ஊழலுக்கு எதிராக தில்லியில் உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்க, நடிகர் விஜய் இன்று தில்லி சென்றார். அங்கே அண்ணா ஹசாரேவுடன் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு கொண்டு அவர் பேசியதாவது;
“ஊழல் பிரச்னை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதத்தை, இந்த இயக்கம் தூண்டியிருக்கிறது. ஒரு தமிழனாக இங்கு வந்து பங்கேற்பதில் பெருமிதம் கொள்கிறேன். அண்ணாவின் உடல் நலனுக்காக ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். சத்தியாகிரஹத்தின் மேல் பற்றுள்ள அண்ணா ஹசாரேவின் மன உறுதியை நான் வணங்குகிறேன்’’ என்றார்.
தில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில், கடந்த 9 நாட்களாக தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறார் அண்ணா ஹசாரே. இப்போராட்டத்தில் அவருடன் இன்று ஒருநாள் மட்டும் நடிகர் விஜயும் உடன் அவரது மக்கள் இயக்கத்தினரும் கலந்து கொள்கிறார்கள்.
No comments:
Post a Comment