Thursday, August 4, 2011

வேட்டைக்காரன் பாட்டு வேலாயுதத்தில்? விஜய் எடுக்கப் போகும் முடிவு..


வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழா இம்மாதம் 15 ந் தேதி நடைபெறக் கூடும் என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் குறுந்தகட்டில் சேர்க்க வேண்டிய Velayudhamஒரு பாடல் பற்றிய முடிவையே இன்னும் எடுக்காமல் இருக்கிறார்களாம். ஒன்றுக்கு மூன்று பாடல்களை போட்டுக் கொடுத்துவிட்ட விஜய் ஆன்ட்டனி இதில் எதை விஜய் தேர்வு செய்யப் போகிறார் என்று விரல் நகத்தை கடித்தபடி காத்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தின் பாடல்களை விஜய்யிடம் காட்டி, அவர் எதை முடிவு செய்கிறாரோ அதைதான் படத்தில் பயன்படுத்தியும் வருகிறார் இயக்குனரான ஜெயம் ராஜாவும். இதுவரை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்கும் படங்களில் அந்த முடிவு அவர் கையில்தான் இருக்கும். இது பெரிய ஸ்டார் படமல்லவா? அதனால்தான் முடிவை விஜய்யிடம் ஒப்படைத்துவிட்டு ரவியும் சைலண்ட்டாக ஒதுங்கிக் கொண்டிருக்கிறார்.
இதுவா என்று குழம்பிய விஜய், இசையமைப்பாளர் விஜய் ஆன்ட்டனியை அழைத்து வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலை செலக்ட் பண்ணி யூஸ் பண்ணாம வச்சுருக்கோமே, அதை இந்த படத்தில் சேர்த்துக்கலாமா என்று ஆலோசித்தாராம்.
அதற்கும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. எப்படியோ சீக்கிரம் ஸ்கிரீனை திறந்து ஒளியை பாய்ச்சுங்ணா...

No comments:

Post a Comment