கேடி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா. முதல்படமே இவருக்கு சரியாக அமையவில்லை. இதனால் கோலிவுட்டில் இருந்து ஓரம் கட்டப்பட்ட இலியானா டோலிவுட்டுக்கு போனார். தமிழில் இவருக்கு கிடைக்காத மதிப்பு தெலுங்கில் கிடைத்தது. இதனால் அங்கு நம்பர்-1 நடிகையாகவும் ஆனார். இப்போது நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் கோலிவுட்டில் கால் பதிக்கிறார்.படத்தில் விஜய்யுடன் நடித்தது குறித்து இலியானா கூறியாதாவது, தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடிக்க வந்துள்ளேன். அதுவும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேன். இதுதான் அவருடன் நான் பண்ணும் முதல்படம். விஜய்யுடன் நடித்தபோது சற்று பயம் இருந்தது. அவரது பெரிய புஜங்களையும் நடனத்தையும் பார்த்து பயந்தேன். ஆனால் அவருடன் பழகிய போது அவரை பற்றி நன்கு புரிந்து கொண்டேன். உண்மையில் விஜய் மிகவும் நல்லவர், மற்றவர்களுடன் பழகுவதில் மிகவும் இனிமையானவர். அவருடன் இணைந்து நடிப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.
No comments:
Post a Comment