Monday, March 21, 2011

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை என்ன?

விஜய் நடிக்கும் வேலாயுதம் படத்தின் கதை என்ன?

100 கோடி பட்ஜெட்டில் படம் எடுக்கிற தெம்பு இருந்தும், தனது நிறுவனம் தயாரித்த இரண்டு படங்களை பல் பிடுங்கி உட்கார வைத்திருக்கிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன். லீலை, மாஸ்கோவின் காவேரி ஆகிய அந்த இரண்டு பட இயக்குனர்களும், தங்கள் முதல் படைப்பை போஸ்டரில் கூட கண்டுகளிக்க முடியாத வேதனையில் இருக்கிறார்கள். இந்த நிலையில் அவர் தயாரிக்கவிருக்கும் முக்கியமான படம்தான் வேலாயுதம். விஜய் ஹீரோவாக நடித்து ஜெயம் ராஜா இயக்கப் போகும் இப்படத்தின் துவக்க விழாவும் இன்று நாளை என்று நாட்களை கடத்திக் கொண்டிருக்கிறது. (அகில உலக விஜய் ரசிகர் மன்றத்தை விழா மண்டபத்துல திரட்டுற ஐடியா இருக்குதாம்)
ஜெயம் ராஜாவும், விஜய்யும் ரீமேக் பிரியர்கள் என்பது தமிழகம் அறிந்ததுதான். விஜய்யை பொருத்தவரை அவ்வப்போது இந்த ஐடியா காலை வாரிவிட்டாலும், ராஜாவுக்கு ரீமேக்தான் ராசியோ ராசி. அந்த வகையில் இப்போது அவர் தேர்ந்தெடுத்திருக்கும் கதையும் ரீமேக்தான் என்கிறார்கள் கோடம்பாக்கத்தில்.
மறைந்த இயக்குனர் திருப்பதிசாமி சில வருடங்களுக்கு முன் தெலுங்கில் இயக்கிய ‘ஆசாத்’ என்ற படத்தை தழுவிதான் இந்த வேலாயுதத்தை உருவாக்கப் போகிறாராம் ராஜா. இந்தியன், முதல்வன், அந்நியன் என்று ஷங்கரின் கைவண்ணத்தை பிட்டு பிட்டு பிசைந்த படம்தான் அந்த ஆசாத் என்கிறது தெலுங்கு பட வட்டாரம். அப்படின்னா….? புரிஞ்சு போச்!

No comments:

Post a Comment