விஜய், தன் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று, தன் மனைவி சங்கீதாவுடன் எக்மோரில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று, தன்னுடைய பிறந்தநாளன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார். இதில் விசேசம் என்னவென்றால், விஜய் பிறந்தது இதே மருத்துவமனையில்தான். அதன்பின் கோடம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சென்ற விஜய் அங்கும் நேற்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்தார்.
அதன் பின் ஷோபா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்களிடம் பொறுமையாக நின்று வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
விஜய் ரசிகர்கள் நேற்று தமிழகம் முழுதும் கண்தானம் ரத்ததானம் போன்ற நற்பணிகளை செய்தனர்.
அதன் பின் ஷோபா திருமண மண்டபத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நீண்ட வரிசையில் காத்திருந்த ரசிகர்களிடம் பொறுமையாக நின்று வாழ்த்துக்களை பெற்றுக் கொண்டார்.
விஜய் ரசிகர்கள் நேற்று தமிழகம் முழுதும் கண்தானம் ரத்ததானம் போன்ற நற்பணிகளை செய்தனர்.
No comments:
Post a Comment