடுத்தார். விஜய் ஆண்டனி ரீ ரிக்கார்டிங் படத்துக்கு பெரிய பலம். படத்துக்கு பிரிண்ட்கள் அதிகம் போடுறாங்க, தியேட்டர்கள் எண்ணிக்கையும் கூட்டுவதாக செய்திகள் வருகின்றன. இது படம் ஹிட்டானதற்கு அறிகுறி," என்றார் விஜய்.
அப்போது ஒரு நிருபர், "உங்கள் படங்களில் எம்ஜிஆர் பாணியில் வந்தது இந்தப் படம்தான் என்பது சரியா?" என்றார்.
உடனே விஜய், "எம்.ஜி.ஆர். பார்முலாவில் படம் பண்ண எல்லோரும் ஆசைப்படுவார்கள். அது தவறு அல்ல. எம்.ஜி.ஆர். பாணியில் படம் பண்ணுவது சாதாரணம் அல்ல. அது போல நடிக்க நல்ல கதை அமையணும். அது 'வேலாயுதம்' படத்தில் இருக்கு," என்றார்.
தொடர்ந்து, " ஆரம்பத்தில் நீங்கள் ரஜினி பாணியில் நடிப்பதாகச் சொன்னீர்கள். இப்போது எம்ஜிஆர் பாணி என்கிறீர்கள்," என்றனர் நிருபர்கள்.
அதற்கு பதிலளித்த விஜய், "எம்ஜிஆர், ரஜினி படங்களின் பார்முலா என்றுமே எவர்கிரீன். நான் ஆரம்பத்திலிருந்தே இதை சரியான வாய்ப்பு கிடைக்கும்போது பயன்படுத்தியுள்ளேன். மறுக்கவில்லை," என்றார்.
நெட்டில் விடாதீங்க...
மேலும் அவர் கூறுகையில், "கிளைமாக்சில் கூட்டத்தினர் பிடித்து வரும் கொடிகள் எனது மக்கள் இயக்க கொடி அல்ல.
இந்தப் படம் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரனை மகிழ்வித்துள்ளது. நான் இப்போதுதான் அவரைச் சந்தித்துவிட்டு வருகிறேன். ஹேப்பியா சார் என்று கேட்டேன். அவரோ, "கவலையே இல்ல.. படம் சூப்பர் ஹிட். நான் பார்த்துக் கொள்கிறேன்," என்றார். இதைவிட வேறு என்ன வேண்டும்.
இண்டர்நெட்டில் வேலாயுதம் படம் வந்ததாக தகவல் வந்தது. அதை தடுக்க எனது இண்டர்நெட் ரசிகர்கள் முயற்சி எடுத்துள்ளனர். புதுப்படங்களை இது போல் இண்டர்நெட்டில் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நான் ஒரே பாணியில் நடிப்பதாக சொல்வது தவறு. 'காவலன்' படத்தில் என் பாணி இல்லை. சித்திக் வேறு மாதிரி அப்படத்தை எடுத்தார். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்வேன்.
அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் நடிப்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும். யோஹன் அடுத்த வருடம் ஆரம்பமாகும். சீமான் படம் குறித்து பின்னர் சொல்கிறேன்," என்றார்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குநர் ராஜா கூறுகையில், வாழ்க்கையில் எனக்கு மிகப் பெரிய திருப்பம் தந்த படம் வேலாயுதம். அதற்கு காரணமான விஜய், ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரனுக்கு நன்றி என்றார்.
இரண்டு படங்கள் ஓடும் திரையரங்குகளும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தன, போட்டி பலமானது என்பதால் விஜய் ரசிகர்கள் அளவுக்கு அதிகமாகவே வேலாயுதத்தை வரவேற்றார்கள். 




விஜய் நடிக்கும் ‘வேலாயுதம்’ படத்துக்கு, அனைவரும் பார்க்கக் கூடிய படம் என ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். விஜய் – ஜெனிலியா, ஹன்ஸிகா, சந்தானம், சரண்யா மோகன் நடிப்பில், ‘ஜெயம்’ ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேலாயுதம்’ படத்தை, ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரித்துள்ளார்.
வேலாயுதம் படம் தீடீரென்று தீபாவளி போட்டியில் இருந்து விலகிக்கொள்ள உத்தேசித்தாக உறுதியான தகவல்கள் உலா வந்தன கோடம்பாக்கத்தில். திடீர் விலகலுக்கு காரணமாகச் சொல்லப்பட்டத்து சரியான தியேட்டர்கள் அமையவில்லை என்பது. ஆனால் நிஜமான காரணம் 7-ஆம் அறிவு படத்துக்கு வேலாயுதம் போட்டியாக அமைய முடியாது என்று தெரிய வந்ததாலேயே இந்த முடிவை எடுத்தார்கள் என்று தகவல்கள் கசிந்தன.
விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போவதால் ஜெனிலியாவின் கடைசி படம் வேலாயுதம்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில். ஜெனிலியாவுக்கும் இந்தி நடிகரும் மத்திய அமைச்சர் மகனுமான ரிதேஷ் தேஷ்முக்கிற்கும் சில தினங்களுக்கு முன் நிச்சயதார்த்தம் நடந்தது. இது காதல் திருமணமாகும்.
புதிய தெம்போடு காத்திருக்கிறது வேலாயுதம் டீம். இந்த தெம்புக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்றதும் ஒரு காரணமாக இருக்கலாம். தனது பிள்ளைக்காக அவர் சட்டதிட்டங்களை வளைக்கப் போவதில்லை என்றாலும், மலையை இழுக்கும்போது செடியை பிடித்துக் கொள்வதில்லையா? அப்படிதான் இதுவும்.
என்னுடைய முதல்பட நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.
0
நண்பன் என்ற பெயரில் வரவுள்ள இப்படத்தை பிரமாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்குகிறார்.
ஆனால் இந்த கூட்டணியை சேர்த்து வைத்தது ஏ.எம்.ரத்னம் என்பது நாம் யாருக்கும் தெரியாது.
நீண்டதொரு இடைவெளிக்குப்பின்னர் மிகுந்த எதிர்பார்ப்புடனும் விஜய் ரசிகர்களின் அதீத எதிர்பார்ப்புடனும் தீபாவளியன்று வெளிவர இருக்கும் வேலாயுதம் வெற்றி பெறுமா?

வாரணம் ஆயிரம் சமீரா ரெட்டி நடுநிசி நாய்களிலும் ஹீரோயினாக இருந்தார். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வந்து போன சமந்தாதான் அதன் தெலுங்கு பதிப்பில் ஹீரோயின்.