Friday, April 29, 2011

பொன்னியின் செல்வன் கைவிடப்படவில்லை


மணிரத்தினம் பொன்னியின் செல்வன் படம் ஆரம்பிக்கிறார் என்ற செய்தி வந்ததிலிருந்து பொன்னியின் செல்வன் பற்றிய செய்திகள் குறைவில்லாமல் வந்துகொண்டிருக்கிறது. தற்பொழுது சில நாட்கள் மட்டுமே பொன்னியின் செல்வன் பற்றி செய்திகள் வரவில்லை இப்பொழுது மீண்டும் செய்தி வரத்தொடங்கிவிட்டது. நேற்று சில வலைத்தளங்களில் பொன்னியின் செல்வன் படம் கைவிடப்படுகிறது என வந்தது.

படத்தின் கீரோ கீரோயின்கள் மட்டும் அன்றி லொகேசனையும் தெரிவு செய்து விட்டு படம் நிறுத்தப்படுகின்றது என்றசெய்தி அதிர்சியாகவே இருந்தது. இப்படத்தில் நடிக்கும் விஜய் ஆர்யா போன்ற நடிகர்கள் தமக்கு கிடைக்கும் நேரங்களில் பொன்னியின் செல்வன் நாவலுடனே இருக்கின்றனர்.

இவ்வாறு இருக்க இந்த செய்தி வெளியாகியுள்ளது. ஆனால் இந்தசெய்தி பொய்யானதாகும்.மணிரத்தினம் தரப்பிடமிருந்து இது பற்றிக்கேட்ட போது இந்த செய்தி வதந்தி எனக்கூறப்பட்டுள்ளது.படத்தின் திரைக்கதை நடவடிக்கையில் உள்ளது படக்குழு. படம் இவ்வருடம் இறுதியில் தொடங்கவுள்ளதால் பரபரப்பு செய்திகளுக்கு பஞ்சமிருக்காது. எனினும் விஜய் ஆர்யா மகேஸ்பாபு அனுஸ்கா நடிப்பது உறுதியாகிவிட்டது. இசை ரகுமான். தயாரிப்பு ஈரோஸ் நிறுவனம் எனக்கூறப்படுகிறது பட்ஜெட் இதுவரை 100 கோடி எனக்கூறப்படுகிறது.

No comments:

Post a Comment