Friday, July 8, 2011

அக்டோபர் 2 முதல் பகலவன்

பல முறை அலசிவிட்டோம் சீமானின் பகலவன் தொடர்பாக. ஆனால் வெளிச்சம்தான் கண்ணுக்கே தெரியாமலிருந்தது. ஆனால் இப்போது விஜய்யிடம் கொஞ்சம் முன்னேற்றம் தெரிகிறதாம் இந்த புராஜக்ட் குறித்து.
சீமான் விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் இந்த படத்தை பற்றிய அதிகாரபூர்வமாக Vijayசெய்திகள் வரவில்லை. ஆனால் அதற்குள் படப்பிடிப்பே துவங்கிய மாதிரி பரபரத்தன மீடியாக்கள். நாங்கள் இருவரும் இணைந்து ஒரு படம் பண்றோம். இப்போதைக்கு அவ்வளவுதான் என்று நறுக்கு தெறித்தார் போல ஒருமுறை கூறியிருந்தார் விஜய்யும். ஆனால் அது செயலாக்கம் பெறுவதில் சிக்கலை ஏற்படுத்தி வருவதே அவர்தான் என்கிற அளவுக்கு முணுமுணுப்புகள் எழுந்தன திரையுலகத்தில்.
பலமுறை இப்படத்தின் கதையிலும், வசனங்களிலும் திருத்தம் செய்து விஜய்யிடம் உடனுக்குடன் காண்பித்துக் கொண்டிருந்தார் சீமானும். கடைசியாக மனம் நிரம்பிவிட்டது போலும்.
அக்டோபர் 2 ந் தேதியிலிருந்து கால்ஷீட் தருவதாக வாக்குறுதி கொடுத்திருக்கிறாராம் விஜய். அறுபது நாட்கள் ஒரே நேரத்தில் கால்ஷீட் தருவதாகவும் கூறியிருக்கிறாராம்.
நரியோ, நந்தியோ குறுக்கே வராமலிருக்கணும்!

No comments:

Post a Comment