Friday, June 10, 2011

இரண்டொரு தினங்களில் சீனா செல்கிறார் விஜய்


இன்னும் சில தினங்களில் சீனா கிளம்புகிறார் நடிகர் விஜய். ஏதேனும் படப்பிடிப்பா என்றால் அதுதான் இல்லை. விஜய் படங்கள் எதற்கும் இதுவரைக்கும் அமையாத அந்தஸ்தின் காரணமாக உருவானதுதான் இந்த பயணம்.
காவலன் படம் முதலில் மலையாளத்தில் தயாரானது. அங்கு அப்படத்தின் பெயர் பாடிகாட். அப்புறம்தான் தமிழில் காவலன் என்றானது. பிறகு ரெடி என்ற பெயரில் இந்தியில் தயாராகிக் கொண்டிருக்கிறது. அப்படியே தெலுங்கு கன்னடம் என்று சட்டையை மாற்றிக் கொள்ளவும் தயாராகிவிட்டது.
இதற்கிடையில் சீனாவில் நடைபெறும் ஷாங்காய் திரைப்பட விழாவில் காவலன் திரைப்படமும் கலந்து கொள்ளவிருக்கிறது. படம் திரையிடப்படுகிற அந்த நேரத்தில் அங்கிருந்தால் சந்தோஷமாக இருக்கும் என்று நினைக்கிறாராம் விஜய். அதுமட்டுமல்ல, இவருக்கு விருதும் காத்திருக்கிறது.
இப்படியெல்லாம் உலகம் இப்படத்தை பெருமைப்படுத்திக் கொண்டிருக்க, உள்ளூரில் ஒரே அடிதடி சப்தம். எல்லாம் இந்த காவலன் தொடர்பான பண விவகாரம்தான். இப்படத்தின் தயாரிப்பாளர் ரொமெஷ்பாபு தயாரிப்பாளர் ஷக்தி சிதம்பத்தின் மீது காவல் துறையில் புகார் கொடுத்திருக்கிறார்.

No comments:

Post a Comment