Tuesday, July 26, 2011

ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து போட மாட்டேன் என விஜய் மறுப்பு


விடுதலை சிறுத்தைகள் சார்பாக நாடுமுழுவதும் ராஜபக்சேவுக்கு எதிராக கையெழுத்து வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இனப்படுகொலை குற்றவாளி என்று அவரை Vijayஅறிவிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த கையெழுத்து வேட்டை கல்லு£ரி மாணவர்கள், வியாபாரிகள் என்று அனைத்து தரப்பு மக்களிடமும் தேடிச்சென்று வாங்கப்படுகிறது.
கறிவேப்பிலை வியாபாரமாக இருந்தாலும் அதில் ஒரு வேப்பிலை நடிகர் நடிகைகளாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற கூட்டத்தில் திருமா குரூப்பும் சேர்ந்திருக்கிறது போலும். நண்பன் படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய்யை சந்தித்து கையெழுத்து கேட்டாராம் அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னியரசு.
என்ன ஏது என்று விசாரித்த விஜய், நான் இதிலெல்லாம் கையெழுத்து போட முடியாது என்று ஒதுங்கிக் கொண்டாராம். விஷயம் அவரது அப்பா எஸ்.ஏ.சி யின் கவனத்திற்கு போனது. அவர் வன்னியரசிடம், இப்படி ஒரு கையெழுத்து வாங்குற திட்டம் இருந்தால், நாங்களே எங்கள் இயக்கம் சார்பாக வாங்கிக் கொள்வோம். நீங்க கிளம்புங்க என்று கூறி விட்டாராம்.
இதேபோல ஒரு கையெழுத்து வேட்டையின் போதுதான் அரண்டு மிரண்டு ஓடினார் நடிகர் ஜீவா. இப்போது விஜய்.

No comments:

Post a Comment