Wednesday, August 24, 2011

கதையை மாத்துங்க... கவுதமிடம் விஜய் யோசனை


யோஹன் அத்தியாயம் ஒன்று படத்தை இப்போது துவங்கப் போவதில்லை கவுதம். ஆனால், படம் துவங்குகிற வரைக்கும் அவருக்கு சரியான வேலை கொடுத்திருக்கிறார் விஜய்.
என்னவாம்?
கவுதம்மேனன் திடீரென்று சின்னத்திரையில் சீரியல் எடுக்கப் போகிறேன் என்றுGautham Menonகூறிவந்தாரல்லவா? அதில் கூட ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கப் போகிறார் என்று தகவல் வந்ததே, நினைவிருக்கிறதா? அந்த சீரியல் கதையைதான் விஜய்யிடம் சொல்லிவிட்டாராம். முதலில் அது புரியாமல் சம்மதித்த விஜய், அப்புறமாக சில திருத்தங்களை கூறியிருக்கிறாராம் கதையில். முக்கியமாக நான் வெளிநாட்டுக்கு போய் குற்றவாளிகளை புலனாய்ந்து கண்டு பிடித்து வருவதாக சம்பவங்கள் இருந்தால் அதை ரசிகர்கள் எப்படி ஏற்றுக் கொள்வார்கள்? இது விஜயகாந்த் டைப் படமாச்சே என்று கூறிவிட மாட்டார்களா என்று சந்தேகத்தை எழுப்பினாராம்.
மறுபடியும் விண்ணைதாண்டி வருவாயா மாதிரி காதல் கதையை எடுத்தால் கூட அதில் நடிக்க நான் ரெடி. இதுபோன்ற துப்பறியும் கதையை கொஞ்சம் மாற்றலாமே என்றாராம். இதையடுத்து தீவிரமாக கதை விவாதத்தில் ஈடுபட்டிருக்கிறார் கவுதம்.
இப்படிதான் கதை மாற்றத்திற்காக அடிக்கடி ரிவர்ஸ் அடித்துக் கொண்டிருந்தார் சீமானும்.

No comments:

Post a Comment