விடுதலைச் சிறுத்தைகள் பாசிஸ ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடித்தி வருகிறார்கள். விஜய்யிடம் கையெழுத்து கேட்ட போது போட முடியாது என்று சொன்னதாக சிறுத்தைகள் குற்றம்சாற்றுகிறார்கள். விஜய் சார்பில் வாய்ஸ் கொடுக்கும் அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன், அப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்று தெரிவித்துள்ளார். அத்துடன் நிறுத்தியிருக்கலாம். அதற்கு மேல் அவர் சொன்னதுதான் காமெடி.
தமிழ் ஈழம் மலரவும், ஈழத்தமிழர் பாதுகாப்பாக வாழவும் விஜய் வழி செய்வார் என்று கூறியிருக்கிறார். காவலன் படத்தை ஒழுங்காக ரிலீஸ் செய்ய முடியாமல் விழி பிதுங்கி அதிமுகவிடம் அடைக்கலம் தேடியவர் ஈழத்தை மலர வைக்கப் போகிறாராம். கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் கீறி வைகுண்டம் போன கதைதான்.
No comments:
Post a Comment