இனி ஆண்டுக்கு இரு படங்கள் செய்வேன் என்று அறிவித்துள்ள விஜய்யை திரையரங்க உரிமையாளர் சங்கம் பாராட்டியுள்ளது.
இதுகுறித்து அச்சங்கத்தின் இணைச் செயலாளர் திருச்சி ஸ்ரீதர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அன்பு தம்பி விஜய்,
இன்றைய தினம் தாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையைப் படித்து மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தேன்.
அழிந்து வரும் திரையரங்குகளைக் காக்க தாங்கள் உள்பட அனைத்து முன்னணி நடிகர்களும் ஆண்டுக்கு மூன்று படங்களாவது நடிக்க வேண்டும் என கடந்த வாரம் பத்திரிகை வாயிலாக வேண்டுகோள் விடுத்திருந்தோம்.
அதை ஏற்று, இனி ஆண்டுக்கு இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இரவு பகலாக உழைத்து வருவதாக அறிக்கை வெளியிட்டு, திரையரங்குகளைக் காப்பாற்ற நான் தயார் என உணர்த்தியதோடு, மற்ற கலைஞர்களுக்கும் முன் மாதிரியாகத் திகழும் உங்களுக்கு திரையரங்கு உரிமையாளர்கள் சார்பில் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
-இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment