Sunday, June 12, 2011

இலங்கைக்கு பொருளாதார தடை விதிக்கக் கோரிய ஜெ.வுக்கு நன்றி-விஜய்

Vijayசென்னை: உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது என்று இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்திற்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கை அரசை ஐக்கிய நாடுகள் சபை போர் குற்றவாளி என்று அடையாளம் காட்டியுள்ள இந்த வேளையில், தமிழர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதகம் விளைவித்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் என தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

உரிமைகளையும், உடைமைகளையும், உறவுகளையும் இழந்து பல்வேறு நாடுகளில் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்கு இந்த தீர்மானம் ஆறுதலாக இருக்கும். ஒவ்வொரு தமிழனுக்கும் இது பெரும் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது. இனி வரும் காலங்களில் இலங்கை தமிழர்கள் அமைதியாகவும், சந்தோஷமாகவும், சரி சம உரிமைகளோடும் வாழ இந்த தீர்மானம் முதல் படியாக இருக்கும் என்று விஜய் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment