Monday, June 13, 2011

பேரரசுக்கு ஓகே சொன்னாரா விஜய்?


perarasu-vijay-13-06-11
பேரரசு ஒரு கதை சொன்னதாகவும் அது விஜய்க்கு பிடித்துப்போய் ஓகே சொல்லிவிட்டதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே சீமான், அமீர் ஆகியோர் விஜய்க்கு கதை சொல்லி விஜய்யிடம் சம்மதம் வாங்கி காத்திருக்கிறார்கள். வேலாயுதம் ஏறக்குறைய முடிவடைந்து விட்ட நிலையில், நண்பன் படத்தை முடித்துவிட்டு, சீமானின் பகலவனில் விஜய் நடிக்கப்போவதாக கூறப்படுகிறது. சீமானும் பகலவன் படத்திற்கான விவாதம், திரைக்கதை ஆகியவற்றை முடித்துவிட்டதாக தகவல். இது இல்லாமல் கண்ணபிரான் கதையை விஜய்யிடம் கூறி சம்பதம் வாங்கி இருக்கிறார் அமீர். தற்போது பேரரசு விஜய்க்கு கதை சொல்லி இம்ப்ரஸ் செய்துவிட்டதாக தகவல். இது பற்றி விசாரித்தால் விசயம் வேறுமாதிரி இருக்கிறது. அதுஎன்னவென்றால் கதையுடன் பேரரசு விஜய்யை அனுகியது உண்மைதான் ஆனால், விஜய்யோ; தற்போது அடுத்தடுத்து வரிசையாக படங்கள் இருப்பதால் மீண்டும் நானே உங்களை அழைக்கிறேன் என்று கூறிவிட்டதாக சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment