Friday, June 17, 2011

பகலவன் தள்ளிப் போவது ஏன்?


விஜய்-சீமான் இணைந்து உருவாக்கப் போகும் பகலவன் திரைப்படம் தள்ளிப் போவதன் மர்மம் என்ன? கோடம்பாக்கத்தில் இரண்டு பேர் சந்திக்கும் போதெல்லாம் எழுப்பிக் கொண்டிருக்கும் கேள்வி இது. விடை தெரியாமல் திரிந்து கொண்டிருக்கும் மற்றவர்களுக்காகவும் மூக்கை நுழைத்து விசாரித்தோம். கிடைத்த தகவல்கள் அனைத்தும் தீப்பொறி ரகம். 

வேறொன்றுமில்லை, சிறைக்குள்ளிருந்துதான் இப்படத்தின் திரைக்கதை வசனத்தை எழுதியிருந்தார் செந்தமிழன் சீமான். தன்னை உள்ளே தள்ளியிருக்கிறாரே என்ற எரிச்சலும், ஈழ பிரச்சனையில் பாராமுகமாக இருக்கிறாரே வருத்தமும் இழையோட அன்றைய ஆளுங்கட்சியையும் அதன் தலைவரையும் கிழியோ கிழி என கிழித்திருந்தாராம் அந்த வசனங்களில். இதே ஆத்திரமும் கோபமும் விஜய்க்கும் இருந்தது.
அதனால் இந்த வசனங்களை அப்படியே அனல் பறக்க பேசுவது என்றும் முடிவெடுத்தாராம் விஜய். ஆனால் ஆட்சிமாற்றம் நடந்துவிட்டதே என்ன செய்ய? பழைய வசனங்களை இப்போது பயன்படுத்தினால் இந்த ஆட்சியை விமர்சித்தது போலாகுமே என்பதால் அத்தனையும் மாற்ற நினைத்தார்களாம் இருவரும்.
இப்போதுதான் மொத்த வசனத்தையும் மாற்றிக் கொண்டிருக்கிறாராம் சீமான்.

No comments:

Post a Comment