Tuesday, April 12, 2011

பொன்னியின் செல்வன் - புதுத் தகவல்கள்


பொன்னியின் செல்வன் படத்துக்கான டியூன்களை கம்போஸ் செய்ய தொடங்கியிருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெ‌ரிவிக்கின்றன. இனி ஒரு வருடத்துக்கு இசைப்பணி இல்லை என்று ரஹ்மான் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ச‌ரித்திர‌க் கதை என்பதால் நவீனத்தின் சுவடே பதியாத இடங்கள் படத்துக்கு மிகத் தேவை. டெலிஃபோனும், கேபிள் டிவியும் இல்லாத இடம் இந்தியாவில் ஏது? அப்படிப்பட்ட இடங்களைத் தேடி கா‌ரிலேயே சுற்றியிருக்கிறார் மணிரத்னம். இந்தப் பயணத்தில் சில இடங்கள் அவரது மனதுக்கு உகந்ததாக அமைந்ததாகவும் சொல்கிறார்கள்.

பொன்னியின் செல்வனில் விஜய், மகேஷ் பாபு, ஆர்யா, சத்யரா‌ஜ் நடிக்கிறார்கள். அனுஷ்காவும் உண்டு. ஒளிப்பதிவு பி.சி.ஸ்ரீராம் என்று முதலில் கூறப்பட்டது. உறுமி ச‌ரித்திரப் படத்தை இப்போதுதான் முடித்திருக்கிறார் என்பதால் சந்தோஷ் சிவனின் பெயரும் ஒளிப்பதிவாளர் லிஸ்டில் அடிபடுகிறது.

விரைவில் படப்பிடிப்பை தொடங்கவுள்ளார் மணிரத்னம்.

No comments:

Post a Comment