Sunday, April 24, 2011

ஷங்கர் இயக்கத்தில் விஜய்யின் நண்பன்


ஷங்கர் இயக்கத்தில் விஜய்யின் நண்பன்
இந்தியில் வெளிவந்து சூப்பர்-டூப்பர் ஹிட்டான “3-இடியட்ஸ்” படம் தமிழில் “நண்பன்” என்ற பெயரில் உருவாகி வருகிறது. இப்படத்தை பிரம்மாண்ட இயக்குநர் டைரக்டர் ஷங்கர் இயக்கி வருகிறார். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா, எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் நடித்து வருகின்றனர்.
இப்படத்தின் முதல்கட்ட சூட்டிங் கடந்தமாதம் ஊட்டியில் தொடங்கியது. ஊட்டியில் சூட்டிங்கை முடித்‌த கையொடு, 2ம் கட்ட சூட்டிங்கிற்காக டேராடூன் புறப்பட்டு சென்றது நண்பன் டீம். அங்கு விறுவிறுப்பாக நடந்த இப்படத்தின் சூட்டிங் காட்சிகள் நிறைவு பெற்றுவிட்டன.
இதுகுறித்து இயக்குநர் ஷங்கர் கூறியதாவது, நண்பன் படத்தின் 2ம் கட்ட சூட்டிங் டேராடூனில் வெற்றிகரமாக முடிந்து விட்டது. 2ம் கட்ட சூட்டிங் முழுவதும் கல்லூரியை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. முதன்முறையாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், இலியானா ஆகியோரை வைத்து இயக்கியது ஒரு புது அனுபவத்தை தந்தது என்றார்.
நண்பன் படத்துக்காக ஒரு நாளைக்கு ஒருவேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் நடிகர் ஸ்ரீகாந்த். ஸ்ரீகாந்தின் வேடம் கல்லூரி மாணவன் வேடமாம். இதற்காக உடலை குறைத்து, மாணவன் தோற்றத்துக்கு மாற வேண்டும்  என்று டைரக்டர் ஷங்கர், ஸ்ரீகாந்துக்கு கட்டளையிட்டிருக்கிறார்.
இதையடுத்து தற்போது நாளொன்றுக்கு ஒரு வேளை அல்லது இரண்டு வேளை மட்டுமே சாப்பிட்டு டயட்டில் இருக்கிறார் ஸ்ரீகாந்த். சாப்பிடாமல் பட்டினி கிடப்பதற்கு கைமேல் பலன் கிடைத்திருப்பதாக கூறும் ஸ்ரீகாந்த், சினிமாதான் என் வாழ்க்கை என்றாகி விட்டது. அதற்காக ஒரு வேளை சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் தவறில்லை. படம் நன்றாக வர வேண்டும். ஸ்ரீகாந்த் நன்றாக நடித்திருக்கிறான் என்று ரசிகர்கள் சொல்ல வேண்டும். அதற்காக எதுவும் செய்ய தயாராக இருப்பதுதான் ஒரு நடிகனுக்கு அழகு. அதைத்தான் நானும் செய்து கொண்டிருக்கிறேன், என்கிறார்.

No comments:

Post a Comment