Sunday, May 8, 2011

விஜய்யின் வேலாயுதமும், ஆஸ்காரின் தயக்கமும்!

“வேலாயுதம்” திரைப்படம் எழுபது சதவிகிதம், எண்பது சதவிகிதம் முடிந்து விட்டது என கூறப்பட்டு வந்தாலும் ஐம்பது சதவிகிதம் படப்பிடிப்பு தான் பூரணமாக முடிந்திருக்கிறதாம்.
மேற்கொண்டு படப்பிடிப்பு நடத்த தயாரிப்பாளர் ஆஸ்கார் பிலிம்ஸ் வி.ரவிச்சந்திரன் தயங்கி வருகிறாராம். காரணம், தேர்தல் முடிவுக்குப்பின் தி.மு.க., பெரிய அளவில் தொ‌ல்லைகள் வரும்! ஒருவேளை படத்தை ரிலீஸ் பண்ணக்கூட முடியாமல் போகலாம். எனவே வீணாக முதலீடு செய்வானேன்…? என யோசிக்கிறதாம் ஆஸ்கார் தரப்பு.
ஒருவேளை தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் விஜய் தரப்பு இறங்கி வந்து சமாதானம் செய்து கொண்டால் மீதி படப்பிடிப்பு நடத்தி கொள்ளலாம் என்பது, தயாரிப்பு தரப்பின் தற்போதைய நிலையாம். இதனால் சொல்லவும் முடியாமல், மெல்லவும் முடியாமல் இருப்பது இயக்குநர் “ஜெயம்” ராஜா தான் என்பது தான் பாவம்!

No comments:

Post a Comment