Monday, March 21, 2011

விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 24

விக்ரம் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 24


விஜய் நடிப்பில் உருவான காவலன் படத்தை மிகுந்த சிரமப்பட்டு எப்படியோ வெளியிட்டு விட்டார். இப்போது  தான் விஜய் நிம்மதி பெருமூச்சு விட்டு இருப்பார்.  ஆனாலும், உள்ளுக்குள் படம் நன்றாக போக வேண்டுமே என்ற கவலையில் தான் இருக்கிறார். இன்னும் படத்தை ஓடவிடாமல் ஏதாவது செய்வார்களோ! என்ற அச்சம் இருக்கிறதாம்(திருட்டு வீசிடிய போலீஸ் துணையோடு வெளியிட்டால் என்ன பண்ணுவது என்ற பயம் தான் இதற்கு காரணம்) . 
இதற்கிடையில் விஜயின் அடுத்த படத்தை பற்றிய தகவல் வெளிவந்துள்ளது. தற்போது விஜய் நடிப்பில் 'ஜெயம்'  ராஜா இயக்கத்தில்  வளர்ந்து வரும் 'வேலாயுதம்' படம் முடிவடையும் தருவாயில் உள்ளது. இதனை தொடர்ந்து விஜய் சீமான் இயக்கத்தில் 'கோபம்' என்ற படத்தில் நடிப்பதாக உள்ளது. இந்த நிலையில் விஜய் மீண்டும் ஒரு படத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார். 'யாவரும் நலம்' படத்தின் இயக்குநர் விக்ரம். கே குமார் இயக்கத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை ஏ.எம். ரத்தினம் மிகவும் பிரமாண்டமான முறையில் தயாரிக்கிறார்.

இந்த படத்திற்கு '24'  என்று பெயர் சூட்டியுள்ளார்கள். 'அழகிய தமிழ் மகன்' படத்திற்கு பிறகு இந்த படத்தில் விஜய்  இரட்டை வேடம் ஏற்று நடிக்கிறார். இதில் ஒரு விஜய் விஞ்ஞானியாக வருகிறார். இன்னும் ஒரு விஜயின் வேடம் பற்றிய தகவல் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். 
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக யாரை போடலாம் என்று இதுவரை முடிவாக வில்லை. இருந்தாலும் அமலா பால் மற்றும் ஹன்சிகா நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ள விஜயின் 24 எந்தவித சிக்கலும் இன்றி வெளிவருகிறதா அல்லது இதுவும் 3 இடியட்ஸ் போன்று அறிவிப்போடு நிக்க போகிறதா என்பது போக போகத்தான் தெரியவரும்.      

No comments:

Post a Comment