Saturday, August 27, 2011

திருட்டு சிடியில் கேட்காதீங்க... ரசிகர்களிடம் விஜய் வேண்டுகோள்


ரசனை விஷயத்தில் மதுரை எப்பவுமே ஒன் ஸ்டெப் மேலேதான். சாப்பாட்டுVelayuthamவிஷயத்தில் துவங்கி, சினிமாவை ரசிக்கிற விஷயத்தில் முன்னேறி அடிதடியில் ஆல் த பெஸ்ட் வாங்குகிற வரைக்கும் இவர்களின் ரசனை கொஞ்சம் தாறுமாறானது. இந்த லட்சணத்தில் வேலாயுதம் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை மதுரையில் வைத்தால் என்னாகும்? மறுபடியும் ஒரு கள்ளழகர் திருவிழாவாக இருக்கும் போலிருக்கிறது விழா நடக்கப் போகும் 28 ந் தேதி.
விஜய்யுடன் நடிக்கும் ஜெனிலியா, ஹன்சிகா மோத்வானியும் கூட நிகழ்ச்சி நடைபெறும் நாளன்று மதுரைக்கு வர இருப்பதால், இப்பவே ரசிகர்கள் மனசில் உடுக்கை சத்தம். தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கும் விஜய் படம் பற்றி சில தகவல்களையும் அவர்களுக்காக கூறியிருக்கிறார். அதில் முக்கியமான விஷயம் இதுதான்.
பொதுவா இப்போ எல்லா படத்தையும் ஆடியோ ரிலீஸ் பண்ணுறதுக்கு முன்னாடியே இன்டர்நெட்ல ரிலீஸ் பண்ணிடுறாங்க. தயவு செய்து என்னோட ரசிகர்கள் இதை ஆதரிக்க வேண்டாம் என்று கூறியிருக்கிறார் அவர்.
இந்த படத்தில் ஒரு ட்ரையின் ஃபைட் பண்ணியிருக்கிறாராம். இது விஜய்யின் பல நாள் ஆசை. இந்த படத்தின் மூலமாக நிறைவேறியிருக்கிறது. ஹாலிவுட் ஃபைட் மாஸ்டர் டாம்டேல்மர் என்பவர் இந்த சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்திருக்கிறாராம். பொதுவா ஒரு படத்தின் ஃபைட் வலிய திணிக்கப்பட்டதா இருக்கக் கூடாது. இந்த ஃபைட் கதையோடு இணைந்து வருது என்கிறார் விஜய்.

No comments:

Post a Comment