Wednesday, February 13, 2013

விஜய் – ஆடியோ நாயகன்

சொந்தப்பட விழாவுக்கே வராதவர் அ‌ஜீத் என்றால் சொந்த பந்தமில்லாவிட்டாலும் அழைத்தால் ஓடி வந்து அட்டெண்ட் செய்கிறவர் இளையதளபதி விஜய். இந்த நல்ல குணம் காரணமாக அவரின் தலைவா படப்பிடிப்பு இரண்டு நாட்கள் கட்டாகியிருக்கிறது. ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தலைவா படத்தின் படப்பிடிப்பு மும்பையில் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் வெளிநாடு செல்லவிருக்கிறது மொத்த டீமும். இப்படியொரு பிஸி ஷெட்யூ‌லில் பி.டிசெல்வகுமாரிடமிருந்து அழைப்பு. தனது ஒன்பதுல குரு படத்தின் ஆடியோ விழாவில் பங்கேற்க வேண்டும் என்று. பி.டி.செல்வகுமார் விஜய்யின் முன்னாள் பிஆர்ஓ. அழைத்ததால் தட்ட முடியாது. ஓகே என்று சொல்லி விழாவுக்கு வந்துவிட்டார். இ‌‌ன்று முருகதாஸும் ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் இணைந்து தயாரிக்கும் வத்திக்குச்சி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா. படத்தின் நாயகன் முருகதாஸின் தம்பி. விஜய்தான் கலந்து கொள்ள வேண்டும் என்பது முருகதாஸின் அன்பு கட்டளை. துப்பாக்கி என்ற சூப்பர்ஹிட் படத்தை தந்தவரின் எளிய ஆசை. அதையும் இ‌ன்று விஜய் நிறைவேற்‌றினார். ஆக, ஆடியோ விழாக்கள் காரணமாக தலைவா படத்தின் இரண்டு நாள் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.

No comments:

Post a Comment