Thursday, August 25, 2011

உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றது பெருமை அன்னா ஹசாரேவை சந்தித்து விஜய் பேச்சு


அன்னாஹசாரேவின் உண்ணாவிரத போராட்டத்திற்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய். இன்று காலை சென்னையிலிருந்து டெல்லி சென்றவர், ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருக்கும் அன்னாவை சந்தித்து இந்த போராட்டம் வெற்றியடைய தன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
அதன்பின் அவர் பேசியதாவது-
ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்ற உணர்வை இந்த தேசம் முழுவதும் விதைத்து மகத்தான விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார் அன்னாVijayஹசாரே. முக்கியமாக இளைஞர்கள் மாணவர்கள் இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் எழுச்சியுடன் பங்கு பெற்றிருக்கிறார்கள்.
ஒரு தமிழன் என்ற முறையில் அவரை நேரில் சந்தித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பினேன். அந்த வகையில் இந்த உண்ணாவிரதத்தில் பங்கு பெற்றதை பெருமையாக கருதுகிறேன். அன்னா ஹசாரேவுக்கு இறைவன் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியத்தையும் வழங்கி அவர் தொடர்ந்து பொது சேவை செய்ய வேண்டும். இந்த மேடையில் நான் வேண்டிக் கொள்வது இதுதான். அவருடைய அறவழி போராட்டத்திற்கு எங்கள் மக்கள் இயக்கம் உறுதுணையாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment