Tuesday, March 22, 2011

விஜய் நியூஸ்


இன்னொரு விஜய் செய்தி. இதுவும் ரொம்ப சோக மயமானதுதான். தமிழக மீனவர்கள் கொல்லப்படுவதை கண்டித்து நாகப்பட்டினத்தில் கண்டன கூட்டம் நடத்தினாரல்லவா? அக்கூட்டத்தில் மிக ஆவேசமாக பேசிய விஜய், இந்த மீனவர் படுகொலையை கண்டித்து உடனே நடவடிக்கை எடுக்கும்படி மத்திய மாநில அரசுகளை வற்புறுத்த வேண்டும்.
நீங்கள் எல்லாரும் உடனடியாக இரண்டு அரசுகளுக்கும் தந்தி அனுப்புவதுதான் சரியான வழி. லட்சக்கணக்கான தந்திகள் இரு அரசுகளையும் நோக்கி குவியட்டும் என்றெல்லாம் உசுப்பேற்றினார். ஆனால் அவர் சொல்லை யாரும் கேட்டதாக தெரியவில்லை. மிக சொற்ப அளவிலேயே தந்திகள் அனுப்பப்பட்டதாம்.
இதற்கு முன்பும் இலங்கை பிரச்சனை தொடர்பாக அவர் சென்னையில் உண்ணாவிரதம் இருந்தபோதும் இப்படி தெரிவித்திருந்தார். அதற்கு போன தந்திகள் கூட இப்போது இல்லையாம்

No comments:

Post a Comment