Wednesday, August 14, 2013

தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

தலைவா திரைப்படம் ஓரிரு நாட்களில் வெளியாகிவிடும்.. அதுவரை ரசிகர்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் அம்மா' தலைவா பட விவகாரத்தில் தலையிட்டு வெளியிட உதவ வேண்டும் என்றும் நடிகர் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று இரவு அவர் வெளியிட்ட வீடியோ அறிக்கையில் கூறியுள்ளதாவது: எல்லோருக்கும் வணக்கம்
தலைவா வெளியாகாததால் ஆடிப்போயிருக்கிறோம்! முதல்வர் 'அம்மா' தலையிட வேண்டும்..: நடிகர் விஜய்

சில தவிர்க்க முடியாத காரணங்களால் தலைவா படம் ரிலீஸ் ஆகலை. கரெக்டா ரிலீஸுக்கு 2 நாளுக்கு முன்பு அடையாளம் தெரியாத நபர்கள், திரையரங்க உரிமையாளர்களுக்கு மிரட்டல்களை விடுத்தனர். 

அதனால யோசிச்சு வெளியிடத்தான் இந்த தாமதம். இதனால ஹோல் யூனிட்டுமே ஆடிப்போய்த்தான் இருக்கிறோம்... 

மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களை சந்திக்க அப்பாயின்மென்ட் கேட்டிருக்கிறோம்.. ஓரிரு நாட்களில் அவங்க எங்களை மீட் பண்ணுவாங்கன்னு நினைக்கிறேன்... 

தமிழக முதல்வர் எவ்ளோ நல்ல விஷயங்கள் செய்துகிட்டு இருக்காங்க.. தமிழகத்தை முதன்மை மாநிலமாக்குவதற்காக உழைத்துக் கொண்டிருக்கிறாங்க.

நடிகர் விஜய்யின் வீடியோ அறிக்கை

No comments:

Post a Comment