Sunday, May 22, 2011

ராணாவுக்காக தியாகம் புரிந்த மணிரத்னம்

ராணா கைவிடப்பட்டதா, இல்லையா என்பதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும். இந்த படத்தின் தாமதத்தை பார்க்கிற மணிரத்னம் நகத்தை கடித்துக் கொண்டிருப்பார் என்பது மட்டும் நிச்சயம். காரணம், தான் எடுக்கப் போகும் பொன்னியின் செல்வன் படத்திற்காக ரஹ்மானிடம் கதை சொல்லப் போனார் மணி.
முழு கதையையும் கேட்ட இசைப்புயல் இந்த கதையின் பல காட்சிகள் அப்படியே ராணா படத்தில் இருக்கு. அதுமட்டுமல்ல அப்படத்தை இயக்குவது கே.எஸ்.ரவிகுமார் என்பதால் உங்கள் படத்திற்கு முன்பாகவே வந்துவிடும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் நீங்கள் பொன்னியின் செல்வனை கைவிடுவதே நல்லது என்று கூறினாராம்.
இதையும் யோசித்துப் பார்த்த மணி அப்படத்தை கைவிட்டு விட்டார். ஆனால் திடீரென்று ரஜினிக்கு உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது. அதுமட்டுமல்ல ஆறு மாதங்களுக்காவது சினிமா ஷுட்டிங்குக்கு செல்லக் கூடாது.
அப்படியே போனாலும் முன்பு போல துள்ளி குதிப்பதை நிறுத்துங்கள் என்று கூறியிருக்கிறார்களாம் டாக்டர்கள். பேசாமல் பொன்னியின் செல்வனை நாம் எடுத்திருக்கலாமோ என்று இப்போதும் மணிரத்னம் நினைக்க வாய்ப்பிருக்கிறது.

No comments:

Post a Comment