Tuesday, March 29, 2011

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்

விஜய்யின் அரசியல் பொதுக் கூட்டம்  
இன்று விஜய்யின் முதல் அரசியல் பொதுக் கூட்டம் அரங்கேறுகிறது. மீனவர்கள் பெயரால் நடத்தப்படும் இந்தக் கூட்டத்துக்கு விஜய்யின் மக்கள் இயக்கத்தின் அகில இந்திய பொதுச்செயலாளர் எஸ்.ஏ.சந்திரசேகரன் தலைமை தாங்குகிறார்.

சிங்கள ராணுவம் தமிழக மீனவர்களை கொலை செய்வதும், தாக்குவதும், உபகரணங்களை களவாடிச் செல்வதும் அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. புறநானூற்றுப் படையே புறப்பட்டு வா என சினிமாவில் வீர வசனம் எழுதும் தலைவர்கள் டெல்லிக்கு தந்தி அனுப்புவதோடு தங்களுடைய புறநானூற்று வீரத்தை பெட்டிக்குள் பூட்டிவிட்டார்கள். மீதமிருக்கும் உதி‌ரிகள் அவ்வப்போது சவுண்ட் விடுவதோடு ச‌ரி. விஜய் போன்ற ஆளும் கட்சியால் கட்டம் கட்டப்பட்டவர்களுக்கும் மீனவன்தான் பாதுகாப்பு கேடயம்.

இன்று விஜய்யின் மக்கள் இயக்கம் சார்பில் நாகப்பட்டினம் விடிபி கல்லூரி மைதானத்தில் பொதுக் கூட்டம் நடக்கிறது. மீனவன் சுட்டுக் கொல்லப்படுவதை கண்டித்து அனைவரும் குரல் எழுப்ப வேண்டும் என்பதுதான் இந்த பொதுக் கூட்டத்தின் நோக்கம். விஜய்யும் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். இந்த கூட்டத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என அவர் குறிப்பிடுவார் என ரசிகர்கள் நம்புகிறார்கள். அதனால் அரசியல் கட்சிகளும் இந்த பொதுக் கூட்டத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள்

No comments:

Post a Comment