Wednesday, October 12, 2011

விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வம்: ப்ரியங்கா சோப்ரா

பாலிவுட் நடிகையாக இருந்தாலும் ப்ரியங்கா சோப்ரா முதன் முதலில் கதாநாயகியாக களமிறங்கியது கொலிவுட்டில் தான்.
விஜய்க்கு ஜோடியாக தமிழன் படத்தில் அறிமுகமாகி தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வந்து கொண்டிருக்கும் ப்ரியங்கா சோப்ரா தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் கொண்டுள்ளார்.
என்னுடைய முதல்பட நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆவலாய் இருப்பதாக கூறியுள்ளார். கடந்த சிலதினங்களுக்கு முன் சாம்பியன்ஸ் லீக் கிரிக்கட் இறுதிபோட்டியை காண வந்திருந்தார்.
அப்போது பேட்டியளித்த ப்ரியங்கா சினிமாவில் நான் அறிமுகமானது கொலிவுட்டில் தான். முதல்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்தேன். விஜய் மீது எனக்கு எப்பவும் தனி விருப்பம் உண்டு.
அவருடன் நடித்ததை என்னால் மறக்க முடியாது. விஜய் மட்டுமல்லாது இங்குள்ள பல நடிகர்களையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். தமிழ் சினிமா முன்பை விட தற்போது பலமடங்கு மாற்றம் கண்டுள்ளது.
சமீபத்திய சில தமிழ் படங்களை பார்த்து வியந்து போனேன். எனக்கும் தமிழ் படங்களில் நடிக்கவும், குறிப்பாக என்னுடைய முதல் நடிகர் விஜயுடன் மீண்டும் நடிக்க ஆர்வமாய் இருக்கிறேன்.
எனது கனவு நிறைவேறினால் மிகழ்ச்சியடைவேன். அதேசமயம் தமிழ் படங்களில் நடிக்க ஆர்வம் இருந்தாலும் கொஞ்சம் பயமும் இருக்கிறது.
பயத்திற்கு முக்கிய காரணம் இங்குள்ள நடிகர்களுக்கு சமமாக எப்படி ஆடப்போகிறேன் என்ற கவலை மட்டும் தான் என்கிறார்.
சென்னை தனக்கு ரொம்ப பிடித்த ஊர் என்றும் இங்கு வந்து இறங்கியதும் ஹொட்டலில் நான் ஓடர் செய்வது மீன் குழம்பு தான். சென்னை மீன் குழம்புக்கு நான் மிகப்பெரிய ரசிகை என்றார்.
சென்னையில் தனது உறவினர்கள் வீடு இருக்கிறது. இருந்தாலும் நான் இதுவரை சென்னையை முழுவதுமாக சுற்றி பார்த்தது இல்லை. சுற்றி காண்பிக்க எவரேனும் வருவீர்களா என்கிறார் ப்ரியங்கா.

No comments:

Post a Comment