Thursday, June 20, 2013

விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்

விஜய்யை இயக்க மாட்டேன்னு சுந்தர் சி. சொன்னாரா?: குஷ்பு விளக்கம்விஜய்யை இயக்க மாட்டேன் என்று சுந்தர். சி. ஒருபோதும் தெரிவித்தது இல்லை என்று குஷ்பு கூறியுள்ளார்

விஜய் முழு கதையையும் கேட்டுவிட்டு தான் படத்தில் நடிப்பதா, வேண்டாமா என்று முடிவு செய்வார். அதனால் முன்னணி இயக்குனர்கள் கூட முழு கதையையும் தயார் செய்து வைத்துக் கொண்டு தான் விஜய்யிடம் செல்வார்கள். விஜய்யை யோஹான் அத்தியாயம் 1 படத்திற்கு கௌதம் மேனன் புக் செய்தாலும் அவர் கதையை சொல்லாததால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். படமும் கைவிடப்பட்டது.

இந்நிலையில் சுந்தர் சி. தனக்கு கோர்வையாக கதை சொல்ல வராது என்றும், அதனால் விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்றும் தெரிவித்ததாகக் கூறப்பட்டது.

இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

எங்கேயோ, ஏதோ குழப்பம். விஜய்யை வைத்து படம் எடுக்க மாட்டேன் என்று சுந்தர் கூறியதே இல்லை. இருவருமே கடின உழைப்பாளிகள் என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment