Tuesday, April 12, 2011

மணிரத்தினத்தின் மெகா முயற்சி


மணிரத்னம் பொன்னியின் செல்வன் கதையை படமாக்குகிறார் என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் படத்தில் நடிப்பவர்கள் யார் யார் என்பதும் கசியத் தொடங்கியுள்ளது.

பொன்னியின் செல்வன் கல்கியின் வரலாற்றுக் கதை. அதற்கு திரைக்கதை, வசனம் எழுதும் பணியில் தீவிரமாக இருக்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். இந்தப் படத்துக்கு சன் பிக்சர்ஸ் நிதியுதவி செய்வதாகவும் ஒரு பேச்சு இருக்கிறது.

மெகா பட்ஜெட்டில் தயாராகும் இந்தப் படத்தில் விஜய், விக்ரம், விஷால் ஆகியோர் இணைந்து நடிக்கயிருப்பதாக மணிரத்னம் அலுவலக வட்டாரம் கிசுகிசுக்கிறது. ஆனால் இதனை சம்பந்தப்பட்ட நடிகர்களோ, மணிரத்னமோ உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment