Tuesday, March 22, 2011

விஜய் சாய்சில் சவுத்ரி



விஜய் அடுத்ததாக நடிக்கப் போகும் படம் என்ன? கோடம்பாக்கத்தை சுற்றி ஆயிரமாயிரம் கேள்விகளும் யூகங்களும் சுற்றிக் கொண்டிருந்தாலும், விஜய்யின் எண்ணம் ஆர்.பி.சவுத்ரி தயாரிக்கும் படத்திலேயே இருக்கிறதாம். மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் நீண்டகால தயாரிப்பாக இருக்கும்.
சீமானின் பகலவன் படம் நிச்சயம் அரசியல் உள்குத்துகளும், நெருப்பு வசனங்களும் கொண்டது. அது இப்போது சரி வராது. அதனால்தான் சவுத்ரி படத்தை ஆரம்பித்துவிடலாமே என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். முதல் கட்டமாக படத்தின் மியூசிக் கம்போசிங் வேலையை ஆரம்பிக்கலாம் என்று பச்சைக் கொடியும் காட்டிவிட்டாராம்.
விஜய் படம் என்றாலே நான் நீ என்று போட்டி போடுவார்கள் இசையமைப்பாளர்கள். இந்த முறை அந்த போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பாகவே தட்டிச் சென்றிருக்கிறார் இளைய இசையமைப்பாளர் தமன். முதலில் யோசித்த விஜய், ஒரு குத்துப்பாட்டு அவசியம் என்று சொல்லி தமன் பெயரை டிக் அடித்தாராம்

No comments:

Post a Comment