Monday, April 25, 2011

விஜய்,சூர்யா,அஜீத்,கார்த்தி,விக்ரம் இவர்களில், யார் நம்பர் ஒன்..?


பூவே உனக்காக,காதலுக்கு மரியாதை..,என விஜய்க்கு டாப் ஹிட் கொடுத்த இந்த படங்கள்தான் விஜய்க்கு தமிழ்சினிமாவில் ஒரு நிரந்தர இடத்தை கொடுத்தது என்றால் மிகையில்லை..காதல் படங்களால் வளர்ந்த விஜய் ஆக்‌ஷன் அதகளத்துக்கு மாறினார்.மாறிய படம் திருமலை...



திருமலை சென்றால் திருப்பம் வரும் என்று சொல்வார்கள்..அது விஜய் சினிமா வாழ்க்கையில் உண்மை ஆயிற்று...திருமலை விஜய் க்கு ஆக்‌ஷனும் வரும்...நடனத்துடன் சண்டையும் போடத்தெரியும்..என மக்களுக்கு உணர்த்தியது....ஆனா அதையே தொங்கிய விஜய் ஆக்‌ஷன் சினிமாக்களாக தொடர்ந்து நடித்து,ரஜினியின் வசூலை முறியடித்து,ரஜினி யை தோற்கடித்து சூப்பர் ஸ்டார் ஆகிவிடவேண்டும் என பேராசைப்பட்டார்..ரஜினி தமிழ் சினிமாவின் சக்கரவர்த்தி,நிரந்தர தமிழ் சினிமாவின் முதல்வர் என சந்திரமுகி,வசூலில் ரசிகர்கள் நிரூபித்தனர்...சந்திரமுகிக்கு போட்டியாக விஜய்யும்,அவர் தந்தையும் அவசர அவசரமாக இறக்கி விடப்பட்ட சச்சின் படம்,என்னப்பா படம் முழுக்க ஒரே புகை புகையா சீன் எடுத்திருக்கானுங்க..என்ற விமர்சனத்துடன் ஃப்ளாப் ஆனது...

வெகு வேகமாக வளர்ந்த விஜய்க்கு மற்றொரு பெரிய திருப்பம் கொடுத்த படம் என்றால்.,கில்லி .இயக்குனர் தரணியின் பரபர திரைக்கதையில்,வெளிவந்து பட்டி தொட்டியெல்லாம் தட்டியெறிந்த படம்...தெலுங்கு ஒக்கடுவை உருவி அப்படியே எடுத்திருந்தாலும்,தெலுங்கு mageshbabu அளவுக்கு விஜய ஆக்‌ஷன் காட்டாவிட்டாலும்,கதை நன்றாக இருந்ததும்,படம் பரபரப்பாக இருந்ததும்,முக்கியமாக அப்படிபோடு பாட்டு சிறுசுகள் முதல் பெருசுக வரை எப்போதும் முண்ணுமுணுக்க செய்ததாலும் மாஸ் ஹிட்.

 விஜய் சினிமா வாழ்வில் மறக்க முடியாத ,ஆக்‌ஷன் படம் கொடுத்தவர்களில் இயக்குனர் பேரரசுக்கு முக்கிய பங்கு உண்டு...
அண்ணன்,தங்கை பாசத்தை கொட்டி எடுக்கப்பட்ட ,அதே சமயம்  விதம் விதமான பல வில்லன்களை வேட்டையாடும் வேடத்தில் விஜய் கலக்கியிருக்கும் படம்தான் திருப்பாட்சி..

முதல்பாதி கிராமத்திலும்,இரண்டாம் பாதி நகரத்திலுமாக படம் வேகமெடுக்கும்..முதல் பாதி பாசம்..இரண்டாம் பாதி ஆக்‌ஷன்.... பட்டி தொட்டியெங்கும் வசூல் அள்ளியது...


சிவகாசி,அடேயப்பா படம் முழுக்க பட்டாசு மாதிரி வெடிக்கும்...திரைக்கதை...பிரகாஷ்ராஜ் அண்ணனாகவும்,விஜய் தம்பியாகவும் நடித்திருப்பார்கள்..சும்மா இருவரும் செம கலக்கு கலக்கியிருப்பார்கள்...முழுக்க பட்டாசு வெடிப்பது போல வெடித்து தூள் கிளப்பினார்..அட..என்னத்த சொல்வேனுங்க..வடுமாங்கா ஊறுதுங்க..என அசின் கனவுக்கன்னியாக தமிழ் இளைஞர்கள் மனதில் சேர் போட்டு உட்கார்ந்தார்.இதுவும் வசூலில் பின்னியெடுத்தது...இந்த இரண்டு படங்களும் கொடுத்த வெற்றியை விஜய்யால் அடுத்தடுத்து காப்பாற்றிகொள்ள முடியவில்லை.

இப்படி வேகமாக மேலே ஏறுவதும்,கீழே இறங்குவதுமாக இருக்கும் நேரத்தில் ,அடுத்தடுத்து ஆதி,குருவி,என மக்கள் மனதில் நஞ்சை விதைத்தார் விஜய்...இதன் கொடூரங்கள் தாங்க முடியாமல் மக்கள் அவருக்கு ஃப்ளாப் கொடுத்தும் அவர் அசரவில்லை..அடுத்தும் சுறா என்ற படத்தை கொடுத்து மக்களை கொத்து கொத்தாக கடிக்க வைத்தார்...இதன் கொடூரம் இன்னும் மோசமாக இருந்தது...மொட்டைமாடியில் இருந்து ரயிலுக்கு பறக்கும் அந்த காட்சியை பார்த்துவிட்டு,ஜாக்கிஷானே இனி என் படங்கள் ஓடாது என தேம்பினார் என்றால் பாருங்கள்....

அதன்பிறகு காவலன்....ஆக்சன் படங்கள் தோல்வி அடைவதால் ,சரி ஒரு மாறுதலுக்கு ஆக்சனும் இல்லாமல் காமெடியும் இல்லாமல் காதலும் இல்லாமல் ,ஒரு மாதிரி வந்த படம்...படம் வெற்றி என்றாலும் எதிர்பார்த்த வெற்றி அல்ல...


சூர்யா நந்தா படத்தில் பாலா வின் பட்டை தீட்டலுக்கு பிறகுதான் அவரது கிராஃப் ஏறத்தொடங்கியது...நந்தாவே அவரை ஆக்‌ஷன் பாதைக்கு அருமையான ரூட் போட்டு கொடுத்துவிட்டதால் சூர்யா கலக்க ஆரம்பித்துவிட்டார்.

நந்தாவுக்கு முன் வெளிவந்த பூவெல்லாம் கேட்டுப்பார்,ஃப்ரெண்ட்ஸ் படங்கள் வெற்றிபெற்ராலும் அவை சூர்யாவுக்கு முக்கியத்துவம் கொடுத்த படங்கள் என சொல்ல முடியாது....


பூவெல்லாம் கேட்டுப்பார் ஜோதிகா ஃபார்மில் இருந்த நேரம்...ஜோதிகா அளவுக்கு சூர்யா பிரபலம் இல்லை..ஆனாலும் இந்த ஜோடி கெமிஸ்ட்ரி ..இளைஞர்களின் மனதை கொள்ளை கொண்டது....மக்கள் மனதை கவர்ந்தது..இவர்கள் வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள்.

நந்தாவுக்கு பின் சூர்யா வுக்கு பிரேக் கொடுத்த படம் என்றால் அது ,மவுனம் பேசியதேதான்....காதலுக்கு புது பெயிண்ட் அடிச்ச மாதிரி...அருமையான கதை,திரைக்கதை....இதுதான் பருத்திவீரன் இயக்குனர் கம் நடிகர் அமீரின் முதல் படம்..இதில்தான் திரிஷாவுக்கும் பிரேக் கிடைத்தது....

சூர்யாவின் நிதானமான நடிப்பு,அருமையான வசனங்கள் மக்களின் வரவேற்பை பெற்றது....
அதன்பின் பெரும் வரவேற்பும் மட்டுமில்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் திருப்தி செய்த படம் என்றால் காக்க காக்க.

தமிழ் போலீஸ் ஸ்டோரி....என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட் ஆக சூர்யா மிரட்டியிருப்பார்..அருமையான ஒளிப்பதிவு..தங்க சிலையாக ஜோதிகா,பரபர திரைக்கதை,சூப்பர் வசனங்கள்,.பெரிதும் புகழப்பட்ட எடிட்டிங் என படம் மெஹா ஹிட்...இதன் மூலம் சூர்யா தமிழ் சினிமாவின் முண்ணனி நடிகர் வரிசைக்கு பிரமோசன் ஆனார்...

No comments:

Post a Comment