Friday, April 15, 2011

பொன்னியின் செல்வனில் ராஜ்கிரண்



தமிழன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா, அப்படத்தின் படுதோல்விக்கு பின் தமிழ்நாட்டு பக்கமே வரவில்லை.
பல வருடங்கள் கழித்து அவரை மீண்டும் அழைத்து வந்திருக்கிறார் மணிரத்னம். இவர் இயக்கவிருக்கும் "பொன்னியின் செல்வன்" படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம் பிரியங்கா.
இன்னொரு முக்கிய ரோலில் தான் அனுஷ்கா நடிக்கிறார். இவர்கள் போக திடீரென்று படத்தில் சேர்க்கப்பட்டிருக்கும் முக்கியஸ்தர் ராஜ்கிரண். இவருக்கு என்ன கேரக்டர் என்பதை கூட சொல்லவில்லையாம் மணிரத்னம்.
பொன்னியின் செல்வனில் நடிக்கிறீங்களா என்று மட்டும் கேட்டாராம். மணிரத்னம் படத்தில் நடிக்கிறார் என்பதே ராஜ்கிரணுக்கு பெருமை சேர்க்கிற விடயம் தானே? சரி என்று கூறிவிட்டாராம். மற்ற விடயங்களையெல்லாம் இனிமேல் தான் பேசுவார்கள்.

No comments:

Post a Comment